நவீன சலவையகங்கள், ரெடிமேட் தொழிலகம் அமைக்க நிதியுதவி

நவீன சலவையகங்கள், ரெடிமேட் தொழிலகம் அமைக்க ரூ.3 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
நவீன சலவையகங்கள், ரெடிமேட் தொழிலகம் அமைக்க நிதியுதவி
Published on

மதுரை

மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 10 நபர்களைக் கொண்ட குழுவாக சேர்ந்து நவீன சலவையகங்கள், ரெடிமேட் ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி அளிக்கப் படுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளி களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பதிவு பெற்ற குழுக்கள் பூர்த்தி செய்த விண்ணப் பங்களை வருகிற 30-ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com