search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி மாதவபுரம் நாராயணசாமி கோவிலில் திரு ஏடு வாசிப்பு திருவிழா
    X

    கன்னியாகுமரி மாதவபுரம் நாராயணசாமி கோவிலில் திரு ஏடு வாசிப்பு திருவிழா

    • நாளை தொடங்கி 17 நாட்கள் நடக்கிறது
    • விழாவுக்கான ஏற்பாடுகளை மாதவரம் ஊர் நிர்வாக குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தில் ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திரு ஏடு வாசிப்பு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி வரை 17 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு திருஏடு வாசித்து விளக்க உரை நடக்கிறது.

    3-ம் திருவிழாவான 19-ந்தேதி பகல் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு மற்றும் சமபந்தி விருந்து நடக்கிறது. 15-ம் திருவிழாவான டிசம்பர் 1-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதையொட்டி அன்று இரவு 9.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில் அய்யா எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து அன்னதா னம் நடக்கிறது. டிசம்பர் 3-ந்தேதி பட்டாபி ஷேக விழா நடக்கிறது.

    இதையொட்டி அன்று மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு அன்னதானமும், நள்ளிரவு 12 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை மற்றும் திருவிழாவும் நடக்கிறது. மறுநாள் 4-ந்தேதி அதி காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பால் வைத்து பணிவிடையும் காலை 8 மணிக்கு விழா நிறைவு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாதவரம் ஊர் நிர்வாக குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×