என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கோவில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக்கூடாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
- கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய ஒரு பிரிவினர் இந்த கோவிலில் எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.
- பட்டியல் வகுப்பைச் சார்ந்த எங்களை கோவிலில் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில், மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனை குலதெய்வ கோவிலாகக் கொண்டுள்ள நாங்கள் வழிவழியாக வழிபட்டு வருகின்றோம்.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய ஒரு பிரிவினர் இந்த கோவிலில் எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும் அந்த கோவிலை உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும்.
எனவே இந்த வருடம் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபாடு செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே பட்டியல் வகுப்பைச் சார்ந்த எங்களை கோவிலில் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், கோவில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் சமமாக ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு நடத்துவதை மாவட்ட நிர்வாகம், காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்