என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • 3 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.
    • வனத்துறையினர் விசாரணை

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி அடுத்த பச்சிக்கானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புது பேயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். விவசாயியான இவர் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையில் அடைத்து விட்டு தூங்க சென்று விட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை சென்று பார்த்த பொழுது ஆட்டு கொட்டகையில் இருந்த 9 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து உயிர் இழந்து கிடந்தன. மேலும் படுகாயத்துடன் 3 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இது குறித்த தகவலின் பெயரில் அங்கு நேரில் விரைந்து சென்று பார்வையிட்ட பட்சிகானபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கன்னியப்பன்

    இது குறித்து அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவர்கள் உயிருக்கு போராடி கொண்டுள்ள 3 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து கே.ஆர்.பி அணை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்த நிலையில், தற்பொழுது மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.  

    • கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது.
    • அனைத்து திட்ட சாலைகள் மற்றும் பாலங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி, 

      கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் 2022-2023 - ஆம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம், சமத்துவபுரம், நீலப்புரட்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொகுதி - 2, பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், பிரதான் மந்திரி ஆதர்ஸ் கிராம் யோஜனா திட்டம், ஆதிதிரா விடர் குடியிருப்பு களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் திட்டம், இருளர் மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேம்பாடு செய்தல், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடை பெற்று வரும் பணிகள், சமூக பொருளா தார மேம்பா ட்டுத்திட்டம், தன்னிறைவு திட்டம், நமக்கு நாமே திட்டம், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், அனைத்து திட்ட சாலைகள் மற்றும் பாலங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளான சாலை அமைக்கும் பணிகள், சிறு பாலங்கள் கட்டுமான பணிகள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமான பணிகள், குடிநீர் திட்ட பணிகள் மற்றும் தெரு விளக்கு போன்ற பொது மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்களை விரைந்து முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் அருள்மொழி தேவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நேற்று இரவு தாயும், மகளும் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் 2பேரின் உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள டோரிப்பள்ளியை அடுத்த உங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ட ராமப்பா (வயது 50). இவர் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மீனாட்சி(47) என்ற மனைவியும், கிரி (23) என்ற மகனும், காவ்யா (18) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிரி ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சப்படி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி உயிரிழந்தார்.

    கிரிக்கும் வேறு நபருக்கும் தகராறு இருந்து வந்தது. எனவே, அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் மீனாட்சியும், தங்கை காவ்யாவும் சூளகிரி போலீசில் விபத்து நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை காண்பிக்குமாறு புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    மேலும், கிரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதியாக நம்பிய அவர்கள் நேற்றும் சூளகிரி போலீசாரை சந்தித்து விசாரித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.

    தனது மகன் சாவு குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்காததால், மீனாட்சியும், அவரது மகள் காவ்யாவும் மிகுந்த சோகத்தில் காணப்பட்டனர். மனமுடைந்து போன மீனாட்சியும், காவ்யாவும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு தாயும், மகளும் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத் தீப்போல் பரவியது.

    இதுகுறித்து தகவலறிந்த பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தாய் மற்றும் மகளின் உடல்களை மீட்க முயன்றனர்.

    அப்போது அங்கு திரண்டிருந்த உறவினர்கள் மீனாட்சி, காவ்யா ஆகியோரின் உடல்களை எடுக்க விடாமல் தடுத்தனர். மேலும், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, ஓசூர் டி.எஸ்.பி. பாபு பிரசாந்த், தாசில்தார் சக்திவேல், கிராம அலுவலர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் உறவினர்களிடம், உங்கள் சந்தேகங்களை புகாராக எழுதி கொடுங்கள், நான் விசாரித்து போலீசார் கவன குறைவாக செயல்பட்டிருந்தால் ஒரே நாளில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    அதன்பின்னர் உறவினர்கள் 2 பேரின் உடல்களை போலீசார் எடுத்து செல்ல அனுமதித்தனர். அதன்பின்பு போலீசார் 2பேரின் உடல்களை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகன் விபத்தில் இறந்ததால் துக்கம் தாங்காமல் தாய், தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

    • ஆயுத பூஜை என்பதால் நிறுவன ஊழியர்கள் 11 பேர் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி உள்ளனர்.
    • விபத்து தொடர்பாக கெலமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயக்கோட்டை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் பகுதியில் திருவண்ணாமலை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு நோக்கி சென்ற காரும், பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது.

    நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பலியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மாரம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் காமராஜ் (29) கார் டிரைவர் ஆவார்.

    அவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் அவரது அண்ணன் கிருஷ்ணன் என்பவரின் மனைவி செல்வி (37) மாரடைப்பால் உயிர் இழந்தார். அதே போல விபத்தில் பலியான புனித்குமார் (23), கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆவார். அவரும் டிரைவர் ஆவார்.

    இதே போல விபத்தில் பலியான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நராயண் சேத்தி (35), அசாம் மாநிலத்தை சேர்ந்த குஞ்சா ராய் (24), நிக்லேஷ் (25), தாலு (26), விமல் (47) ஆகிய 5 பேரும் ஓசூர் அருகே அக்கொண்டப்பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அட்டை பெட்டிக்கு ஒட்டப்படும் பேஸ்ட் உற்பத்தி செய்ய கூடிய அந்த நிறுவனம் 20 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    அங்கு 15 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆயுத பூஜை என்பதால் நிறுவன ஊழியர்கள் 11 பேர் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கெலமங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவண்ணாமலை அருகே நடந்த விபத்தில் ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிய கூடிய வட மாநில ஊழியர்கள் 5 பேர் உள்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்தூர் அருகே மர்மான முறையில் இறந்த கிடந்த மாணவி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இவர் கடந்த 4 நாட்களாக விடுமுறையையொட்டி வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள வண்டிக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் படித்து வந்தார்.

    இவர் கடந்த 4 நாட்களாக விடுமுறையையொட்டி வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி மர்மமான முறையில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் மத்தூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனே போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், மாணவி வயிற்று வலியின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் தரப்பினர் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் பிளஸ்-1 மாணவி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேன்கனிக்கோட்டை அருகே தசரா விழாவை முன்னிட்டு கிராம தேவதைகளின் உற்சவ விழா நடைபெற்றது.
    • தேங்காய்களை கட்டிவிட்டு அதை அம்பு விட்டு உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மணியம் பாடி கிராமத்தில் ஆண்டு தோறும் தசரா திருவிழாவை முன்னிட்டு கிராம தேவதை களின் உற்சவ விழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தசரா விழா முன்னிட்டு நேற்று கிராம தேவதைகளின் உற்சவம் மற்றும் வீதி உலா நடைபெற்றது.

    மணியம்பாடி மெலூர் ஒட்டர்பாளையம் ஆகிய கிராம மக்கள் சார்பில் விவசாயம் செழிக்கவும், மக்கள, நொடியின்றி வாழவும் கிராம தேவதை–களுக்கு திருவிழா நடத் தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழாவை முன்னிட்டு மணியம்பாடியில் உள்ள கிராம தேவதைகளான பட்டாளம்மன், மாரி–யம்மன், மெலூர் கிரா–மத்தில் சிக்கம்மா, தொட்டம்மா, பசுவேஸ்வர சாமி, வீரபத்திர சாமி, பட்டா ளம்மன், ஓம்காளியம்மன், மாரியம்மன், வெங்கடராம சுவாமி, ஒட்டர்பாளையம் கிராமத்தில் உள்ள திம்ம–ராய சாமி, சென்றாய சாமி, வீரபத்திர சாமி உட்பட பல்வேறு கிராம தேவதைகளை அலங்க–ரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து மேள, தாளங்கள் முழங்க அலங்கரிக்கபட்ட எருதுகளுடன் ஊர்வலமாக தோள்களில் சுமந்தவாறு புறப்பட்ட பக்தர்கள் மணியம்பாடி கிராமத்திற்கு வந்தடைந்தனர்.

    அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் அனைத்து கிராம தேவதை களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் பாரம்பரிய நடமாடினர். இதைத்தொடர்ந்து மரக்கிளைகள் கொண்டு வந்து அந்த மரங்களின் கிளைகளின் தேங்காய்களை கட்டிவிட்டு அதை அம்பு விட்டு உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர் இந்த விழாவை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொன்டனர்.

    • மத்தூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

     கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த குட்டூர் பஞ்சாயத்துக்குட்பட்ட எம்.ஜி.ஆர். சேக்கினாம் பட்டியில்200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    அந்த பகுதியில் குடிநீர் வசதியில்லாததால், இதற்காக அப்பகுதி கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் வசதி இல்லாத காரணத்தால் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பள்ளி பஸ்கள் மற்றும் நகரப் பஸ்கள் செல்ல முடியாமல் சுமார் 2 மணி நேரம் போக்கு–வரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் குடிநீர் வசதி கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று அவர்கள் தெரி வித்தனர். இதுகுறித்து குட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளுக்கும், மத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் மற்றும் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களுக்குள் குடிநீர் வசதி செய்து தருவதாக அவர் கூறினார்.

    பேச்சுவார்த்தை முடிந்த பின்பு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • திருவண்ணாமலை கோர விபத்தில் பலியான கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன
    • கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது சம்பவம்

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் பகுதியில் திருவண்ணா மலை பெங்க ளூரு தேசிய நெடுஞ்சா லையில் பெங்க ளூரு நோக்கி சென்ற காரும், பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதியது.

    நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பலியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மாரம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் காமராஜ் (29) கார் டிரைவர் ஆவார்.

    அவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் அவரது அண்ணன் கிருஷ்ணன் என்பவரின் மனைவி செல்வி (37) மாரடைப்பால் உயிர் இழந்தார். அதே போல விபத்தில் பலியான புனித்குமார் (23), கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆவார். அவரும் டிரைவர் ஆவார்.

    இதே போல விபத்தில் பலியான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நராயண் சேத்தி (35), அசாம் மாநிலத்தை சேர்ந்த குஞ்சா ராய் (24), நிக்லேஷ் (25), தாலு (26), விமல் (47) ஆகிய 5 பேரும் ஓசூர் அருகே அக்கொண்டப் பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அட்டை பெட்டிக்கு ஒட்டப்படும் பேஸ்ட் உற்பத்தி செய்ய கூடிய அந்த நிறுவனம் 20 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    அங்கு 15 தொழிலா ளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆயுத பூஜை என்பதால் நிறுவன ஊழியர்கள் 11 பேர் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி உள்ளனர். .

    திருவண்ணாமலை அருகே நடந்த விபத்தில் ஓசூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிய கூடிய வட மாநில ஊழியர்கள் 5 பேர் உள்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் அர.சக்கரபாணி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி மாணவரணி மற்றும் மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஓசூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஓசூர் மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா, மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கையெ ழுத்திட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    மேலும் இதில், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • அமைச்சர்கள் கே.என்.நேரு - அர.சக்கரபாணி தொடங்கி வைத்தனர்
    • மீன் மார்க்கெட் கட்டுமான பணிக்கு ரூ.3 கோடியே 98 லட்சம் மதிப்பில் கட்டப்பட வுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, மோர னப்பள்ளியில், ரூ.30 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்படவுள்ளது. இதற்கான பூமிபூஜை நேற்று நடை பெற்றது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

    நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் சிவராஜ், கிருஷ்ண கிரி மாவட்ட கலெக்டர் சரயு, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, டாக்டர் செல்லகுமார் எம்.பி., சட்ட மன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), .டி.ராமச்சந்திரன் (தளி), ஆகியோர் முன்னிலை வகித் தனர். ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா வர வேற்றார்.

    பின்னர், நடைபெற்ற விழாவில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

    ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.550 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைவில் தொடங் கப்படவுள்ளது.

    ஓசூர், தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த மாநகராட்சியாகும். இங்கு தற்போதைய மக்கள்தொகை 4 லட்சம் ஆகும். மேலும், தொழில் மாநகரம் என்பதால் இந்த மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு துயரத்தை கொடுப்பதை கருத்தில் கொண்டு , தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், மோர னப்பள்ளியில் உள்கட்ட மைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டம் 2023-24 -ன் கீழ், ரூ.30 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கி ணங்க இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் நிதியிலிருந்து ரூ.15 கோடியும், மாநகராட்சி பங்கு தொகை ரூ.10 கோடியும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 46 லட்சமும், பஸ் நிலைய கடைகள் முன் ஏலத்தொகை ரூ.3 கோடியே 50 லட்சம் என மொத்தம் ரூ.30 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது.

    மேலும், நகராட்சி நிர்வாக துறை சார்பாக, ஓசூர் மாநகராட்சி, எம்.ஜி.ஆர் வணிக வளாகத்தில் மூலதன மானிய நிதி திட்டம் 2023-24 -ன் கீழ், ரூ.3 கோடியே 98 லட்சம் மதிப்பில் புதிய மீன் மார்க்கெட் கட்டுமான பணி கள் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. புதிய மீன் மார்க்கெட் கட்டுமான பணிக்கு ரூ.3 கோடியே 98 லட்சம் மதிப்பில் கட்டப்பட வுள்ளது.

    தொடர்ந்து, ஓசூர் காமராஜ் காலனி பகுதியில், ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கும் பணிகள் தற்போது முடிவுற்று பொது மக்களின் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. இக்கட்டி டத்தில், வரவேற்பு அறை, அலுவலக அறை, கட்டுப் பாட்டு அறை, பாதுகாப்பு அறை, 1 ஆண்கள் கழிப்பறை, 1 பெண்கள் கழிப்பறை, ஒரே நேரத்தில் 80 நபர்கள் அமர்ந்து படிக்கும் அளவிற்கு படிக்கும் வளாகம், 10 ஆயிரம் புத்தகங்கள் அடுக்கி வைக்கும் அளவிற்கு நூலக அலமா ரிகள், ஆகியவை அமைக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சம் பேர் பயனடைவார்கள்.

    அதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில், ரூ.5 கோடியே 88 லட்சம் மதிப்பில் வணிக வளாக கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப் பட்டது.

    ஓசூர் மாநகராட்சியில், 4 மண்டல அலுவலகங்கள் கட்டுமான பணிகளுக்கு ரூ. 12 கோடியும், மண்சாலைகளை தார் சாலைகளாக மாற்ற ரூ.21 கோடியும். பழுதடைந்த தார் சாலைகளை புனரமைக்க ரூ. 22 கோடியும், மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்க ரூ. 45 கோடியும் ஓதுக்கீடு செய்ய மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற் றப்படும். இவ்வாறு விழா வில், அமைச்சர் திரு.கே.என்.நேரு பேசினார்.

    முன்னதாக, அமைச்சர்கள் இருவரும், மாநகராட்சியில் தொடங்கவுள்ள பாதாள சாக்கடை திட்டப் பணிகள், குடிநீர் விநியோக திட்ட பணிகள், அடிப்படை வசதி கள் குறித்து மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், 15 சாலையோர வியாபாரிக ளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளுக்கான காசோ லைகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளார் சண்முகநாதன், மேற்பார்வை பொறியாளர் ஜெயகுமார், நிர்வாக பொறியாளர்கள் லோகநாதன், சேகர், துணை மேயர் ஆனந்தைய்யா, முன் னாள் எம்.எல்.ஏ. பி.முருகன், மண்டல தலைவர் ரவி, மாநகராட்சி பொது சுகாதா ரக்குழு தலைவர் மாதேஸ்வ ரன், மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், பேரண்டபள்ளி ஊராட்சி தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் மாநகராட்சி செயற ்பொறியாளர் ராஜாராம் நன்றி கூறினார்.

    • கிருஷ்ணகிரியில் கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட் திறப்பு விழா
    • அமைச்சர்கள் கே.என். நேரு, அரு. சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுக்கா, சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சப்படி அருகே நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்தில் "கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட்" என்ற புதிய காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா, நேற்று நடைபெற்றது. இதனை, தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உணவுத்துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணி, ஆகியோர் திறந்து வைத்தனர்.

    மேலும் இதில், சிறப்பு விருந்தினர்களாக, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), தளி ராமச்சந்திரன், டாக்டர் செல்லகுமார் எம்.பி, ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட் சங்க நிறுவனர்கள் ஆதிநாராயணன் மற்றும் ராஜாரெட்டி ஆகியோர் வரவேற்றனர். புதிய காய்கறி மார்க்கெட்டை திறந்து வைத்து அமைச்சர் கே.என் நேரு பேசியதாவது,

    தமிழ்நாட்டில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு அடுத்து ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட், மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டாக விளங்கி வருகிறது. அந்த வரிசையில், அதிகளவில் காய்கறிகளை விளைவிக்கக் கூடிய பகுதியான ஓசூரில் இந்த, கோல்டன் வெஜிடபுள் மார்க்கெட் புதிதாக அமைக்கப்பட்டிருப்பதை வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

    பின்னர், அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி ஆகியோருக்கு காய்கறி மார்க்கெட் சார்பில், ஆதிநாராயணன் ராஜா ரெட்டி ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. பி.முருகன், சூளகிரி ஒன்றிய கவுன்சிலர் நாகேஷ், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபி பிரான்சினா, விமல் ரவிகுமார், கோனேரிப் பள்ளி ஊராட்சி தலைவர் கோபம்மா சக்கர்லப்பா, ஆகியோரும், ஜெயராமன் உள்ளிட்ட காய்கறி மார்க்கெட் சங்க நிர்வாகிகள், கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த தனியார் காய்கறி மார்க்கெட், விவசாயிகளின் கூட்டு முயற்சியினால் 23 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 350 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓரே நேரத்தில் வெளி மாநிலத்திலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட லாரிகள் மார்க்கெட்டிற்குள் வந்து, 2,000 டன் காய்கறிகளை இறக்கி, ஏற்றிச் செல்லும் அளவிற்கு தாராள இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல், மார்க்கெட்டிற்கு வரும் லாரி டினாவர்கள், சுமைதூக்கும் தொழிலாளிகள் உள்ளிட்ட வர்களுக்கு தங்குமிடம் மற்றும் குளியலறைகள், கழிப்பிட வசதி ஆகியவையும் செய்யப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரியில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கியது.
    • தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் கலந்து கொண்டார்.

    கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

    தி.மு.க., மாநில இளை ஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக் கத்தை அறிவித்தார். அதன் படி, 50 நாட்களில், 50 லட்சம் பேர் கையெ ழுத்து டன் நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து மனுவை குடியரசுத்த லைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கூறினார்.

    அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நேற்று கிருஷ்ணகி ரியில் பெங்களூர் சாலை யில் உள்ள வெங்கடேஸ்வரா காம்பளக்ஸ் சுபம் கூட்ட அரங்கில் தொடங்கியது.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், சங்கர், சரவ ணன், சங்கர், சத்தியமூர்த்தி, லயோலா ராஜசேகர் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் பங்கேற்று, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, நீட் தேர்வு விலக்கு குறித்து சிறப்புரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன் கலந்து கொண்டார். இதில் முன் னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், மாவட்ட அவைத்தலைவர் தட்ர அள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடே சன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்த சாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமுர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், நகர செயலாளர் நவாப், தலைமை செயற்குழு உறுப்பினரும், நகர்மன்ற தலைவருமான பரிதாநவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் மாணவரணி அமைப்பாளர் ஜெயந்திரன் மருத்துவரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×