என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாக்கி விட்டு தப்பியோட முயன்ற வழிப்பறி கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
- ஒசூரில் தாக்கி விட்டு தப்பியோட முயன்ற வழிப்பறி கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.
- பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடையவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடை பெற்று வருவதால் மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். இந்நிலையில் இச்சம்ப வங்களில் தொடர்புடை யவரை கைது செய்ய, அட்கோ சப் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசார ணையில், ஓசூர், பாகலூர், அட்கோ, மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் வழிப்ப றியில் ஈடுபட்டது ஆந்திரா மாநிலம் ஆனந்தபூர் மா வட்டம் குந்தக்கல் அபேஸ்ந கர் பகுதியை சேர்ந்த ஷேக் நாம்தார் உசேன்(34) என்பது தெரிய வந்தது.
இவர் மீது ஏற்கன வே, தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் நகைபறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட பல்வே று திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நி லையில், நீண்ட தேடுதலுக்கு பிறகு கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் குண்டூரில் அவரை பிடித்த தனிப்படை போலீசார், நேற்று மாலை விசார ணைக்காக, ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள திருப்பதி மெஜஸ்டிக் பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ஷேக் நாம்தார் உசேன் ஏற்கனவே கொள்ளை சம்பவத்தின் போது, தான் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றிருந்த நிலையில், அதை காண்பிக்க செல்வதை போல் சென்றார். அப்போது திடிரென்று அதில் பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்த, ஷேக் நாம்தார் உசேன் திடீரென சப்இன்ஸ்பெக்டர் வினோத், முதல் நிலை காவலர்கள் ராமசாமி, விழியரசு ஆகிய 3 பேரை, தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார்.
இதையடுத்து தற்காப் புக்காக, சப்இன்ஸ்பெக்டர் வினோத், துப்பாக்கியால் ஷேக் நாம்தார் உசேனை சுட்டார். இதில், அவருக்கு வலது காலில் குண்டு அடிப்பட்டு அங்கே விழுந்தார். அவரது காலில் பாய்ந்த குண்டும் வெளியே வந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் மற்றும் போலீசார், காயம் அடைந்த சப் இன்ஸ்பெக்டர் வினோத் உட்பட 3 போலீசார் மற்றும் குண்ட டிப்பட்ட ஷேக் நாம்தார் உசேன் ஆகியோ ரை மீட்டு சிகிச்சைக்காக, ஓசூர் அரசு மருத்துவம னையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து ஓசூர் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்ப வம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






