என் மலர்
மதுரை
- மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.
- வளையம் போன்ற ஆபரணம் வரையப்பட்டுள்ளது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டி கிராமத்தில் பெருங்கற்கா லத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக் கப்பட்டது.
டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டணிபட்டி கிராமத்தை சேர்ந்த பண்டியன் என்பவர் தன் வீட்டிற்கு கழிவுநீர் தொட்டி கட்டுவதற்கு குழி தோண்டிய போது பெரிய பாணை இருப்பதாக அவ்வூரே சேர்ந்த கணேசன் என்பவர் தகவலின்படி சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூ ரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும், மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையம் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து முனீஸ்வரன், ஆய்வாளர் அனந்தகுமரன் ஆய்வு செய்த போது பெருங் கற்காலத்தை சேர்ந்த முது மக்கள் தாழி கண்டறி யப்பட்டது.
உடனடியாக கிராம நிர்வாக அதிகாரி அய்யனார் பாண்டியராஜ் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு நேரடியாக களத்திற்கு வந்து அவர் முதுமக்கள் தாழி கைப்பற்றி கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் கூறியதாவது:-
இன்றைய தமிழ் சமூகத்தில் இறப்பு சடங்கு முறைக்கு அதிக முக்கியத்து வம் கொடுக்கப்பட்டு வருகின்றோம். குறிப்பாக பெருங்கற்கால ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே மலைப்பகுதி களிலும் காட்டுப் பகுதி களிலும் போட்டு விடுவார்கள். அதை நாய், நரி, கழுகு, பறவைகள், மிருகங்கள் இரையாக உண்டப்பின்பு அங்கு கிடக்கும் எலும்புகளை சேகரித்து அதோடு அவர்கள் பயன்படுத்திய மண்பானைகள், தானியங்களையும் உள்ளே வைத்து மூடி வீ வடிவ குழியில் வைத்து அடக்கம் செய்துள்ளனர்.
பிற்காலத்தில் தான் மனிதன் இறந்த பிறகு உடலை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய்து அவர்கள் நினைவாக புதைத்த முதுமக்கள் தாழியை சுற்றி கல் அடுக்குகள் வைத்துப் பாதுகாத்துள்ளனர்கள்.
முதுமக்கள் தாழி பொதுவாக தாய் தெய்வம் போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக தாய் குறியீடு என்பது மனிதன் இறந்த பின் மீண்டும் தாயின் கருவறைக்குள் சென்று பிறக்கிறான் என ஆதிமனிதன் நம்பினார்கள்.ஆகவே தாழியின் நடுவில் அகன்று கருவுற்ற தாயின் வயிற்றை போன்ற அமைக்கப்பட்டிருக்கிறது.
நல்லமரம் கிராமத்தில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி மேற்குப்பகுதியில் உடைந்த நிலையில் கிட்டத்தட்ட 7 அடி அழம் குழித் தோண்டும் போது கண்டறியப்பட்டது.முதுமக்கள் தாழியின் கழுத்துப்பகுதியில் வளையம் போன்ற ஆப ரணம் வரையப்பட்டுள்ளது.
குறிப்பாக முதுமக்கள் தாழியின் உயரம் 2.5 அடி, அகலம் 1.5 அடி , சுற்றளவு 6.1 அடி, விட்டம் 1.5 அடி கொண்டதாகும் .இதன் உள்ளே கருப்பு சிவப்பு நிறத்தில் மெல்லிய தடித்த பானைகள் ஓடுகள், உடைந்து நிலையில் உள்ளது. இவைபானை மேல்பகுதி மெல்லிய பானையால் மூடப்பட்டிருக்கலாம்.
முதுமக்கள் தாழியின் உட்பகுதியில் மனிதனின் மண்டை ஓடு மேல்பகுதி, கை கால் எலும்புகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன. இப்பகுதியில் பெருங்கற்கால பண்பாடு முறை இருந்தற்கான சான்றாக கண்டறியப்பட் முதுமக்கள் தாழி காணப்படுகின்றது. தற்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக இருக்கின்ற பழமையான முதுமக்கள் தாழியை முறையாக ஆய்வுக்குட்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.
- மதுரையில் தனியார் நிறுவன அதிகாரி மயங்கி விழுந்து இறந்தார்.
- நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை.
மதுரை
மதுரை பொன்மேனி முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் திருநாவுக்கரசு (வயது 30). மாற்றுத்திறனாளியான இவர் காளவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு நிதி நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
அவர் பணியில் இருந்த போது பாத்ரூம் சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதை தொடர்ந்து சந்தேகமடைந்த ஊழியர்கள் பாத்ரூமின் கதவை உடைத்து பார்த்தனர். அங்கு திருநாவுக்கரசு ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தார். ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நிதநிறுவன துணை மேலாளர் திருநாவுக்கரசின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை தெப்பக்குளம் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடு சில நாட்களாக பூட்டிக்கிடப்பதாக தெரிவித்தனர்.
மதுரை
மதுரை தெப்பக்குளம் வெங்கடபதி ஐயங்கார் தெருவை சேர்ந்தவர் நாகூர் கனி (வயது 32). இவர் மிட்டாய் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பிரேமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துவிட்டு சென்ற நாகூர் கனி அதன் பின்னர் மீண்டும் குழந்தையை பார்க்க வரவில்லை. பிரேமா ஆஸ்பத்திரியில் இருந்து தாய் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து கணவர் வராமல் இருந்ததால் பிரேமாவுக்கு சந்தேகம் வந்தது. அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது. இதையடுத்து அருகில் வசிப்பவர்களிடம் பிரேமா விசாரித்தார். அப்போது கணவரின் வீடு சில நாட்களாக பூட்டிக்கிடப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அதிகமான நிலையில் கணவரின் வீட்டுக்கு சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு நாகூர் கனி தூங்கிய நிலையிலேயே இறந்து கிடந்தார்.
இது குறித்து தெப்பக் குளம் போலீசில் பிரேமா புகார் செய்தார். போலீசார் நாகூர் கனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நாகூர் கனி எப்படி இறந்தார்? அவர் சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 14-ந் தேதி முதலே பலருக்கும் வங்கி கணக்கில் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டது.
- மகளிர் உரிமை தொகை கிடைக்காத ஏமாற்றத்தில் இருந்த பெண்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
மதுரை:
கடந்த 2021-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு உடனடியாக பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக வெளியிட்டார். அதைத் தொடர்ந்து மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் எப்போது அமலுக்கு வரும் என ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதற்காக சுமார் 1.5 கோடி பெண்கள் விண்ணப் பம் செய்திருந்தனர். இதில் 50 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சுமார் 1 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம் ரூ.1000 கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 14-ந் தேதி முதலே பலருக்கும் வங்கி கணக்கில் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை வங்கி கணக்கில் கிடைக்காத பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் தொடர்ச்சியாக கணக்கில் பணம் வந்து விட்டதா? என பார்த்துக் கொண்டிருந்தனர். ஏ.டி.எம். மையங்களிலும் சென்று பார்த்தனர். பணம் கிடைக்கவில்லை என்றதும் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தங்கள் பகுதியில் யாருக்கெல்லாம் கிடைத்திருக்கிறது, யாருக்கு கிடைக்கவில்லை என தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்தனர். தங்களுக்கு கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? யாரை அணுக வேண்டும் என விசாரித்தபடி இருந்தனர்.
அப்போது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அது தொடர்பான குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும், அதில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் கூறப்பட்டிருக்கும் என்றும், அதனை சரி செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இதற்காக பல்வேறு இடங்களில் உதவி மையங்களும் தொடங்கப்பட்டன. ஆனால் விண்ணப்பத்தின் நிலை குறித்து பலருக்கும் குறுஞ்செய்தி கிடைக்க வில்லை. இதனால் அவர்கள் குழப்பமடைந்தனர். அதனால் உதவி மையங்களை நாட தொடங்கினர்.
இதற்கிடையே வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் பணம் கணக்கில் இருக்க வேண்டிய தொகைக்காக பிடித்தம் செய்து கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து வங்கி கணக்கில் செலுத்தப்படும் உரிமைத் தொகையை பிடித்தம் செய்யக் கூடாது என தமிழக அரசு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.
மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்வதற்காகவும், விவரங்களை தெரிந்து கொள்வதற்காகவும் பிரத்யேக இணைய தளத்தை தமிழக அரசு அறிமுகப் படுத்தியது. ஆனால் உரிமை தொகை கிடைக்காதவர்கள் இணையதளத்தை ஆக்கிரமித்தனர். லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் இணைய பக்கத்தை பார்க்க முயற்சித்ததால் விண்ணப்பத்தின் நிலையை அறியும் இணையபக்கம் முடங்கியது. இதையடுத்து விரைவில் சீரமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக இணைய பக்கமும் முடங்கிய நிலையிலேயே இருந்தது.
மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள், ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களும் மீண்டும் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து தாசில்தார் அலுவலகங்களில் பெண்கள் குவிந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக சத்தமே இல்லாமல் பல பெண்களுக்கு தபால் துறை மூலம் மணி ஆர்டரில் வீடு தேடி சென்று போஸ்ட்மேன்கள் மகளிர் உரிமை தொகையை கொடுத்து வருகின்றனர்.
இதனால் மகளிர் உரிமை தொகை கிடைக்காத ஏமாற்றத்தில் இருந்த பெண்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவலை உடனடியாக பலருக்கும் பகிர்ந்து தபால்காரரிடம் கேட்கும் படி கூறினர்.
மகளிர் உரிமை தொகைக்காக கொடுத்த வங்கி, ஆதார் விவரங்களில் தவறு இருந்தால் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த முடியாது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக தமிழக அரசு மணி ஆர்டரில் மகளிர் உரிமை தொகை கிடைக்கச் செய்துள்ளது.
விண்ணப்பத்தில் விவரங்களை சரியாக கொடுக்காதவர்களுக்கு காரணம் காட்டி நிறுத்தி வைக்காமல் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பி வைத்த தமிழக அரசின் நடவடிக்கையை பெண்கள் பாராட்டுகின்றனர்.
- தீ விபத்து சம்பவம் தொடர்பாக வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயை கட்டுப்படுத்த முடியாததால் தல்லாகுளம், தீயணைப்பு வீரர்களும் வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மதுரை:
மதுரை ரெயில் நிலையம் எதிரே மேலவெளி வீதியில் பாரத் ஸ்டேட் வங்கி உள்ளது. பிரதான வங்கியான இங்கு வேலை நாட்களில் கூட்டம் அலைமோதும். இந்த கட்டிடத்தில் உள்ள தளங்களில் வங்கியின் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் 5-க்கும் மேற்பட்ட காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென வங்கியின் உள்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதனை தொடர்ந்து வங்கியில் உள்ள எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள், அப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து பார்த்த போது வங்கியின் 2-வது தளத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து வங்கி நிர்வாகத்திற்கும், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திடீர் நகர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கட்டிடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தீயை கட்டுப்படுத்த முடியாததால் தல்லாகுளம், தீயணைப்பு வீரர்களும் வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னா் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் வங்கியில் இருந்த 2-வது தளத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப், முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. மேலும் ஏ.சி., மரச்சாமான்கள் எரிந்து நாசமாகின.
தீ விபத்து சம்பவம் தொடர்பாக வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்து நடந்த ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையாகும். இங்கு மாவட்டத்தில் உள்ள இதர கிளைகளில் இருந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் டெபாசிட் தொகை இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. நேற்று நடந்த தீ விபத்து அதிர்ஷ்டவசமாக பணம் வைக்கப்பட்டிருந்த தளத்தில் தீ பரவவில்லை. இதனால் வங்கி பணம் தப்பியது.
- பெட்கிராட் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி வழங்கப்பட்டது.
- இந்த கணினி பயிற்சி 45 நாட்கள் நடக்கிறது.
மதுரை
மதுரை பெட்கிராபட் ஜி.எச்.சி.எல். இணைந்து மணப்பாறை கஸ்பா பொய்கைபட்டியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் லவச கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமை தாங்கினார்.
ஜி.எச்.சி.எல். அலுவலர் சுஜின் முன்னிலை வகித்தார். தலைமை நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசுகை யில், டெக்ஸ் டைல்ஸ் வர்த்த கத்தில் லாபத்தில் ஒரு பகுதியை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கி பள்ளி மாணவர்களுக்கு கணினி பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறோம். ஆர்வமுள்ளவர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்பது மட்டுமே எங்களது நோக்கமாகும்.
இந்த பள்ளிக்கு இன்னும் பல்வேறு உதவிகளை செய்து தர உள்ளோம் என்றார். நிகழ்ச்சியில் மனித வள தலைமை அலுவலர் தமிழ்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் ரோசிலின் சகாயமேரி, தலைமை ஆசிரியை லதா, உதவி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர், பெட்கிராட் பொது செயலாளர் அங்குசாமி, துணை தலைவர் மார்டின் லூதர்கிங், பயிற்சியாளர் கண்ணன், பொருளாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கணினி பயிற்சி 45 நாட்கள் நடக்கிறது.
தினமும் மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை நடக்கிறது. இதில் கணினி பயற்சிகள், டைப்பிங், எம்.எஸ்.ஆபிஸ் மற்றும் மேற்படிப்பு முதலியவை கற்று கொடுக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- நவீன சலவையகங்கள், ரெடிமேட் தொழிலகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.
- பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மதுரை
மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 10 நபர்களைக் கொண்ட குழுவாக சேர்ந்து நவீன சலவையகங்கள், ரெடிமேட் ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப் படுகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளி களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பதிவு பெற்ற குழுக்கள் பூர்த்தி செய்த விண்ணப் பங்களை வருகிற 30-ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருமங்கலம் அருகே நேற்று இரவு கொட்டித்தீர்த்த மழையால் தரைப்பாலம் மூழ்கியது.
- வயல்களில் மழைநீர் வடியும் பணிகளை இன்று காலை முதல் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரு மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக டி.புதுப்பட்டி, சவுடார்பட்டி, கிழவனேரி, வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் ஓடியது.
டி.புதுப்பட்டி கிராமத்தி லிருந்து கோபாலபுரம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. அப்போது கள்ளிக்குடி அருகேயுள்ள வில்லூரினை சேர்ந்த மின்வாரிய ஊழியர் சக்திவேல் டூவிலரில் கோபாலபுரம் நோக்கி சென்றார். நடுபாலத்தில் சென்ற போது திடீரென மழைநீர் பாலத்தினை மூழ்க அடித்ததால் டூவிலருடன் தண்ணீரில் விழுந்து அலறினார்.
தண்ணீரில் மூழ்காமல் இருக்க அருகேயிருந்த கருவேலமரத்தினை பிடித்து மிதந்தார். இதனை கண்ட கிராமமக்கள் திருமங்கலம் தீயணைப்புநிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு படையினர் வருவதற்குள் தண்ணீரின் வேகம் அதிகரிக்கவே கிராமமக்கள் கயிறு மூலமாக மின்வாரிய ஊழியர் சக்திவேலுவை மீட்டனர். இருப்பினும் அவரது டூவிலர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத் திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மேற்படி பாலத்தின் வழியாக யாரும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தினர் .
இதே போல் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழைநீர் வயல்வெளிகளில் புகுந்த தால் விவசாயிகள் கவலை அடைந்தனர். வயல்களில் மழைநீர் வடியும் பணிகளை இன்று காலை முதல் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கோபாலபுரம் பகுதியில் கவுண்ட நதி குண்டாறு தூர்வாரப்படாத தால் மழை வெள்ளம் தரைப் பாலத்தின் மேல் சென்றதாகவும் ஆதலால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இப்பகுதியில் தூர்வார வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
- அன்னை பாத்திமா கல்லூரியில் தேசிய மருத்துவ கருத்தரங்கு நடந்தது.
- பேராசிரியர் சவுபியா பானு நன்றியுரை ஆற்றினார்.
திருமங்கலம்
வருடந்தோறும் செப்டம் பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடித்து வருவதை முன்னிட்டு திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின்படி ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறையின் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஒரு நாள் ஹெல்த் பெஸ்ட்-2023 என்ற கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் கரு த்தரங்கை தொடங்கி வைத்து உடல்நலம், உணவு பழக்கம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியர் கீதாஞ்சலி மாணவிகளுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை உணவு பழக்க வழக்கத்தின் மூலம் எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி விளக்கி கூறினார். மேலும் பல்வேறு பழங்களில் உள்ள சத்துக்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
முன்னதாக பேராசிரியர் பொன்மயில் வரவேற்றார். இக்கருத்தரங்க நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மதுரை லேடி டோக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பல போட்டிகளில் வெற்றி பெற்ற ஒட்டுமொத்த சாம்பி யன் சுழற்கோப்பையையும், கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி மாணவிகள் 2-ம் பரிசுக்கான சுழற்கோப்பை யையும் வென்றனர்.
மாலையில் நடந்த இறுதி அமர்வில் நிர்வாகவியல் பேராசிரியர் நாசர் வாழ்த்துரை வழங்கினார். ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறை தலைவர் சுபஸ்ரீ கருத்தரங்க அறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறை தலைவர் சுபஸ்ரீ தலைமையில் பிரியா, நேயா, ஸ்ருதி, சமீரா, மர்ஷியா, அர்ச்சனா, சிம்சன், பரத், பிரியதர்ஷன், ஹரி கிருஷ்ணா, கலையரசி, சுமித்ரா ஆகிய மாணவ-மாணவிகள் செய்தனர்.
பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பேராசிரியர் சவுபியா பானு நன்றியுரை ஆற்றினார்.
- தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் நடந்தது.
- இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை
தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச கருத்த ரித்தல் பரிசோதனை முகாம் உசிலம்பட்டியில் வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது.
முகாமில், தொடர்ச்சி யாக கருசிதைவால் பாதிக்கப்பட்டவர்கள், திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள், விந்தணு குறைபாடு உள்ள வர்கள், கர்ப்பப்பையில் நீர்கட்டி உள்ளவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.
மேலும் ஆண், பெண்க ளுக்கான குழந்தையின்மை பிரச்சனைகள், கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள், கர்ப்பப்பையில் விந்தணு உட்செலுத்தும் முறை, செயற்கை கருத்தரித்தல், ஹார்மோன் சிகிச்சைகள், விந்தணுவை விதைப்பை யில் இருந்து பிரித்தெடுத்தல், விந்தணு கருமுட்டை மற்றும் கருவை தானமாக பெறுதல், விந்தணு கருமுட்டை மற்றும் கரு உறைநிலைப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சி னைகளுக்கு முகாமில் இலவச ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)உசிலம்பட்டி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சரஸ்வதி மஹாலிலும்,
25-ந் தேதி திங்கட்கிழமை தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையிலும் கருத்தரித்தல் முகாம் நடக்கிறது.
முகாமில் பங்கேற்ப வர்களுக்கு பத்தாயிரம் மதிப்புள்ள மருத்துவ பரிசோதனைகள் இலவச மாக செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்க 89258-01358 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்யலாம். இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ரெயில்வே கேட் அருகே பிரகாஷ் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்திருந்தார்.
- வல்லரசு தரப்பினர் கும்பலாக அமர்ந்திருந்த பிரகாஷ் தரப்பினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான், காடுபட்டி, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக விரோத செயல்களால் அதற்கேற்றவாறு குற்ற சம்பவங்களும் பெருகி வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் அச்சத்துடனேயே கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக கஞ்சா விற்பனை செய்யும் கும்பலின் அட்டகாசம் தலைதூக்கியுள்ளது.
இதில் சோழவந்தான் அருகேயுள்ள நாச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 27). திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு (28). இவர்கள் இருவரும் கஞ்சா விற்பனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட்டாளிகளாக இருந்துள்ளனர்.
பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் பிரிந்தனர். இதனிடையே வெளியூர் நபர்களும் அந்த பகுதிக்கு வந்து கஞ்சா விற்பனையை தொடங்கினர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து இந்த கும்பல் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது. அவர்களுக்கு பிரகாசின் பழைய கூட்டாளி வல்லரசு ஆதரவாக இருந்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட நாச்சிகுளத்தை சேர்ந்த பிரகாஷ் அவர்களிடம் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதைப்பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தகராறை விலக்கிவிட்டு கலைந்து போக செய்தனர். இருந்தபோதிலும் அந்த பகுதி பதட்டமாகவே காணப்பட்டது.
இதற்கிடையே நாச்சிகுளத்தை அடுத்த சாலாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே பிரகாஷ் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வல்லரசு தரப்பினர் கும்பலாக அமர்ந்திருந்த பிரகாஷ் தரப்பினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இதில் பிரகாஷ் உள்ளிட்ட சிலர் தப்பித்து விட்டனர். மாட்டிக் கொண்ட மதுரையைச் சேர்ந்த மார்க்கண்டேயனை வல்லரசு தரப்பை சேர்ந்தவர்கள் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு சென்றனர். இது தொடர்பாக சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீச்சு, அரிவாள் வெட்டில் ஈடுபட்ட 12, 13, 14 வயதுள்ள சிறுவர்கள் மற்றும் நாச்சிகுளம் பிரதாப் (25), டேவிட் (27) உள்பட 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதே போன்று விக்கிரமங்கலம் பகுதிகளிலும் கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தொடர்ச்சியாக இந்த பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதும், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சாசப்ளை செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கஞ்சா விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் மோதல்கள் தொடர்பான பிரச்சினையில் தலையிட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கஞ்சா, மது போதையில் விக்கிரமங்கலம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்களை கம்பு, கட்டைகளால் சிறுவர்கள் தாக்கிய சம்பவம் சமூக வலை தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் சிறப்பாக செய்திருந்தார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு டி.குன்னத்தூர் பகுதியில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரண்டு வந்து மேளதாளங்கள் முழங்கிட எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தனர்.
திருமங்கலம்:
மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், மாவட்டச் செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் ஏற்பாட்டின் பேரில் திருமங்கலம் அருகே முத்தப்பன்பட்டியிலுள்ள சேடபட்டியார் திடலில் முன்னாள் சபாநாயகர் சேடபட்டி இரா.முத்தையாவின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,500 பேருக்கு தலா ரூ.10ஆயிரம் பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் விழா இன்று நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்டச் செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இவ்விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பாளராக கலந்து கொண்டார்.
முதலில் அவர் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள சேடப்பட்டி முத்தையாவின் நினைவிடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,500 பேருக்கு பொற்கிழி வழங்கி கௌரவித்தார்.
முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு டி.குன்னத்தூர் பகுதியில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரண்டு வந்து மேளதாளங்கள் முழங்கிட எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தனர். அதே போன்று முத்தப்பன் பட்டியில் பிரமாண்ட பந்தல்கள், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் புகைப்பட காண்காட்சி, வழிநெடுகிலும் வரவேற்பு, வாகனங்களை நிறுத்தும் வசதிகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் சிறப்பாக செய்திருந்தார். முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிடும் விழாவையொட்டி முத்தப்பன்பட்டி பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.






