என் மலர்
கிருஷ்ணகிரி
- மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
- நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அர.சக்கரபாணி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஓசூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஓசூர் மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா, மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கையெ ழுத்திட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
மேலும் இதில், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
- அமைச்சர்கள் கே.என்.நேரு - அர.சக்கரபாணி தொடங்கி வைத்தனர்
- மீன் மார்க்கெட் கட்டுமான பணிக்கு ரூ.3 கோடியே 98 லட்சம் மதிப்பில் கட்டப்பட வுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, மோர னப்பள்ளியில், ரூ.30 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்படவுள்ளது. இதற்கான பூமிபூஜை நேற்று நடை பெற்றது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.
நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் சிவராஜ், கிருஷ்ண கிரி மாவட்ட கலெக்டர் சரயு, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, டாக்டர் செல்லகுமார் எம்.பி., சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), .டி.ராமச்சந்திரன் (தளி), ஆகியோர் முன்னிலை வகித் தனர். ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா வர வேற்றார்.
பின்னர், நடைபெற்ற விழாவில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.550 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைவில் தொடங் கப்படவுள்ளது.
ஓசூர், தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த மாநகராட்சியாகும். இங்கு தற்போதைய மக்கள்தொகை 4 லட்சம் ஆகும். மேலும், தொழில் மாநகரம் என்பதால் இந்த மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு துயரத்தை கொடுப்பதை கருத்தில் கொண்டு , தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மோர னப்பள்ளியில் உள்கட்ட மைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டம் 2023-24 -ன் கீழ், ரூ.30 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கி ணங்க இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் நிதியிலிருந்து ரூ.15 கோடியும், மாநகராட்சி பங்கு தொகை ரூ.10 கோடியும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 46 லட்சமும், பஸ் நிலைய கடைகள் முன் ஏலத்தொகை ரூ.3 கோடியே 50 லட்சம் என மொத்தம் ரூ.30 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது.
மேலும், நகராட்சி நிர்வாக துறை சார்பாக, ஓசூர் மாநகராட்சி, எம்.ஜி.ஆர் வணிக வளாகத்தில் மூலதன மானிய நிதி திட்டம் 2023-24 -ன் கீழ், ரூ.3 கோடியே 98 லட்சம் மதிப்பில் புதிய மீன் மார்க்கெட் கட்டுமான பணி கள் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. புதிய மீன் மார்க்கெட் கட்டுமான பணிக்கு ரூ.3 கோடியே 98 லட்சம் மதிப்பில் கட்டப்பட வுள்ளது.
தொடர்ந்து, ஓசூர் காமராஜ் காலனி பகுதியில், ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கும் பணிகள் தற்போது முடிவுற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. இக்கட்டி டத்தில், வரவேற்பு அறை, அலுவலக அறை, கட்டுப் பாட்டு அறை, பாதுகாப்பு அறை, 1 ஆண்கள் கழிப்பறை, 1 பெண்கள் கழிப்பறை, ஒரே நேரத்தில் 80 நபர்கள் அமர்ந்து படிக்கும் அளவிற்கு படிக்கும் வளாகம், 10 ஆயிரம் புத்தகங்கள் அடுக்கி வைக்கும் அளவிற்கு நூலக அலமா ரிகள், ஆகியவை அமைக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சம் பேர் பயனடைவார்கள்.
அதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில், ரூ.5 கோடியே 88 லட்சம் மதிப்பில் வணிக வளாக கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப் பட்டது.
ஓசூர் மாநகராட்சியில், 4 மண்டல அலுவலகங்கள் கட்டுமான பணிகளுக்கு ரூ. 12 கோடியும், மண்சாலைகளை தார் சாலைகளாக மாற்ற ரூ.21 கோடியும். பழுதடைந்த தார் சாலைகளை புனரமைக்க ரூ. 22 கோடியும், மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்க ரூ. 45 கோடியும் ஓதுக்கீடு செய்ய மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற் றப்படும். இவ்வாறு விழா வில், அமைச்சர் திரு.கே.என்.நேரு பேசினார்.
முன்னதாக, அமைச்சர்கள் இருவரும், மாநகராட்சியில் தொடங்கவுள்ள பாதாள சாக்கடை திட்டப் பணிகள், குடிநீர் விநியோக திட்ட பணிகள், அடிப்படை வசதி கள் குறித்து மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், 15 சாலையோர வியாபாரிக ளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளுக்கான காசோ லைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளார் சண்முகநாதன், மேற்பார்வை பொறியாளர் ஜெயகுமார், நிர்வாக பொறியாளர்கள் லோகநாதன், சேகர், துணை மேயர் ஆனந்தைய்யா, முன் னாள் எம்.எல்.ஏ. பி.முருகன், மண்டல தலைவர் ரவி, மாநகராட்சி பொது சுகாதா ரக்குழு தலைவர் மாதேஸ்வ ரன், மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், பேரண்டபள்ளி ஊராட்சி தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் மாநகராட்சி செயற ்பொறியாளர் ராஜாராம் நன்றி கூறினார்.
- கிருஷ்ணகிரியில் கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட் திறப்பு விழா
- அமைச்சர்கள் கே.என். நேரு, அரு. சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுக்கா, சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சப்படி அருகே நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்தில் "கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட்" என்ற புதிய காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா, நேற்று நடைபெற்றது. இதனை, தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உணவுத்துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணி, ஆகியோர் திறந்து வைத்தனர்.
மேலும் இதில், சிறப்பு விருந்தினர்களாக, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), தளி ராமச்சந்திரன், டாக்டர் செல்லகுமார் எம்.பி, ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட் சங்க நிறுவனர்கள் ஆதிநாராயணன் மற்றும் ராஜாரெட்டி ஆகியோர் வரவேற்றனர். புதிய காய்கறி மார்க்கெட்டை திறந்து வைத்து அமைச்சர் கே.என் நேரு பேசியதாவது,
தமிழ்நாட்டில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு அடுத்து ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட், மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டாக விளங்கி வருகிறது. அந்த வரிசையில், அதிகளவில் காய்கறிகளை விளைவிக்கக் கூடிய பகுதியான ஓசூரில் இந்த, கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட் புதிதாக அமைக்கப்பட்டிருப்பதை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
பின்னர், அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி ஆகியோருக்கு காய்கறி மார்க்கெட் சார்பில், ஆதிநாராயணன் ராஜா ரெட்டி ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. பி.முருகன், சூளகிரி ஒன்றிய கவுன்சிலர் நாகேஷ், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபி பிரான்சினா, விமல் ரவிகுமார், கோனேரிப் பள்ளி ஊராட்சி தலைவர் கோபம்மா சக்கர்லப்பா, ஆகியோரும், ஜெயராமன் உள்ளிட்ட காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகள், கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த தனியார் காய்கறி மார்க்கெட், விவசாயிகளின் கூட்டு முயற்சியினால் 23 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 350 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓரே நேரத்தில் வெளி மாநிலத்திலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட லாரிகள் மார்க்கெட்டிற்குள் வந்து, 2,000 டன் காய்கறிகளை இறக்கி, ஏற்றிச் செல்லும் அளவிற்கு தாராள இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், மார்க்கெட்டிற்கு வரும் லாரி டினாவர்கள், சுமைதூக்கும் தொழிலாளிகள் உள்ளிட்ட வர்களுக்கு தங்குமிடம் மற்றும் குளியலறைகள், கழிப்பிட வசதி ஆகியவையும் செய்யப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரியில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
- தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் கலந்து கொண்டார்.
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
தி.மு.க., மாநில இளை ஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக் கத்தை அறிவித்தார். அதன் படி, 50 நாட்களில், 50 லட்சம் பேர் கையெ ழுத்து டன் நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து மனுவை குடியரசுத்த லைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கூறினார்.
அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நேற்று கிருஷ்ணகி ரியில் பெங்களூர் சாலை யில் உள்ள வெங்கடேஸ்வரா காம்பளக்ஸ் சுபம் கூட்ட அரங்கில் தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், சங்கர், சரவ ணன், சங்கர், சத்தியமூர்த்தி, லயோலா ராஜசேகர் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் பங்கேற்று, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, நீட் தேர்வு விலக்கு குறித்து சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் கலந்து கொண்டார். இதில் முன் னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், மாவட்ட அவைத்தலைவர் தட்ர அள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடே சன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்த சாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமுர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், நகர செயலாளர் நவாப், தலைமை செயற்குழு உறுப்பினரும், நகர்மன்ற தலைவருமான பரிதாநவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் மாணவரணி அமைப்பாளர் ஜெயந்திரன் மருத்துவரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால், பிறகு எதற்காக சட்டமன்றம், நாடாளுமன்றங்கள் உள்ளது
- மனித கழிவை மனிதன் அல்லும் நிலை உள்ளது. சூரியனை சுற்றி ஆராய்ச்சி செய்து என்ன ஆக போகிறது.
கிருஷ்ணகிரி:
காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறி இருக்க வேண்டும். கர்நாடகா அரசு அம்மாநில மக்களுக்கு உண்மையாக இருக்கும் போது, தமிழக மக்களுக்கு முதலஅமைச்சர் உண்மையாக இருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் தமிழக மக்கள் நலனைவிட இந்தியாவை காப்பாற்ற போகிறேன் என முடிவெடுத்துவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் சீமான் முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சாதி வாரிய கணக்கெடுப்பு வேண்டும் என முதலில் தமிழ்பெருங்குடி ஆனந்தம் தான் பேசி, 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்தார். அதன் பின் சாதிவாரியாக கணக்கெடுப்பு வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் நான் ஆகியோர் போராடி வருகிறோம். அன்று முதல் இன்று வரை சாதிவாரிய கணக்கெடுப்பு பேசப்பட்டு வருகிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரை இது குறித்து பேசுவார்கள். அண்மையில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோத நிறைவேற்றப்பட்டது. முதலில் ஆட்சியில் வேண்டாம், பாஜக தனது கட்சியில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை தருமா. தேர்தல் வரும் போது மட்டும் நம் மீது பாசம், அக்கறை, பற்று, விலைவாசி உயர்வு போன்றவை ஞாபகம் வருகிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிக்குமா என்ற கேள்விக்கு, தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் 1947ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1967ல் தான் ஆட்சியை பிடித்தது. அப்படித்தான் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தனது அடித்தளத்தை வளர்த்தி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை வரும் போது, பிற கட்சியை சார்ந்தவர்கள் எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள். காவிரி பிரச்சனையில் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம் போன்றவற்றில் உள்ள அதிகாரிகள் முறையாக இல்லை. இரு மாநில அதிகாரிகள் சமமாக இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால், பிறகு எதற்காக சட்டமன்றம், நாடாளுமன்றங்கள் உள்ளது. அதற்காக ஏன் பல ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தல் நடத்த வேண்டும்.
பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறிய பிறகு, அ.தி.மு.கவில் இருந்து உங்களுக்கு கூட்டணி அழைப்பு விடுத்ததாக என்ற கேள்விக்கு, அழைப்பார்கள், நாங்கள் தேர்தலுக்கான வேட்பாளர்கள் முன் பணிகளில் உள்ளோம். கூட்டணிக்கு அழைப்பார்கள் இன்னும் நாள் உள்ளது. பிறகு தான் பேச வேண்டும். ககல்யான் விண்கலம் கடைசி நிமிடம் நிறுத்தம் தொடர்பான கேள்விக்கு, இந்தியா மேற்கொள்ளும் இந்த ஆராய்ச்சியால் நமக்கு என்ன பயன். 28 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் இருப்பதாக பாஜகவினர் தான் சொன்னார்கள்.
கொரோனா காலத்தில் 80 கோடி ஏழைக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு வழங்கியதாக நிதி அமைச்சர் பேசுகிறார். சாலையை முறையாக போடுங்கள். நாட்டில் பிச்சை எடுப்பது வளர்ச்சி இல்லை. பிச்சைக்காரன் இல்லாமல் இருப்பது தான் வளர்ச்சி. ஜி20 மாநாடு, காமன்வெல்த் போட்டிகள் நடந்த போது, பதாகைகள் வைத்து குடிசைகளை மறைத்தனர். ஒரே நாளில் 13 ஆயிரம் பிச்சைக்காரர்களை லாரியில் ஏற்றி வேறு மாநிலத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர். இவர்கள் பேச்சு எல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது. சந்திர மண்டலத்தில் குடியேறலாம் என்றால், முதலில் இந்து, கிறிஸ்டியன், முஸ்லீம் என யாரை முதலில் குடியேற்றுவீர்கள். உங்களை குடி அமர்த்த விட்டுவிட்டு, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அமைதியாக இருக்கும். இந்த ஆராய்ச்சி எல்லாம் வீண் செலவு. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் வாக்கை இயந்திரத்தில் போட்டுவிட்டு, மனித கழிவை மனிதன் அல்லும் நிலை உள்ளது. சூரியனை சுற்றி ஆராய்ச்சி செய்து என்ன ஆக போகிறது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- விவகாரத்து தொடர்பான வழக்கில் தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அருண்குமார்(வயது39). விவசாயி. இவருக்கும் தருமபுரியை சேர்ந்த ஜான்சிராணி(35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரும ணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அருண்குமார், ஜான்சிராணியி–டம் இருந்து விவகாரத்து பெற்று விட்டார்.
கணவன்-மனைவி இருவ ரும் சம்பவத்தன்று தருமபுரி நீதிமன்றத்துக்கு ஜீவனாம்சம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக ஆஜராக வந்துள்ளனர். அப்போது அருண்குமாருக்கும் ஜான்சிராணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜான்சிராணியும், வக்கீல் விமல் என்பவரும் சேர்ந்து நீதிமன்ற வாளகத்தி–லேயே அருண்குமாரை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- ஓசூரில் தூய்மைப் பணிக்காக 30 பேட்டரி வாகனங்களை மேயர் சத்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- மாநகர பகுதிகளின் தூய்மை பணிக்காக இயக்கப்பட வுள்ளது.
\கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 4-வது மண்டலம், பழைய ஏ.எஸ்.டி.சி அட்கோ வளாகத்தில் தனியார் துப்புரவு ஒப்பந்த நிறுவனம் சார்பில், 30 பேட்டரி வாகனங்கள் மாநகர பகுதிகளின் தூய்மை பணிக்காக இயக்கப்படவுள்ளது.
இந்த வாகனங்களை, மேயர் எஸ்.ஏ.சத்யா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டலத் தலைவர் ரவி, கவுன்சிலர்கள் மாதேஸ்வரன், நாகராஜ், ஒப்பந்த உரிமையாளர் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
- ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வைய பொறியா ளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்காக, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. கிருஷ்ணகிரி மத்திய அமைப்பு திட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் சாமுடி, ராஜேந்திரன், சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வாசு தேவன், திட்ட செயலாளர் கருணாநிதி, ஓய்வுபெற்றோர் நல அமைப்பு செயலாளர் முனிரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், திட்ட பொரு ளாளர் முனிசாமி நன்றி கூறினார்.
இந்த போராட்டத்தின் போது, தினக்கூலி இ-டெ ண்டரை கைவிட வேண்டும். மின்வாரியத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளியை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்திட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங் கிட வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு வி பத்து காப்பீடு உறுதிபடுத்திட வேண்டும். ஒப்பந்த ஊழி யர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையினை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
- குந்தாரப்பள்ளி அருகே கழிவுநீர் கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
- சாலையிலேயே கழிவுநீர் செல்வதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தி.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் இருந்து வேப்பனப்பள்ளி சாலை யில் சாலையில் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பள்ளி கள் அமைந்துள்ளன. இந்த பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் படித்து வருகிறார்கள். மேலும் வணிக வளாகங்க ளுக்கு நாள்தோறும் ஏராள மான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
மேலும் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு முதல் வேப்பனப்பள்ளி செல்லகூ டிய சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி கிடையாது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதனால் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து செல்கிறது. வணிக வளா கங்கள், குடியிருப்பு பகுதி களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல கூடிய பொதுமக்கள் அவதிக் குள்ளாகிறார்கள். மேலும் மழை காலங்களில் அந்த பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
சாலையிலேயே கழிவுநீர் செல்வதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட் டுள்ளது. ஆகவே ஆயிரக்க ணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவகள் வந்து செல்ல கூடிய குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு முதல் வேப்ப னப்பள்ளி செல்ல கூடிய பிரதான சாலையில், கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக் கை வைத்துள்ளனர்.
- காவேரிப்பட்டினத்தில் காமராஜர் திறந்து வைத்த நூலகத்தை கட்டுவதற்கு பூமி பூஜை தொடங்கப்பட்டது.
- டாக்டர் செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் 1956-ம் ஆண்டு தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், பெருந்தலை–வருமான காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் சிதலமடைந்த நிலையில் காணப்பட்ட நூலக கட்டிடத்தினை இடித்து விட்டு புதியதாக நூலகம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் காங்கி–ரஸ் எம்.பி. டாக்டர் செல்லக்–குமாரிடம் கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்.
இதனையடுத்து கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து சுமார் ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிதலமடைந்த காணப்படட நூலகத்தை புது பொலிவுடன் கட்டுவதற்காக பூமிபூஜை காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகில் நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக டாக்டர் செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து நூலகத்திற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் நகர காங்கிரஸ் தலைவர் தேவநாராயணன் தலைமை தாங்கினார். முன்னால் மாவட்டத் தலை வர் காசிலிங்கம், மாவட்டத் துணைத்தலைவர் சேகர், கலை இலக்கிய மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, எஸ்.சி., எஸ்.டி., பொறுப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, பேரூராட்சி தலைவர் குமார், வட்டார தலைவர்கள் கிருஷ்ணன், சுப்பிரமணி, முன்னாள் வட்டார தலைவர் ஆர்மி ராமன், முன்னாள் நகர தலைவர்கள் சுப்பிரமணி, பச்சப்பன்,சிறுபான்மை வட்டாரத் தலைவர் முஸ்தபா சேவா தள தலைவர் தேவராஜன், நகர செயலாளர் ஸ்ரீராம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சம்பத்குமார், சிவகுமார், கதிர்வேல், சுடர் வேல், பூபாலன், கணபதி, ஸ்ரீராமுலு, சுப்பையன், ராமராஜ், ஜெயபால், குணா, குருசாமி, கருணாமூர்த்தி சிவன் ஐயா, கவுரன் ஆசிரியர், மல்லிகா ராமன், மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கடந்த பல ஆண்டுகளாக காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட நூலகம் மீண்டும் புதுபொலியுடன் கட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் டாக்டர் செல்லக்குமார் எம்.பி.க்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
- புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
- அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அர.சக்கரபாணி நாளை ஓசூர் வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில், நாளை (சனிக்கிழமை) கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்கவும், மீன் இறைச்சி கடைகள் உள்ளிட்ட கட்டு மான பணிகளை தொடங்கி வைக்கவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் நாளை ஓசூர் வருகின்றனர்.
மேலும், திறன் மேம்பாட்டு நூலகம் உள்ளிட்டவை களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.
- சரத்தை பீர்பாட்டிலாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கினர்.
- வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு தொரக நகரைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் சரத் என்கிற லாலு (வயது23). இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ஓசூரை அடுத்த மத்திகிரி அருேக உள்ள மிடிகிரி பகுதியில் தங்கி உள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் டிரைவர்களான சுனில் (31), பாரத் (28), திம்மசத்திரம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (26) ஆகிய 3பேரும் சம்பவத்தன்று குடிபோதையில் சரத்திடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து சரத்தை பீர்பாட்டிலாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சரத் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.






