search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குந்தாரப்பள்ளி அருகே கழிவுநீர் கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் அவதி சாலையில் சாக்கடை நீர் செல்லும் அவலம்
    X

    குந்தாரப்பள்ளி அருகே கழிவுநீர் கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் அவதி சாலையில் சாக்கடை நீர் செல்லும் அவலம்

    • குந்தாரப்பள்ளி அருகே கழிவுநீர் கால்வாய் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • சாலையிலேயே கழிவுநீர் செல்வதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தி.

    கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் இருந்து வேப்பனப்பள்ளி சாலை யில் சாலையில் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பள்ளி கள் அமைந்துள்ளன. இந்த பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் படித்து வருகிறார்கள். மேலும் வணிக வளாகங்க ளுக்கு நாள்தோறும் ஏராள மான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு முதல் வேப்பனப்பள்ளி செல்லகூ டிய சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி கிடையாது.

    நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இதனால் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து செல்கிறது. வணிக வளா கங்கள், குடியிருப்பு பகுதி களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல கூடிய பொதுமக்கள் அவதிக் குள்ளாகிறார்கள். மேலும் மழை காலங்களில் அந்த பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    சாலையிலேயே கழிவுநீர் செல்வதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட் டுள்ளது. ஆகவே ஆயிரக்க ணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவகள் வந்து செல்ல கூடிய குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு முதல் வேப்ப னப்பள்ளி செல்ல கூடிய பிரதான சாலையில், கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக் கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×