என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை அருகே 2¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • கஞ்சா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சமூக விரோதிகள் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து போதிய பலனில்லை. கஞ்சா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் திருமங்கலம் மது விலக்கு தடுப்பு போலீசார் நேற்று உசிலம்பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அணைப்பட்டி அருகே உள்ள கல்யாணிபட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த மூர்த்தி(26), கல்லூத்தை சேர்ந்த பெருமாள்(52) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட் போது 1 கிலோ 150 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிதல் செய்த போலீசார் மூர்த்தி,பெருமாளை கைது செய்தனர்.

    இதேபோல் உசிலம்பட்டி அருகே உள்ள கீரிபட்டியை சேர்ந்த செல்லபாண்டி(45) என்பவர் வீட்டில் சோதனையிட்ட போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மதுவிலக்கு போலீசார் அதனை பறிமுதல் செய்து செல்லபாண்டியை கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய ஒரு பிரிவினர் இந்த கோவிலில் எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.
    • பட்டியல் வகுப்பைச் சார்ந்த எங்களை கோவிலில் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில், மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனை குலதெய்வ கோவிலாகக் கொண்டுள்ள நாங்கள் வழிவழியாக வழிபட்டு வருகின்றோம்.

    இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய ஒரு பிரிவினர் இந்த கோவிலில் எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும் அந்த கோவிலை உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும்.

    எனவே இந்த வருடம் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபாடு செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே பட்டியல் வகுப்பைச் சார்ந்த எங்களை கோவிலில் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

    இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், கோவில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் சமமாக ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு நடத்துவதை மாவட்ட நிர்வாகம், காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எல்லையோர மாவட்டங்களில் உள்ள இந்த வழித்தடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டுகிறது.
    • கடந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    மதுரை:

    தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சிதம்பரம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகள் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொட்டப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது அப்போதைய நெல்லை மாவட்ட கலெக்டர் சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    அதில் நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் சுகாதாரத்துறை, காவல்துறை, போக்குவரத்து துறையின் அலுவலர்களை இணைத்து மருத்துவ கழிவுகள் மேலாண்மை குழு அமைக்கப்பட்டு மருத்துவ கழிவுகள் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்குள் நுழையாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டு இருந்தது.

    இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. ஆனால் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவ கழிவுகளை தென்காசி மாவட்ட எல்லைகளில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, மாநில எல்லையோர மக்களுக்கு பல்வேறு அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. எனவே கேரள மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதி பதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறையின் முதன்மை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி பிற பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.எல்லையோர மாவட்டங்களில் உள்ள இந்த வழித்தடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டுகிறது.

    கடந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அங்கு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என கூறப்பட்டிருந்தது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

    • திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது.
    • சரவணன், கவுதம் ஆகிய இருவரும் தடுப்பை தாண்டி ரோட்டின் எதிர்புறம் தூக்கி வீசப்பட்டனர்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் படப்படி தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் சரவணன் (வயது 24). அதே பகுதியை சேர்ந்த தயாளன் என்பவரது மகன் கவுதம் (24). இவர்கள் இருவரும் கொத்தனாராக வேலை பார்த்து வந்தனர்.

    நண்பர்களான இவர்கள் நேற்று நள்ளிரவு திருப்பரங்குன்றத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருநகருக்கு சென்றனர். அவர்கள் திருப்பரங்குன்றம் வெயிலுகந்தம்மன் கோவில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது.

    இதில் சரவணன், கவுதம் ஆகிய இருவரும் தடுப்பை தாண்டி ரோட்டின் எதிர்புறம் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அந்த நேரத்தில் சிவகாசியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் தூக்கி வீசப்பட்டு கீழே கிடந்த 2 பேர் மீதும் ஏறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சரவணன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் இறந்து விட்டார்.

    பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜபாண்டி அடிதடி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • ராஜபாண்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை:

    மதுரை கரிமேடு பொன்னகரம் தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி என்பவரின் மகன் ராஜபாண்டி (வயது24). இவர் அதே பகுதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    ராஜபாண்டி அடிதடி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவர் மீது சில வழக்குகளும் உள்ளன. நேற்றிரவு அவர் தனது நண்பர்களான வெங்கடேஷ் என்கிற மொச்சை, பிரசன்னா ஆகிய இருவருடன் தங்களது பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் அமர்ந்து மது குடித்தார்.

    அப்போது பிரசன்னா மேலபென்னகரம் 4-வது தெருவை சேர்ந்த மனோஜ் சிவா (22) என்பவருக்கு போனில் பேசியுள்ளார். அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. அது தொடர்பாக பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    அப்போது மனோஜ்சிவா தகாத வார்த்தைகளால் பிரசன்னாவை திட்டியதாக தெரிகிறது. தன்னை திட்டியது குறித்து ராஜபாண்டியிடம் பிரசன்னா தெரிவித்தார். இதையடுத்து அவர், போனிலேயே மனோஜ் சிவாவுடன் தகராறு செய்துள்ளார். மேலும் தங்களை எதிர்த்தால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

    பின்பு சிறிது நேரத்தில் ராஜபாண்டி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பி சென்றார். அவரது நண்பர்கள் பிரசன்னா, வெங்கடேஷ் ஆகிய இருவரும் மதுகுடித்த இடத்திலேயே இருந்துள்ளனர்.

    அந்த நேரத்தில் அங்கு மனோஜ் சிவா உள்பட 6 பேர் அங்கு வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த ராஜபாண்டி நண்பர்கள் இருந்த இடத்திற்கு திரும்பி வந்தார். அப்போது மனோஜ் சிவா உள்ளிட்டோர் ராஜபாண்டியை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினர். அதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

    அவர் சுதாரித்து எழுவதற்கு முன் மனோஜ் சிவா உள்ளிட்ட 6 பேரும் உருட்டுக்கட்டை மற்றும் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கினர். அவர்களை பிரசன்னா மற்றும் வெங்கடேஷ் தடுத்தனர். இருந்த போதிலும் ஆத்திரம் தீராத மனோஜ் சிவா உள்ளிட்டோர் அங்கு கிடந்த பாறாங்கல்லை எடுத்து ராஜபாண்டியின் தலையில் போட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்து கொலையாளிகள் 6 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ராஜபாண்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கரிமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இத்ரிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ராஜபாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ராஜபாண்டி கொலை குறித்து சம்பவ இடத்தில் இருந்த அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மனோஜ்சிவா, செல்லூர் களத்து பொட்டல் பர்மா காலனி கிருஷ்ணகுமார் என்ற கிட்டு (26), பொன்னகரம் பிராட்வே தெரு ஸ்ரீ மணிகண்டன் (20), பொன்னகரம் லோகேஷ் (20), பெத்தானியாபுரம் தங்கபாண்டி (19), சிம்மக்கல் கண்ணன் (23) ஆகிய 6 பேரும் சேர்ந்து ராஜபாண்டியை அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மனோஜ் சிவா, ஸ்ரீமணிகண்டன், லோகேஷ், தங்கபாண்டி, கண்ணன் ஆகிய 5 பேரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள கிருஷ்ணகுமாரை தொடர்ந்து தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜபாண்டிக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அவர் தற்போது பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று மாலை போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
    • 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    மதுரை :

    திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகிறார்.

    2 நாள் பயணமாக வரும் முர்மு மதுரை, கோவை ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்திலும், அங்கிருந்து அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையிலும், கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    அவரது பயண விவரம் வருமாறு:-

    தமிழக சுற்றுப்பயணத்துக்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நாளை காலை 8.45 மணி அளவில் திரவுபதி முர்மு புறப்படுகிறார். மதுரை விமான நிலையத்துக்கு பகல் 11.45 மணி அளவில் வந்து சேருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அங்கிருந்து காரில் புறப்பட்டு, 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார். பூரண கும்ப மரியாதையுடன் கோவில் சார்பில் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்கிறார். சுமார் 1 மணி நேரம் கோவிலில் இருக்கிறார்.

    பின்னர் கோவிலில் இருந்து பிற்பகலில் மீண்டும் விமான நிலையம் புறப்படுகிறார். மதுைரயில் இருந்து விமானத்தில் கோவை செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை விமான நிலைய பணியாளர்களுக்கும், மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்களுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    கோவிலை பொறுத்தவரை அர்ச்சகர்கள், பூரண கும்ப மரியாதை அளிப்பவர்கள், மேள-தாளம் வாசிப்பவர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று காலை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இது தவிர பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது.

    முன்ஏற்பாடாக ஜனாதிபதி நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று நடக்க இருக்கிறது. பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் முதல் அனைவரும் இந்த ஒத்திகையில் ஈடுபட உள்ளனர்.

    இதற்காக காலை 11.45 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து ஒத்திகை வாகன அணிவகுப்பு தொடங்குகிறது. வரும் வழித்தடத்தில் சற்று நேரம் போக்குவரத்தை நிறுத்தி இந்த ஒத்திக்கை பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை நகரம் உச்சக்கட்ட பாதுகாப்பில் இருந்து வருகிறது.

    கோவை ஈஷா யோகா மையத்தில், மகா சிவராத்திரி விழா நாளை (சனிக்கிழமை) மாலை, 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடக்கிறது. அங்கு ஆதியோகி சிலை மற்றும் தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.

    விழாவில், தலைமை விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார். இதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு மதுரையில் இருந்து நாளை மாலை தனிவிமானத்தில் புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 3.30 மணிக்கு வருகிறார்.

    அங்கிருந்து அவர், கார் மூலம் தொண்டாமுத்தூர் சாலை வழியாக ஈஷா யோகா மையத்துக்கு மாலை 6 மணிக்கு செல்கிறார். அன்று இரவு, மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரவு 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து அங்கு தங்குகிறார்.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

    இந்த நிகழ்ச்சி குறித்து வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் கூறும்போது, வெலிங்டன் ராணுவ மையத்தில் ஜனாதிபதி முர்மு கலந்து கொண்டு ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். மேலும் போரில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவுதூணில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சி காலை 10 மணிமுதல் 12 மணிவரை நடைபெறுகிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமானநிலையம் சென்று டெல்லி திரும்புகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர். ஜனாதிபதி செல்லும் பாதைகள் குறித்து திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) மாலை போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. ஜனாதிபதி வருகையையொட்டி ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஜனாதிபதி பாதுகாப்புக்கான சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் நேற்று கோவை வந்தார். அவர் ஜனாதிபதி செல்லும் அனைத்து வழிக ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவை அடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குருத்திகா ஆஜர்படுத்தப்பட்டார்.
    • குருத்திகா யாருடன் செல்ல உள்ளார் என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறேன். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்க்கிறேன்.

    இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்தவா் நவீன்பட்டேல், இவரது மகளான குருத்திகாபட்டேலும், நானும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டோம்.

    இதற்கு இடையில் தன்னுடைய மகளைக் காணவில்லை எனக் கூறி நவீன்பட்டேல் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தார். இதனையடுத்து ஜனவரி 4ம் தேதி நானும், எனது மனைவி குருத்திகா பட்டேலும் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானோம்.

    விசாரணையின் முடிவில் குருத்திகா பட்டேல், என்னுடன் செல்வதாகக் கூறியதையடுத்து நான் அவரை அழைத்து சென்றேன்.

    இந்நிலையில் கடந்த 14-ந் தேதியன்று எனது மனைவியுடன் தென்காசியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு வந்த நவீன்பட்டேல் மற்றும் அவரது மனைவி தா்மிஸ்தா பட்டேல் என்னுடன் தகராறில் ஈடுபட்டனா். இது குறித்து நான் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகாா் செய்தேன்.

    அந்த மனு மீதான விசாரணைக்காக ஜனவரி 25-ந் தேதி நானும், குருத்திகா பட்டேலும், தந்தை, சகோதரா் ஆகியோருடன் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினேன். ஆனால், நவீன்பட்டேல் மாலையில் போலீஸ் நிலையம் வருவதாகக் கூறி சென்றார்.

    இந்த நிலையில் நான் எனது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையம் சென்று மீண்டும் காரில் கொட்டாகுளத்திற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது நவீன்பட்டேல், தா்மிஸ்தா பட்டேல் உள்ளிட்டோா் என்னை தாக்கி குருத்திகா பட்டேலை கடத்தி சென்றனர். நான் இது குறித்து குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தேன். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஆனால், குருத்திகா பட்டேலை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் குருத்திகா பட்டேலை கடத்தி சென்றுவிட்டனர். எனவே, குருத்திகா பட்டேலை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், அரசு தரப்பில், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. சம்பந்தப்பட்ட குருத்திகா பட்டேல் அனுப்பினால் விசாரணை பாதிக்கும். மேலும் குருத்திகா பட்டேல் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர். அதனால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து குருத்திகா பட்டேலை அனுப்ப நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறட்டும். இது ஆட்கொணர்வு மனு. சம்பந்தப்பட்ட பெண் மேஜராக உள்ளார். எனவே சம்பந்தப்பட்ட பெண்ணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    இந்நிலையில், நீதிபதிகளின் உத்தரவை அடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குருத்திகா ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதைதொடர்ந்து, குருத்திகா பட்டேல் மேஜர் என்பதால் அவர் யாருடன் செல்ல வேண்டும் என்பது அவருடைய விருப்பம் என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், குருத்திகா யாருடன் செல்ல உள்ளார் என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், குருத்திகா கேரளாவில் உள்ள உறவினர் ஹரிஸ் உடன் செல்வதாக கடிதத்தில் மூலம் நீதிபதிகளிடம் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, குருத்திகா பட்டேல் கேரளாவில் உள்ள உறவினர் ஹரிஸ் பொறுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    பெற்றோரால் கடத்தப்பட்ட பெண்ணை ஆஜர்படுத்த கோரி காதல் கணவன் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    • மேலூர் தாலுகாவில் நெல் கிடங்கு பாதுகாப்பு மையம் அமைக்க உத்தரவிடக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
    • மனுவின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரை மாவட்டம் மேலூரில் பருவமழை பெய்ததால் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது அறுவடை பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் அறுவடை செய்யக்கூடிய நெல் மூட்டைகள் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்காக நெல் கிடங்கிகள், பாதுகாப்பு மையம் இல்லை.

    இதனால் விவசாயிகள் மிகுந்த உழைப்பை கொடுத்து விளைவித்த நெல் மணிகள் வெயிலிலும், மழையிலும் நனைந்து வீணாகி விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது.

    எனவே மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் நெல் கிடங்கு பாதுகாப்பு மையம் அமைக்க உத்தரவிடக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனது மனுவின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நெல் மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களில் மழையில் நனைந்து வீணாவதாக செய்திகள் வெளியாகின்றன. அந்த இடங்களில் எல்லாம் தற்போதைய நிலை என்ன என கேள்வி எழுப்பினர். மேலும் இதுகுறித்து அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    • கழிவறை தொட்டிக்குள் விழுந்து தவித்த இளம்பெண்ணை மீட்டனர்.
    • இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாலன் நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவர் தனது வீட்டில் கழிப்பறை மற்றும் குளியலறை தனித்தனியாக அருகருகே கட்டியுள்ளார். இதில் கழிவறை தொட்டியின் மேற்பகுதியிலேயே கழிவறை இருக்கும்படி கட்டியுள்ளனர்.

    இந்தநிலையில் இன்று காலை திருப்பதியின் 21 வயது மகள் கழிவறைக்குச் சென்றார். அப்போது திடீரென்று எதிர்பாராதமாக கழிவறை தளம் கோப்பையோடு இடிந்து விழுந்துள்ளது. இதனால் அவர் செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு பெற்றோர் வந்து பார்த்தனர். அப்போது கழிப்பறை தளம் இடிந்து செப்டிக் டேங்க் தொட்டிக்குள் மகள் விழுந்து கிடப்பது தெரியவந்தது.

    இதைக்கண்டு அதிர்ச்சி யடைந்த அவர்கள் உடனடியாக வாடிப்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி சதக் அப்துல்லா தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து தவித்த இளம் பெண்ணை மீட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வேளாண் மாணவிகள் நடத்திய கிராமப்புற மதிப்பீடு செய்தனர்.
    • மாணவிகள் விவசாயிகளிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் அலங்காநல்லூர் வட்டாரத்தில் தங்கி இருக்கும் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் ஆர்த்திகா, அபிநயா, அபிதா, அகல்யா, அம்பிகா, அனுரிதா, அஸ்வினி, ஆஷா, கிருஷ்ணவேணி ஆகியோர் பெரியஇலந்தைகுளம் கிராமத்திற்கு சென்று அங்குள்ள சுற்றுச்சூழல், கிராம மக்கள் மற்றும் விவசாய வளர்ச்சிகளைப் பற்றி ஆய்வு செய்தனர். கிராமத்தில் இருக்கும் அரசு அலுவலகங்கள், அதன் நிலைகள் குறித்து விவசாயிகள் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.

    மேலும் கிராம மக்கள் ஊரில் உள்ள விவசாய பிரச்சினைகளை மாணவிகளிடம் கூறினர். இங்கு நெல், தென்னை மற்றும் மல்லிகை, ரோஜா ஆகியவை பயிரிடப்படுகிறது. அதற்கான விலை கிடைப்பதில்லை. நோய்கள் மற்றும் பூச்சிகளால் பாதிப்பு ஏற்படுகிறது என்று கிராம மக்கள் கூறினர். இவற்றில் இருந்து எவ்வாறு பயிர்களை பாதுகாக்க வேண்டும் என்று மாணவிகள் விவசாயிகளிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    • தமிழர் தேசம் கட்சியின் பொறுப்பாளர் அறிமுக விழா நடக்கிறது.
    • மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் செய்திருந்தார்.

    மதுரை

    மதுரையில் தமிழர் தேசம் கட்சியின் தென்மாவட்ட பொறுப்பாளர் அறிமுக விழா நடக்கிறது. ஆலாத் தூரில் உள்ள கணேஷ் மகாலில் மாலை 4 மணிக்கு நடக்கும் விழாவில் கட்சியின் நிறுவனரும், தலைவருமான கே.கே. செல்வகுமார் கலந்து கொண்டு தென்மாவட்ட பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரை யாற்றுகிறார்.

    மாநில பொதுச் செய லாளர் தளவாய் ராஜேஷ், தலைமை ஒருங்கிணைப் பாளர் குரு மணிகண்டன் உள்பட தலைமை நிர்வாகி கள் பேசுகிறார்கள்

    இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு மாவட்ட பொறுப் பாளர்கள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கலந்து கொள்கின்ற னர்.

    தமிழர் தேசம் கட்சியின் தென் மாவட்ட பொறுப் பாளர் அறிமுக விழா விற்கான ஏற்பாடுகளை மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் செய்திருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு தரப்பில், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
    • சம்பந்தப்பட்ட பெண்ணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

    மதுரை:

    தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறேன். சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்க்கிறேன்.

    இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்தவா் நவீன்பட்டேல், இவரது மகளான குருத்திகாபட்டேலும், நானும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். இதற்கு இடையில் தன்னுடைய மகளைக் காணவில்லை எனக் கூறி நவீன்பட்டேல் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தார்.

    இதனையடுத்து ஜனவரி 4-ந் தேதி நானும், எனது மனைவி குருத்திகாபட்டேலும் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானோம். விசாரணையின் முடிவில் குருத்திகா பட்டேல், என்னுடன் செல்வதாகக் கூறியதையடுத்து நான் அவரை அழைத்து சென்றேன்.

    இந்நிலையில் கடந்த 14-ந் தேதியன்று எனது மனைவியுடன் தென்காசியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு வந்த நவீன்பட்டேல் மற்றும் அவரது மனைவி தா்மிஸ்தா பட்டேல் என்னுடன் தகராறில் ஈடுபட்டனா்.

    இது குறித்து நான் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகாா் செய்தேன். அந்த மனு மீதான விசாரணைக்காக ஜனவரி 25-ந் தேதி நானும், குருத்திகாபட்டேலும், தந்தை, சகோதரா் ஆகியோருடன் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினேன். ஆனால், நவீன்பட்டேல் மாலையில் போலீஸ் நிலையம் வருவதாகக் கூறி சென்றார்.

    இந்த நிலையில் நான் எனது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையம் சென்று மீண்டும் காரில் கொட்டாகுளத்திற்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது நவீன்பட்டேல், தா்மிஸ்தா பட்டேல் உள்ளிட்டோா் என்னை தாக்கி குருத்திகா பட்டேலை கடத்தி சென்றனர்.

    நான் இது குறித்து குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தேன். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், குருத்திகா பட்டேலை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் குருத்திகா பட்டேலை கடத்தி சென்றுவிட்டனர். எனவே, குருத்திகா பட்டேலை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், அரசு தரப்பில், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. சம்பந்தப்பட்ட குருத்திகா பட்டேல் அனுப்பினால் விசாரணை பாதிக்கும். மேலும் குருத்திகா பட்டேல் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர். அதனால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து குருத்திகா பட்டேலை அனுப்ப நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் குருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறட்டும். இது ஆட்கொணர்வு மனு. சம்பந்தப்பட்ட பெண் மேஜராக உள்ளார். எனவே சம்பந்தப்பட்ட பெண்ணை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

    ×