என் மலர்
கிருஷ்ணகிரி
- சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது.
- வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று மாலை திடீரென மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்து சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது.
பலத்த மழையின் காரணமாக ஓசூர் பஸ் நிலையம், பாகலூர் ரோடு சர்க்கிள், ஜி.ஆர்.டி. சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது. இந்த நிலையில், ஓசூர் ரெயில் நிலையம் அருகில், ரெயில்வே கீழ் பாதை மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகனங்களை இயக்கிச் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் நீண்ட நேரம், வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து இரவு முழுவதும் மழை, பரவலாக பெய்தது.இதையடுத்து, ஓசூரில் 20.2 மி.மீ அளவு மழை பதிவானது.
- அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் பேச்சுப் போட்டி நாளை நடைபெறுகிறது.
- பேரறிஞர் அண்ணாவின் தமிழ் தொண்டும் சமூக சீர்திருத்தமும் என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியல் கல்லூரிகளுக்கு நாளை கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
கட்டுரை போட்டிக்கான தலைப்பு அண்ணாவின் பொது வாழ்வும் தமிழும், பேச்சுப் போட்டிக்கான தலைப்பு பேரறிஞர் அண்ணாவின் தமிழ் தொண்டும் சமூக சீர்திருத்தமும் என்னும் தலைப்பில் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி அன்று பரிசளிப்புகள் வழங்கப்படும்.
இவ்வாறு கல்லூரி முதல்வர் தனபால் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- கிருஷ்ணகிரியில் வட்டார கல்வி அலுவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 1,052 பேர் எழுதினர்.
- தேர்வு மையத்தில் கலெக்டர் சரயு தலைமையில் அதிகாரிகள் மற்றும் பறக்கும்படையினர் மேற்பார்வையிட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் நேற்று வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வு, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மற்றும் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என மூன்று மையங்களில் நடந்தது.
இத்தேர்வினை எழுத மொத்தம் 1,226 பேர் ஆன்லைனில் விண்ணப் பித்திருந்தனர். நேற்று இத்தேர்வை ஆயிரத்து 52 பேர் எழுதினர். 174 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இத்தேர்வை கலெக்டர் சரயு தலைமையில் வருவாய்த்துறையினர், தொடக்கக் கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) சுகன்யா, மாவட்ட முதன் மையக் கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் பறக்கும்படையினர் மேற்பார்வையிட்டனர். இதையொட்டி மூன்று தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தேர்வர்களைத் தவிர மற்ற யாரும் தேர்வு மையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
- கிட்டம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டி கிராமத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் மற்றும் குண்டி மாரியம்மன் கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 8-ந் தேதி காலை மகா கணபதி ஹோமம், கோ பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், கங்க பூஜை, முதல்கால யாக பூஜை ஆகியவை நடந்தன.
நேற்று முன்தினம் 2-ம் கால யாக பூஜை, சுவாமி சிலைகள் நகர்வலம், மூன்றாம் கால யாக பூஜை, விமான கோபுரத்திற்கு கலசம் வைத்தல், தானியங்கள் நிரப்புதல் ஆகியவை நடந்தன.
நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, கடம்பு றப்பாடு, கலசம் கோவிலுக்கு வருதல் மற்றும் காலை 9.30 மணிக்கு மஹா சக்தி மாரியம்மன் மற்றும் குண்டி மாரியம்மன் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தன.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன.
இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவ ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.
- கிருஷ்ணகிரியில் தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
- பயிற்சி முகாமில் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டிய மரங்கள் நடுவதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கி ணைப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
இதில், மாவட்ட கல்வி அலுவலர் மணி மேகலை, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெங்க டேசன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், மிஷன் இயற்கை கல்வி அலுவலர் சுமிக்ஷா, பசுமைத் தோழர் பிருந்தா, சமூக வன விரிவாக்க அலுவலர் சக்திவேல், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேலு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி அலுவலர் வினோதினி மறறும் ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில், தற்போதைய சூழ்நிலையில் காடுகள் சுருங்கி வருவது குறித்தும், எதிர்கால சந்ததியினர் வாழ்வதற்கு நல்ல உகந்த சூழ்நிலைக்கான பூமிமை விட்டுச்செல்வது நமது தலையாய கடமை என்றும், ஒவ்வொரு நாளும் பிளாஸ் டிக் பைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படுகின்ற சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டிய மரங்கள் நடுவதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ் சப்பை பயன்பாடு குறித்து எடுத்து கூறினார்.
பயிற்சியின் முடிவில், தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கணைப்பாளர்களுக்கு கிருஷ்ணகிரி தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம் சார்பாக மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பயிற்சியினை பள்ளி யின் தலைமையாசிரியர் மகேந்திரன் ஒருங்கிணைத் தார். பயிற்சிக்கான ஏற் பாடுகளை கிருஷ்ண கிரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகிரி மகேந்திரன், ஓசூர் பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.
- தேன்கனிக்கோட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- கும்பாபிஷேகம் விழாவில் தலைமேல் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பென்சபள்ளி கிராமத்தில் 16 அடி உயரத்தில் ஸ்ரீ ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேய சுவாமிக்கு புதிதாக விக்கிரகமும், ஆலயமும் கட்டப்பட்டது. இந்த கோவிலில் நேற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி முதல் கோவிலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதற்கால யாக பூஜை இரண்டாம் கால யாக பூஜை வேதபாராயணம், மற்றும் மூன்றாம் கால யாக பூஜை ஆகியவை தொடர்ந்து நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாக பூஜை கோ பூஜை, லட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட கோவிலில் மேளதாளங்கள் முழங்க வேத மந்திரங்கள் ஓதி, கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த மகா கும்பாபிஷேக விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ஒய் பிரகாஷ், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்ல குமார் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் தலைமேல் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். திருவிழாவை ஒட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.
- சேகர் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேஸ்திரி மல்லேஷை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே இட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் சேகர் (வயது20). தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் முத்தப்பா மகன் மல்லேஷ் (32). கட்டிட மேஸ்திரி.
இந்த நிலையில் சானபள்ளியில் நடந்த ஒரு காத்துகுத்தும் நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றிருந்தனர். அங்கு மல்லேஷ், சேகரிடம் மதுபாட்டில் வாங்கி வருமாறு கூறினார்.
அதற்கு சேகர் வாங்கி வர மறுத்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த தகராறு கைகலப்பாக மாறியதில், சேகரை, மல்லேஷ் எட்டி உதைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அவர் ஆத்திரத்தில் அருகில் இருந்த பீர்பாட்டிலால் சேகரை தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த சேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த பகுதியில் சிறிது பதட்டம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சேகர் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேஸ்திரி மல்லேஷை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- 6 யானைகள் இன்று காலை தேன்கனிக்கோட்டை அருகே மதகொண்டபள்ளி பகுதியில் உணவு தேடி வந்தது.
- யானைகளை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன. அந்த யானைகள் பல குழுக்களாக பிரிந்து சுற்றி திரிந்து வருகின்றன.
அதில் 6 யானைகள் இன்று காலை தேன்கனிக்கோட்டை அருகே மதகொண்டபள்ளி பகுதியில் உணவு தேடி வந்தது. அந்தயானைகள் அதே பகுதியில் உள்ள கவுரம்மா ஏரிக்கு வந்தன. அப்போது அந்த யானைகள் ஏரிக்குள் இறங்கி ஆனந்தமாக குளித்தன. இதனை அந்த பகுதி வழியாக சென்ற கிராம மக்கள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிலர் வீடியோ பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாகினர்.
இதுகுறித்து பொது மக்கள் ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனசரகர் மற்றும் வனஊழியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கவுரம்மா ஏரி பகுதிக்கு விரைந்து வந்து, 6 யானைகளையும் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் அடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனத்துறையினரிடம் கிராம மக்கள் கூறுகையில், இந்த யானைகளை பகல் நேரத்தில் விரட்டியடித்தால், விவசாய நிலங்களுக்குள் பயிர்களை நாசம் செய்திடும். மேலும், வீடுகளுக்குள் புகுந்தால் பொதுமக்கள் அச்சமடைவார்கள். எனவே, இரவு நேரத்தில் யானைகளை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என்றனர்.
இதனால் வனத்துறையினர் யானைகள் ஊருக்கு புகுந்து விடமால் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக அங்கேயே முகாமிட்டுள்ளனர்.
மேலும், வனத்துறையினர் கிராம பகுதிகளில் ரோந்து சென்று ஒலிப் பெருக்கியில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தப்படியே யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
- ஆந்திரா மற்றும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது.
- ஆந்திராவில் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
ஆந்திரா மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து தினமும் 60க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் ஆந்திராவிற்கு இயக்கப்படுகிறது. அதே போல் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 30-க்கும் மேற்பட்ட ஆந்திர அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தென்மாவட்டங்களிலிருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு கிருஷ்ணகிரி வழியாக செல்வது வழக்கம்.
அதே போல் ஓசூரில் பணிபுரியும் ஆந்திரா மாநில தொழிலாளர்கள் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு விடுமுறை சென்று வருவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது.
திருப்பதி செல்லும் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில் ஆந்திராவில் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் ஆந்திரா பஸ்கள் ஓசூர், கிருஷ்ணகிரிக்கு பயணிகளை ஏற்றி செல்ல வந்தது. அதே போல் தமிழக பஸ்களும் ஆந்திரா மாநிலத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றன.
இதனால் வழக்கம் போல் நேற்று காலை முதல் ஆந்திரா மாநிலத்திற்கு பஸ்கள் சென்று வந்தன.
- மருத்துவமனை சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் பிசியோதெரபிஸ்ட் தினம் கொண்டாடப்பட்டது.
- மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சவுந்தர ராஜ் கேக் வெட்டி இனிப்பு களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ் சாலையில் உள்ள டி.சி.ஆர். மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் பிசியோதெரபிஸ்ட் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டி.சி.ஆர்.மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சவுந்தர ராஜ் தலைமை தாங்கி கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் டி.சி.ஆர். நர்சிங் கல்லூரி முதல்வர் சுமதி, டாக்டர் கள் உதயசந்திரிகா, காமிலா, சையத், முதன்மை அலுவலர் அனிதா, நிர்வாக அலுவலர் சவீர் பாஷா, மேற்பார்வை யாளர் கிருஷ்ணன் மற்றும் மருத்துவ மனை ஊழி யர்கள், நர்சிங் கல்லூரி மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை தம்பி துரை எம்.பி., வழங்கி வாழ்த்தினார்.
- விழாவிற்கு வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வேளாங் கண்ணி பப்ளிக் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 10ம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. இந்த விழா விற்கு வோளங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் விஜய லட்சுமி முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தி னராக பள்ளியின் நிறுவனர் தம்பிதுரை எம்.பி., பங்கேற்று, போட்டி யினை தொடங்கி வைத்து, மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் பேசுகை யில், விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும் வளர்த்துக் கொள்கின்றனர். ஒழுக்கத்திலும் தம்மை மேம்படுத்திக் கொள் வார்கள் என்றார்.
தொடர்ந்து நடந்த 100 மீ., 200 மீ., 400 மீ தொடர் ஓட்டம், கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, ஸ்கேட்டிங் ஆகிய போட்டிகள் நடந்தது. இதில் தீரஜ், சாந்தி, ஆனந்த், பிரேம் ஆகிய நான்கு அணிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். நான்கு அணிகளில் தீரஜ் அணியினர் அதிக புள்ளிகளை பெற்று 2023-ம் ஆணடிற்கான சுழற் கோப்பையை தட்டி சென்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசு, பாராட்டு சான்றிதழ்களை தம்பி துரை எம்.பி., வழங்கி வாழ்த்தினார். மேலும், பெற்றோர்களுக்கு தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பா ளர்களாக பர்கூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், வேளாங் கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் முதல்வர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை பள்ளி முதல்வர் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் செய்தி ருந்தனர்.
- 150-க்கும் மேற்பட்ட வகையான விநா–யகர் சிலைகள் தயாரிக்கப்–பட்டு உள்ளன.
- மாசுபடாத வண்ணம் கிழங்கு மாவுகளிலும், அட்டைக0ள் மூலம் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படு–கின்றன.
ஊத்தங்கரை,
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி நாடு முழுவதும் பொதுமக்கள் கொண்டாட இருக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை-திருப்பத்தூர் சாலையில் உள்ள அப்பி–நாயக்கன்பட்டி கிராமத்தில் பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயா–ரிக்கப்பட்டு வருகின்றன,
அனுமான், பிள்ளையார் பட்டி கருப்பு, ஜல்லிக்கட்டு காளை, திரிசூலம், சிங்க–வால், யானைப் போல், ரதம், மயில்வாகனம் போன்ற 150-க்கும் மேற்பட்ட வகையான விநா–யகர் சிலைகள் தயாரிக்கப்–பட்டு உள்ளன. இந்த விநாயகர் சிலைகளை தருமபுரி, திருப்பத்தூர், அரூர், திருவண்ணாமலை, குப்பம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வந்து விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து விநாயகர் சிலைகளை தயாரிப்பவர் கூறும்போது:--
ஊத்தங்கரை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் நாங்–கள் ஈடுபட்டு வருகின்றோம். எங்களிடம் தயாரிக்கப்படும் இந்த விநாயகர் சிலைகள், முழுக்க முழுக்க சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணம் கிழங்கு மாவுகளிலும், அட்டைகள் மூலம் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
இது ஆறு மற்றும் ஏரியில் கரைக்கும் பொழுது மீன்க–ளுக்கு உணவாக இது மாறு–கின்றன. அந்த உயிரினங்க–ளுக்கு எந்த பாதிப்பில்லாத வகையில் இந்த சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்–தக்கது. கடந்த ஆண்டு மழை காரணமாக சிறிது மந்தமான நிலையில் வியாபாரம் நடைபெற்றாலும், இந்த ஆண்டு அதிகளவு விநாயகர் சிலைகள் தற்போது விற்பனையாகி வருகின்றன என்றார்.






