search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த வாலிபர்
    X

    பூட்டிய வீட்டுக்குள் இறந்து கிடந்த வாலிபர்

    • மதுரை தெப்பக்குளம் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வீடு சில நாட்களாக பூட்டிக்கிடப்பதாக தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை தெப்பக்குளம் வெங்கடபதி ஐயங்கார் தெருவை சேர்ந்தவர் நாகூர் கனி (வயது 32). இவர் மிட்டாய் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பிரேமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துவிட்டு சென்ற நாகூர் கனி அதன் பின்னர் மீண்டும் குழந்தையை பார்க்க வரவில்லை. பிரேமா ஆஸ்பத்திரியில் இருந்து தாய் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து கணவர் வராமல் இருந்ததால் பிரேமாவுக்கு சந்தேகம் வந்தது. அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது. இதையடுத்து அருகில் வசிப்பவர்களிடம் பிரேமா விசாரித்தார். அப்போது கணவரின் வீடு சில நாட்களாக பூட்டிக்கிடப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அதிகமான நிலையில் கணவரின் வீட்டுக்கு சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு நாகூர் கனி தூங்கிய நிலையிலேயே இறந்து கிடந்தார்.

    இது குறித்து தெப்பக் குளம் போலீசில் பிரேமா புகார் செய்தார். போலீசார் நாகூர் கனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நாகூர் கனி எப்படி இறந்தார்? அவர் சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×