search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலி
    X

    மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலி

    • 3 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.
    • வனத்துறையினர் விசாரணை

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த பச்சிக்கானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புது பேயனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். விவசாயியான இவர் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையில் அடைத்து விட்டு தூங்க சென்று விட்டார்.

    இந்த நிலையில் இன்று காலை சென்று பார்த்த பொழுது ஆட்டு கொட்டகையில் இருந்த 9 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து உயிர் இழந்து கிடந்தன. மேலும் படுகாயத்துடன் 3 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இது குறித்த தகவலின் பெயரில் அங்கு நேரில் விரைந்து சென்று பார்வையிட்ட பட்சிகானபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கன்னியப்பன்

    இது குறித்து அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவர்கள் உயிருக்கு போராடி கொண்டுள்ள 3 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து கே.ஆர்.பி அணை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்த நிலையில், தற்பொழுது மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×