என் மலர்
உள்ளூர் செய்திகள்

30 பேட்டரி வாகனங்களை ஓசூர் மேயர் சத்யா கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
ஓசூரில் தூய்மைப் பணிக்காக 30 பேட்டரி வாகனங்கள் இயக்கம்மேயர் சத்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- ஓசூரில் தூய்மைப் பணிக்காக 30 பேட்டரி வாகனங்களை மேயர் சத்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- மாநகர பகுதிகளின் தூய்மை பணிக்காக இயக்கப்பட வுள்ளது.
-கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 4-வது மண்டலம், பழைய ஏ.எஸ்.டி.சி அட்கோ வளாகத்தில் தனியார் துப்புரவு ஒப்பந்த நிறுவனம் சார்பில், 30 பேட்டரி வாகனங்கள் மாநகர பகுதிகளின் தூய்மை பணிக்காக இயக்கப்படவுள்ளது.
இந்த வாகனங்களை, மேயர் எஸ்.ஏ.சத்யா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டலத் தலைவர் ரவி, கவுன்சிலர்கள் மாதேஸ்வரன், நாகராஜ், ஒப்பந்த உரிமையாளர் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






