என் மலர்
கன்னியாகுமரி
- வீடுகள் எந்த பணத்தில் கட்டப்பட்டது என்பது குறித்த விவரங்களை கேட்டு அறிந்தனர்.
- அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலை அடுத்த கேசவன்புதூர் அய்யா குட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள். இவர் பொதுப்பணி துறையில் வேலை பார்த்து வந்தார்.
இவரது மகன் மகேஷ். தந்தை இறந்ததையடுத்து இவர் பொதுப்பணி துறையில் உதவியாளராக சேர்ந்தார். தற்பொழுது மகேஷ் அயலகப் பணியாக மீன்வளத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2013 முதல் 2022 ஆண்டு வரை காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.2½ கோடி சொத்து சேர்த்ததாக புகார் வந்தது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மகேஷ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று காலை ஏ.டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் சிவசங்கரி தலைமையிலான போலீசார் கேசவன்புதூர் அய்யா குட்டி நாடார் தெருவில் உள்ள மகேஷ் வீட்டிற்கு சென்றனர்.
வீட்டில் மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்த ஆவணங்களையும் சோதனை செய்தனர். அப்போது 10 ஆண்டுகளில் 8 வீடுகள் கட்டியிருப்பதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளது. அந்த ஆவணங்களை வைத்து மகேஷிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
வீடுகள் எந்த பணத்தில் கட்டப்பட்டது என்பது குறித்த விவரங்களை கேட்டு அறிந்தனர். மகேஷின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்தனர். அவரது சம்பளத்தை விட அதிகமான அளவிற்கு வருமானம் சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காலை 7.15 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் வரை நீடித்தது. மகேஷ் எங்கெல்லாம் வீடு கட்டியுள்ளார் என்பது குறித்த விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரித்து வருகிறார்கள். அரசு ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சார்பதிவாளர் ஒருவர் வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- ரப்பர் பால் உற்பத்தி பாதிப்பு
- மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தொடர் மழையின் காரண மாக குளுகுளு சீசன் நிலவு கிறது. மாவட்டம் முழுவதும் தினமும் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக இரவு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. சிற்றாறு 2-ல் அதிகபட்சமாக 59.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், மயிலாடி, நாகர்கோவில், இரணியல், ஆரல்வாய்மொழி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் கொட்டி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணைகள் நிரம்பி வரும் நிலையில் அணையின் நீர்மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார் கள். பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 43.74 அடியாக இருந்தது. அணைக்கு 544 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.62 அடியாக உள்ளது. அணைக்கு 315 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று கல்குளம் தாலுகாவில் மேலும் 7 வீடுகள் சேதமடைந் துள்ளது. தொடர் மழையின் காரணமாக குலசேகரம், கீரிப்பாறை, தடிக்காரன்கோ ணம் பகுதிகளில் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிக்கப் பட்டுள்ளது. சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 51, பெருஞ்சாணி 22.8, சிற்றார் 1-47.8, சிற்றார் 2-59.4, பூதப்பாண்டி 6.2, களியல் 15, கன்னிமார் 3.2, மயிலாடி 3.2, நாகர்கோவில் 4.2, புத்தன் அணை 18.6, சுருளோடு 8.2, தக்கலை 36, இரணியல் 2, பாலமோர் 12.2, மாம்பழத்துறையாறு 41, திற்பரப்பு 37.9, அடையாமடை 5.1, ஆணைக் கிடங்கு 50.6.
- வருகிற 21-ந்தேதி நடக்கிறது
- லம் விடப்பட உள்ள வாகனங்கள் 19-ந்தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 42 வாகனங்கள் ஏலம் 21-ந்தேதி காலை 11 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. ஏலம் விடப்பட உள்ள வாகனங்கள் 19-ந்தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படும். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்று காலை 8 மணிக்கு ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். ஒரு வாகனத்தை ஏலம் எடுத்த பிறகு மற்றொரு வாகனத்தை ஏலம் எடுக்க வேண்டும் என்றால் மீண்டும் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.
நுழைவு கட்டணம் ரூ.10 செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்துக்கு ஏல தொகையுடன் சேர்த்து 18 சதவீத ஜி.எஸ்.டி.யை ஒரு வாரத்துக்குள் செலுத்தி எடுத்துக்கொள்ளலாம். ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தியவர்கள் வாகனத்தை ஏலம் எடுக்கவில்லை என்றால் முன்பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை (நாகர்கோவில்) 04652-220377, தக்கலை-04651-271198, துணை போலீஸ் சூப்பிரண்டை 04651-224833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோவில்களில் ஒலித்த சரணகோஷம்
- கன்னி சாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர்.
கன்னியாகுமரி, நவ.17-
சபரிமலைக்கு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். கார்த்திகை 1-ம் தேதியான இன்று சபரி மலைக்கு செல் லும் பக்தர் கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி னார்கள். இதையடுத்து முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி னார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடினார்கள். பின்னர் கடற்கரையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். குருசாமிகள் மற்ற சாமி களுக்கு மாலை அணிவித்தனர். கன்னி சாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர். சிறுமிகளும் தங்களது பெற்றோருடன் வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார் கள். சாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் கடற்கரையில் எதிரொலித்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அங்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங் கினார்கள். கடற்க ரையில் புனித நீராடிய பக்தர்கள் பகவதி அம்மனை வழிபட்டு சென்றனர். நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கருப்பு மற்றும் நீல உடை அணிந்து அய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள். குருசாமிகள் கன்னிசாமிகளுக்கு மாலை அணிவித்தனர். துளசி மாலை அணிந்து பக்தர்கள் விரதம் தொடங்கினார்கள். கன்னிசாமிகள் குருசாமிகள் காலை தொட்டு வணங்கி மாலை அணிந்து கொண்டனர். சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமார கோவில், வேளிமலை முருகன் கோவில், பார்வதி புரம் அய்யப்பன் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். அனைத்து கோவில்களிலும் சாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தது. மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் தினமும் காலை, மாலை கோவில்களில் வழிபட்டு சபரிமலை கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்கு இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள்.
கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் செய்யப்படும். கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் பஜனை பாடி வழிபடுவார்கள். பெண்கள் வீடுகளில் விளக்கேற்றியும், வழிபாடு நடத்துவார்கள்.
- காதல் விவகாரம் என்னுடைய தாயாருக்கு தெரியவந்தது. எங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- காதலன் வீட்டிற்கு வந்த தகவலை எனது தாயாருக்கு செல்போன் மூலமாக தெரிவித்தேன்.
நாகர்கோவில்:
குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு அதே பகுதியை சேர்ந்த சுனிதா என்ற பெண் சென்றார். அப்போது தனது மகள் அமர்சியாவை வீட்டுக்குள் புகுந்து ஒரு கும்பல் கடத்தி சென்றுவிட்டதாக கூறினார். இது தொடர்பாக சுனிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது மகளை அதே பகுதியை சேர்ந்த டேனியல் ஆகாஷ் என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக கூறினார்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். டேனியல் ஆகாஷ் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அமர்சியா அங்கு இருந்தார். அப்போது அமர்சியாவிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அமர்சியா தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தான் விருப்பப்பட்டு தான் டேனியல் ஆகாஷ் வீட்டிற்கு வந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து அமர்சியா, டேனியல் ஆகாஷ் இருவரையும் குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு சுனிதாவும் வந்திருந்தார். இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அமர்சியா பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். அப்போது அவர் கூறியதாவது:-
டேனியல் ஆகாஷை நான் காதலித்து வருகிறேன். காதல் விவகாரம் என்னுடைய தாயாருக்கு தெரியவந்தது. எங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனது தாயார் என்னை தனி அறையில் அடைத்து வைத்திருந்தார். தரையில் கல் உப்பை போட்டு முட்டி போட்டு நடக்க வைத்து கொடுமைப்படுத்தினார். இதனால் அவரிடம் இருந்து தப்பித்து காதலன் வீட்டில் தஞ்சம் அடைந்தேன். நான் எனது காதலன் வீட்டிற்கு வந்த தகவலை எனது தாயாருக்கு செல்போன் மூலமாக தெரிவித்தேன்.
அதன் பிறகு எனது தாயார் இங்கு வந்து எனது தலைமுடியை பிடித்து என்னை சரமாரியாக தாக்கினார் என்று கண்ணீர் மல்க கூறினார். இதை கேட்ட போலீசார் சுனிதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அமர்சியாவிற்கு 19 வயது கடந்து விட்டதால் போலீசார் அவர் விருப்பப்படி தான் அனுப்ப முடியும் என்று கூறினார்கள்.
அமர்சியா தனது காதலன் டேனியல் ஆகாசுடன் செல்வதாக கூறினார். போலீசார் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு வாழ்த்தி அனுப்பி வைத்தனர். சுனிதா ஏமாற்றத்துடன் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறினார். இதனால் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- டாக்டர்கள் அரிஸ்டோ பியூலாசை பரிசோதித்தபோது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
- போலீசார் சதாம் உசேன், பிரபுஷாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகர்கோவில்:
நித்திரவிளை அருகே காஞ்சாம்புரத்தை சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது மனைவி பிரபுஷா. இவர்களது மகன் அரிஸ்டோ பியூலாஸ் (வயது 1½).
இவர்கள் தற்பொழுது அஞ்சுகிராமம் அருகே வசித்து வருகிறார்கள். சதாம் உசேன் அந்த பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அரிஸ்டோ பியூலாஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். டாக்டர்கள் அரிஸ்டோ பியூலாசை பரிசோதித்தபோது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அரிஸ்டோ பியூலாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் சதாம் உசேன், பிரபுஷாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இருவரையும் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரிஸ்டோ பியூலாஸ் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது உடலில் காயங்கள் உள்ளதையடுத்து அவரை கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரை கொன்றது யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 1½ வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரு சில பயணிகள் ரெயிலில் இப்படி செய்யலாமா? என கேட்டு கண்டித்தது மட்டுமின்றி அறிவுரையும் கூறினர்.
- ரெயில் பெட்டிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.
நாகர்கோவில்:
பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலையில் பெங்களூரில் இருந்து புறப்பட்ட ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
இன்று அதிகாலையில் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 5.30 மணியளவில் நெல்லை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ஏராளமான பயணிகள் நாகர்கோவிலுக்கு வருவதற்காக ரெயிலில் ஏறினர். அதிகாலை நேரம் என்பதால் வெளியூர்களில் இருந்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பயணிகள் தூங்கி கொண்டிருந்தனர்.
அந்த ரெயிலின் எஸ்-1 பெட்டியில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒரு வரும் பயணம் செய்தனர். நெல்லை வரை மேலடுக்கு படுக்கையில் (இருவரும் ஒரே இருக்கையில் வந்தனர்) வந்த ஜோடி, சிறிது நேரத்தில் அந்த பெட்டியில் ஆட்கள் இல்லாத இருக்கைக்கு சென்றது.
பின்பு இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்து சில்மிஷத்தை தொடங்கினார்கள். நேரம் செல்லச் செல்ல அந்த ஜோடியினர் எல்லை மீறி சென்றனர். இருவரும் மாறி மாறி முத்தமழை பொழிந்தனர். ஓடும் ரெயிலில் மாறி மாறி கட்டி அணைப்பது, முத்த மழை பொழிவது என சல்லாப்பத்தை தொடர்ந்தனர்.
அந்த பெட்டியில் மற்ற பயணிகள் இருப்பதை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் அத்துமீறல் எல்லை மீறி செல்லவே, அந்த பெட்டியில் இருந்த சக பயணிகள் முகம் சுளித்தனர். மேலும் அந்த ஜோடியை எச்சரித்தனர்.
ஒரு சில பயணிகள் ரெயிலில் இப்படி செய்யலாமா? என கேட்டு கண்டித்தது மட்டுமின்றி அறிவுரையும் கூறினர். இதனால் அந்த ஜோடி முகத்தை மறைந்தபடி அமர்ந்து கொண்டது. இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தபோதே பெங்களூரு ரெயில், நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
இதையடுத்து அந்த ஜோடி ரெயிலை விட்டு இறங்கி தலை தெறிக்க ஓட்டம் பிடித்தது. அந்த ஜோடி நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு வீட்டிற்கு வரும் போது ஓடும் ரெயிலில் எல்லை மீறியதும் தெரிய வந்தது.
ரெயில்களில் இது போன்ற அறுவறுக்கத்தக்க செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் குடும்பத்துடன் வரும் பயணிகள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ரெயில் பெட்டிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- திருநெல்வேலி வந்தே பாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது போன்ற ரெயில் நீட்டிப்பிற்கான கோரிக்கைகளை முன் வைத்தார்.
- கொரோனா காலத்திற்கு முன் இருந்தது போன்று ரெயில் நிறுத்தங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் சர்மா நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் ஆய்வுக்காக வருகை தந்த போது அவருடன் விஜய் வசந்த் எம்.பி.யும் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கன்னியாகுமரி மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.
வேளாங்கண்ணி செல்ல வாராந்திர சிறப்பு ரெயில் தேவையை வலியுறுத்தினார். ஐதராபாத் சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது, திருநெல்வேலி வந்தே பாரத் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது போன்ற ரெயில் நீட்டிப்பிற்கான கோரிக்கைகளை முன் வைத்தார்.
கொரோனா காலத்திற்கு முன் இருந்தது போன்று ரெயில் நிறுத்தங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் அதிகமாக பயணம் செய்யும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்வதால் கூடுதலாக ஒரு நிறுத்தம் தேவை என்றும் கேட்டுக்கொண்டார்.
நாகர்கோவில் சந்திப்பு மற்றும் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் இந்த ரெயில் நிலையங்களை நவீன மயமாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விஜய் வசந்த் எம்.பி. கேட்டுக்கொண்டார்.
- ராஜ்குமாருக்கும் 5 பேர் கொண்ட கும்பலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
- ராஜ்குமாரை தாக்கிய கும்பல் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி சென்றனர்.
தருமபுரி:
தருமபுரி அடுத்த ஆட்டுக்காரன்பட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணிக்கு மேல் அருந்ததியர் காலனியில் 5 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்து அங்கு வசித்து வந்த சுப்பிரமணி மகன் ராஜ்குமார் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். பின்னர் ராஜ்குமாருக்கும் 5 பேர் கொண்ட கும்பலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் 5 நபர்களும் சேர்ந்து ராஜ்குமாரை சரமாரியாக தாக்கினர்.
அதில் ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜகுமாரி வெட்ட சென்றபோது அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் கூச்சலிடவே ஆட்டுக்காரன்பட்டி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தடுத்து 5 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தனர். அதற்குள் ராஜ்குமாரை தாக்கிய கும்பல் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட ராஜ்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை செய்ததில் தொவரந்தொட்டி, பகுதியைச் சார்ந்த தெரிந்த நபர்கள் 5 பேர் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே ஆட்டுக்கார பட்டியில் ஆதி திராவிட நலத்துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டாவிற்காக ஒதுக்கிய நிலம் சம்பந்தமாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த பகுதிக்குள் புகுந்து 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வாலிபரை தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்தியா கூட்டணி உறுதியானதா என்பது கேள்வி குறியாக உள்ளது
- நாகரில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
நாகர்கோவில், நவ.16-
ராஜாக்கமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் அமுதன்-மோனிஷா திருமணத்தை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அமுதன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளேன். நேற்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம், கோவில்களுக்கு சென்று விட்டு திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளேன். சென்னை மெட்ரோ சிட்டியாகும் ஒரு இடத்தில் ரோடு போட்டால் மற்ற இடத்தில் பள்ளம் தோண்டி வருகிறார்கள்.
அதை மூடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மழை நீர் வடிகால் வேலை ஆரம்பித்து கடந்த 2½ ஆண்டுகள் ஆகிறது. பள்ளம் தோன்றுவதில் வேகத்தை காண்பிக்கும் அரசாங்கம் அதை மூடுவதில் காட்டுவதில்லை. இதனால் இருச்சக்கர வாகனங்கள், ஆட்டோ வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
எனவே தமிழக அரசு சிங்கார சென்னை சிங்கப்பூருக்கு இணையான சென்னை என்று கூறி அரசு அதற்கான வழியோ முயற்சிகளோ எடுக்கவில்லை. உடனடியாக மழைநீர் வடிகால் சரி செய்யும் திட்டத்தை சரி செய்து மக்களை பாதுகாப்பாக பயணம் செய்ய சாலை அமைக்க வேண்டும். தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை தீர்மானம் செய்பவர்கள் மக்கள்தான். யார் எஜமானர்கள் என்பதை மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாகும்.
தே.மு.தி.க. தற்பொழுது யாருடனும் கூட்டணியில் இல்லை. நட்பு ரீதியாக அனைவரும் எங்களுடன் பேசி வருகிறார்கள். ஆனால் யாருடன் கூட்டணி என்ற இறுதி அறிவிப்பு எந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை தலைவர் தான் ஜனவரி மாதத்தில் அறிவிப்பார். அதுவே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, அதுவே இறுதியான அறிவிப்பாகும். எந்த கட்சியும் கூட்டணி குறித்து இதுவரை பேசவில்லை. தி.மு.க. ஒரு கூட்டணி அமைத்து பயணித்து வருகிறார்கள் . மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்தியா கூட்டணி கடைசி வரைக்கும் உறுதியான கூட்டணியா என்பதை கேள்விக்குறியாக உள்ளது. அதில் இருக்கின்ற அத்தனை மாநில முதல்-அமைச்சர்களும் அடுத்த பிரதமரும் நான்தான் என்கிறார்கள். ஒருவர் தான் பிரதமராக வர முடியும். அவர்கள் கூட்டணியில் முரண்பாடு உள்ளது. அந்த கூட்டணி இறுதிவரை செல்லுமா பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மோடி உள்ளார். எந்த கூட்டணி சரியான கூட்டணி. இறுதி கூட்டணியார் வெல்லப்போகிறார் என்பதை ஜனவரி மாதத்தில் தே.மு.தி.க. முடிவு செய்யும் . யாரும் நீட் தேர்வை பற்றி பேசவில்லை. உதயநிதி மட்டும் தான் அதை பற்றி பேசி வருகிறார். 50 லட்சம் கையெழுத்து என்று கூறி வருகிறார். எல்லாமே கண்துடைப்பாக தான் நான் பார்க்கிறேன். மாணவர்களை குழப்பாமல் இருந்தாலே போதும். மாணவர்கள் படித்து தேர்வு எழுத தயாராகிவிடுவார்கள்.
நீட் தேர்வு வராது வராது என்று கூறிவிட்டு மாணவர்களை குழப்பி விட்டு அவர்களை படிக்கவும் விடாமல் ஒரு தெளிவான முடிவை எடுக்கவிடாமல் உதயநிதி பேசி வருகிறார். நீட் தேர்வு ஒழிக்க முடியாமா என்பது கேள்விக்குறிதான். மாணவர்கள், பெற்றோர்கள் தெளிவாகி விட்டனர். நீட் தேர்வை ஒழிப்பது கடினமாகும். மாணவர்கள் பள்ளிக்கூடங்கள் முடித்து வீட்டிற்கு வந்தவுடன் டியூசனுக்கு செல்கிறார்கள். பள்ளிகளில் சரியான கல்வியை கொடுத்தால் இதுபோன்ற கோச்சிங் சென்டர், டியூஷன் சென்டர் செல்ல தேவை இல்லை. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர உறுதியாக அறிவிக்கப்பட்ட தேர்வு வராது என்று கூறுவதற்கு பதிலாக தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை பள்ளியிலேயே கோச்சிங் கொடுத்து தேர்வில் வெற்றி பெற பழக்கப்படுத்த வேண்டும்.
தி.மு.க. மாநாடு நடத்துவது புதிதல்ல. எப்பொழுதும் ஆட்சிக்கு வந்தால் மாநாடு நடத்தி கொண்டு தான் வருகிறார்கள். கலைஞர் உரிமை தொகை திட்டம் வழங்குவது வெற்றி பெறவில்லை. தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் வறுமை இல்லாத நேர்மையான ஆட்சியை வழங்குவோம். படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயமாக வழங்கப்படும். மருத்துவமும், கல்வியும் இலவசமாக வழங்கப்படும்.
மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது இதெல்லாம் கண்துடைப்பாகும். இதனால் மக்களுக்கு பயன் இல்லை. இதனால் யாரும் ஆதாயம் அடையப்போவதில்லை. தொலைநோக்கு பார்வையோடு சரியான திட்டங்களை மக்களுக்கு செய்ய வேண்டும். அதுதான் மக்கள் வரவேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 77 அடியில் வந்த பிறகு மட்டுமே மறுகாலை திறக்க நடவடிக்கை
நாகர்கோவில், நவ.16-
நாகர்கோவில் கலெக் டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சங்க இணை பொறியாளர் சிவகாமி, வேளாண் துறை அதிகாரி வாணி மற்றும் விவசாயிகள் வின்ஸ்ஆன்றோ, புலவர் செல்லப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விவசாயி களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து விவசாயிகள் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் திருப்பதிசாரம் விதைகள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அருமனை அரசு ஆஸ்பத்திரியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் வனத்துறையினர் குரங்குகளை அந்த பகுதியில் விட்டு செல்வதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் 48 அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 77 அடியில் வந்த பிறகு மட்டுமே மறுகாலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிபி சேனல் பகுதியில் கடந்த 10 நாட்களில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சானல்களை தூர்வாரி தூய்மைப்படுத்தி இருந்தால் உடைப்பு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகத்தான் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை பகுதியை சுற்றுலாதலமாக மாற்றக்கூடாது. பொது பணித்துறைக்கு சொந்தமான இடங்களை ஊராட்சிக்கு வழங்கக்கூடாது.மாம்பழத்துறையாறு அணைப்பகுதியை சுற்றி உள்ள இடங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோவாளை மலர் ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு பகுதியை வேறு உபயோகத்திற்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.அதை வேறு உபயோகத்திற்கு வழங்கக்கூடாது. நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடந்து முடிந்து தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவது போன்ற அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈசாந்திமங்கலம், வடக்கு மாங்குளம் பகுதியில் மறுகால் ஓடை முட்புதர்நிறைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மலைப்பாம்புகள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே அந்த முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லின் ஈரப்பதத்தை அதிகரித்து வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் தேங்காய் விவசாயிகள் அதிகமானோர் உள்ளனர். தேங்காய்க்கு கிலோ ரூ.35 நிர்ணயம் செய்ய வேண்டும். நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்தது போல் தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே தென்னை விவசாயத்தை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், திருப்பதிசாரம் விதை நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து விவசாயிகளுக்கு தரமான விதை வழங்கப்பட்டு வருகிறது. டி.பி.எஸ்.4 குறுகிய கால நெற்பயிர்கள் 95 நாட்களில் அறுவடை செய்யப்படும். குறுகிய கால பயிர்கள் குறைவான அளவில் மகசூல் கிடைக்கும். நீண்டகால பயிர்களுக்கு தான் மகசூல் அதிக அளவில் கிடைக்கும்.
டி.பி.எஸ். 5 ரக நெற்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு பலமுறை அறிவுறுத்தி உள்ளோம். இந்த நெல் பயிரை சாகுபடி செய்யும் போது மகசூல் அதிகம் கிடைப்பதுடன் எந்த மழை பெய்தாலும் நெற்பயிர்கள் சாய்ந்து தரையில் விழாத நிலையில் இருக்கும். ஆனால் அம்பை 16 பயிர் செய்தால் மழை நேரங்களில் அந்த நெல் சாய்ந்து விடும். குரங்குகள் வனப்பகுதியில் மட்டுமே விடப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தில் பி.பி. சேனலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
மாம்பழத்துறையாறு அணைப்பகுதியில் உள்ள முட்புதர்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தோவாளை மலர் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள 11 ஏக்கர் நிலத்தை அவர்களே பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். தேங்காய் விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக திட்டம் எதுவும் தற்போது இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நாளை தொடங்கி 17 நாட்கள் நடக்கிறது
- விழாவுக்கான ஏற்பாடுகளை மாதவரம் ஊர் நிர்வாக குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தில் ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திரு ஏடு வாசிப்பு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி வரை 17 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு திருஏடு வாசித்து விளக்க உரை நடக்கிறது.
3-ம் திருவிழாவான 19-ந்தேதி பகல் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு மற்றும் சமபந்தி விருந்து நடக்கிறது. 15-ம் திருவிழாவான டிசம்பர் 1-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதையொட்டி அன்று இரவு 9.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில் அய்யா எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து அன்னதா னம் நடக்கிறது. டிசம்பர் 3-ந்தேதி பட்டாபி ஷேக விழா நடக்கிறது.
இதையொட்டி அன்று மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு அன்னதானமும், நள்ளிரவு 12 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை மற்றும் திருவிழாவும் நடக்கிறது. மறுநாள் 4-ந்தேதி அதி காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பால் வைத்து பணிவிடையும் காலை 8 மணிக்கு விழா நிறைவு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாதவரம் ஊர் நிர்வாக குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகிறார்கள்.






