என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • கரைப்பதற்கு கடும் கட்டுப்பாடு
    • நாகராஜா கோவிலில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் சங்குதுறை பீச்சிலும் கரைக்கப்படுகிறது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் பிர திஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யை மேற்கொண்டு வரு கிறார்கள். பூஜைக்கு வைக்கப்பட்டுள்ள விநாய கர் சிலைகள் குமரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. நாளை மறுநாள் (22-ந் தேதி) சிவ சேனா சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது.

    23-ந் தேதி இந்து மகா சபா சார்பில் வைக்கப் பட்டுள்ள விநாயகர் சிலை கள், நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்த விளை பீச்சில் கரைக்கப்படு கிறது. மணவாளகுறிச்சி பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மணவாளக்குறிச்சி கடலில் கரைக்கப்படுகிறது.

    24-ந் தேதி இந்து முன்னணி சார்பில் வைக்கப் பட்டுள்ள சிலைகள் 11 இடங்களில் இருந்து ஊர்வல மாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சுசீந்திரத்தில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது. தோவா ளையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் சிலைகள், பள்ளி கொண்டான் அணையிலும், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் சங்குதுறை பீச்சிலும் கரைக்கப்படுகிறது.

    தக்கலையில் இருந்து கொண்டு செல்லப்படும் சிலைகள் மண்டைக் காட்டிலும், குலசேகரத்தில் இருந்து கொண்டு செல்லப் படும் சிலைகள் திற்பரப்பு அருவியிலும், கருங்கலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் விநாயகர் சிலைகள் தேங்காய் பட்டனம் கடலி லும் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போல் மேலும் ஒரு சில இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன.

    விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண்பிரசாத் உத்தரவின் பேரில் மாவட் டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள் ளது. மினிலாரி போன்ற 4 சக்கர வாகனங்களில் மட்டுமே சிலைகளை கொண்டு செல்ல வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடத்திலோ, கரைப்பதற்கு கொண்டு செல்லும் ஊர்வலத்திலோ, சிலையை கரைக்கும் இடத்திலோ கண்டிப்பாக பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகின்றது.

    விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்ப டுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிலைகள் கரைப்பதற்கு அறி விக்கப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

    சிலை கரைப்புக்கான ஊர்வலம் காவல் துறை யினர் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப் பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் அனைத்து சிலைகளும் கரைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • மக்கள் நடமாட்டம் இன்றி கடற்கரை வெறிச்சோடியது
    • நிபா வைரஸ் காய்ச்சல் அச்சம்

    கன்னியாகுமரி :

    இந்தியாவின் தென் கெடி முனையில் அமைந்து உள்ள கன்னியாகுமரி உலகப் புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமா கும். இங்கு தினமும் ஆயி ரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சீசன் இல்லாத காலங்களிலும் வாரத்தின் கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் தொடர் விடுமுறை நாட்க ளிலும் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதிய வண்ணமாக இருக்கின்றன.

    இந்த நிலையில் தற்போது கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கிஉள்ளது. இதனால் கேரளாவில் இருந்து குமரி மாவட்ட எல்லையான களியக்கா விளை வழியாக வரும் பயணிகள் கடுமையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகே குமரி மாவட்டத் துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதனால் சுற்றுலாத்த லமான கன்னியாகுமரிக்கு கடந்த சில நாட்களாக கேரள சுற்றுலா பயணி களின் வருகை அடியோடு நின்று போய் விட்டது. கேரளாவின் பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள குமரி மாவட்டம் அமைந்து உள்ளதால் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணமாக உள்ளன. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப் படுகிறது.

    கன்னியாகுமரியில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி கிடக்கின்றன. கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடேஸ்வரசுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமா லய சாமி கோவில் போன்ற பெரிய கோவில்க ளிலும் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்படு கிறது. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் கன்னியாகுமரியில் உள்ள கடை மற்றும் ஓட்டல்களில் வியாபாரம் இன்றி வியா பாரிகள் மிகவும் கவலை அடைந்துஉள்ளனர்.

    • குமரியில் உதவி மையம், இ-சேவை மையங்களில் திரண்ட பொதுமக்கள்
    • வருமான வரி, கள ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    நாகர்கோவில் :

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் பெற குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கள ஆய்வு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. தகுதியான விண்ணப்பங்கள் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் தகுதியான பயனாளிகளுக்கு கடந்த 15-ந்தேதி முதல் செல்போனில் குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. குறுஞ்செய்திகள் வந்தவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் சுமார் 75 சதவீதம் பேருக்கு குறுஞ்செய்திகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான பணம் கிடைக்காதவர்கள் மீண்டும் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் குறுஞ்செய்திகள் வராத நிலையிலும் பெண்கள் ஏராளமானோர் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் 5 ஊழியர்கள் இந்த பணிக்கு நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை, கணினி உதவியுடன் ஆன்லைனில் பார்த்து பொதுமக்களிடம் தெரிவித்தனர். வருமான வரி, கள ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இதேபோல் தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் தாலுகா அலுவலங்களிலும் உதவி மையங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியது. நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் உதவி மையங்கள் இன்று முதல் திறந்து செயல்பட்டது. அதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் அந்த பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து அந்த குறைபாடுகளை எப்படி களைவது என்பது குறித்து அறிவுரைகளை வழங்கி அனுப்பினார்கள்.

    இந்த சூழலில் உதவி மையங்களில் இண்டர்நெட் சேவை திடீரென தடைபட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த பொதுமக்களின் விவரங்களை கேட்டு, அதனை ஒரு நோட்டில் ஊழியர்கள் பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு டோக்கன் கொடுத்து அமர வைக்கப்பட்டனர்.

    இதற்கிடையில் மறு விண்ணப்பத்திற்காக ஏராளமோனார் இ-சேவை மையங்களுக்கு சென்றனர். ஆனால் அங்கு மறு விண்ணப்பத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மறு விண்ணப்பத்துடன் வந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வந்த பணத்தை எடுப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்றதால் அங்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • சுவாமிதோப்பு குரு மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்
    • விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய மாணவர் படை கடற்படை பிரிவு தொடக்க விழா கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமையில் நடந்தது. கல்லூரி தலைவர் மணி குத்துவிளக்கு ஏற்றினார். கல்லூரி செயலாளர் ராஜன், பொருளாளர் சுப்பிரமணியம், துணை தலைவர் சந்திரமோகன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அதிமஹாலிங்கம், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுவாமிதோப்பு குரு மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரியில் தேசிய மாணவர் படை கடற்பிரிவை தொடங்கி வைத்தார். மேலும் கல்லூரியில் என்.சி.சி. அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஜான் ரஸ்கின், தமிழ்த்துறை தலைவர் இளங்குமார், வணிகவியல் துறை தலைவர் தர்ம ரஜினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பேராசிரியர் சுரேஷ் வரவேற்று பேசினார். முடிவில் என்.சி.சி. கடற்படை அதிகாரி பேராசிரியர் பிரபுமாறச்சன் நன்றி கூறினார்.

    பேராசிரியர் கவியரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழாவில் கல்லூரி பொதுக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவ, மாணவிகள், என்.சி.சி. அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.
    • அஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நாகர்கோவில் :

    வேளிமலை பெருஞ் சிலம்பு பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 28). இவர் கடந்த 13-ந்தேதி வீட்டில் இருந்து நாகர்கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஜித், பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் இருந்து வெட்டூர்ணிமடம் நோக்கி சென்றபோது முன்னாள் சென்ற மற்றொரு பைக் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜித் படுகாயம் அடைந்தார்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த அஜித்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அஜித் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான அஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • கடந்த 6-ந்தேதி இரவு ஆலயத்தின் அருகில் உள்ள பங்குத்தந்தை இல்லத்தில் தூங்க சென்றார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மைக்கேல் நியூமேனை தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளத்தை சேர்ந்தவர் மைக்கேல் நியூமேன் (வயது 34). இவர் கன்னியாகுமரி புதுக்கிராமத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6-ந்தேதி இரவு ஆலயத்தின் அருகில் உள்ள பங்குத்தந்தை இல்லத்தில் தூங்க சென்றார். மறுநாள் காலையில் அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுபற்றி ஆலயத்தின் இணை பங்கு தந்தை அந்தோணி பிச்சை கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மைக்கேல் நியூமேனை தேடி வருகிறார்கள்.

    • சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக சுவருக்கு அடிக்கல் நாட்டி கட்டுமான பணி
    • சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் (21-ந்தேதி) காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அவர் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் புதிதாக கட்டப்பட உள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக சுவருக்கு அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைக்கிறார். கன்னியாகுமரி வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • தொல்லியல் ஆலோசகர் பார்வையிட்டார்
    • 9 நிலையுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டிக் கொள்ளலாம்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணி களும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கிறார்கள். 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பரசுராமரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லாதது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. அஸ்திவாரத்தோடு நின்றுபோன ராஜகோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நடந்தது.

    அப்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு வாசலில் 9 நிலையுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரமும், கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரமும் கட்டிக் கொள்ளலாம். அதற்கு முன்னதாக கணபதி ஹோமமும், மிருதிஞ்சய ஹோமமும் நடத்த வேண்டும் என்றும் மூலஸ்தானமாக விளங்கும் 24-வது சக்தி பீடத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திவிட்டு ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்க வேண்டும். சித்திரை மாதத்தில் ராஜகோபுரம் கட்டும் பணியை தொடங்கி கொள்ளலாம் என்று தேவ பிரசன்னத்தில் அருள்வாக்கு கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக தொல்லியல் துறை ஆலோசகர் மணி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் பகவதி அம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டப்பட உள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதேபோல கிழக்கு வாசலில் சாலக்கார கோபுரம் கட்டப்படும் இடத்தையும் தொல்லியல் ஆலோசகர் மணி பார்வையிட்டார்

    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கன்னியாகுமரி :

    பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விரதம் இருப்பதற்கு ஏற்ற நாளாகவும் கூறப்படுகிறது.

    அதனால் புரட்டாசி மாதம் பெரும்பாலானோர் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்க மாக இருந்து வருகிறது. இதனால் புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது. இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி விவேகா னந்தபுரம் விவேகா னந்த கேந்திர கடற்கரை வளா கத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ் தான வெங்கடாஜலபதி கோவிலில் காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசன மும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும், தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இடர்தீர்த்த பெரு மாள் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு நிர்மால்ய பூஜை யும், 9 மணி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கி றது.

    மேலும் குமரி மாவட் டத்தில் உள்ள புகழ்பெற்ற பெருமாள் கோவில்களான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவா ரகை கிருஷ்ணன் கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப்பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ணசாமி கோவில், கன்னியாகுமரி பால கிருஷ்ணசாமி கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகர பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோ வில், வடசேரி பால கிருஷ்ணன் சுவாமி கோ வில், கோட்டார் வாகையடி ஏழகரம்பெருமாள் கோவில், வட்டவிளை தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதப்பிறப்பை யொட்டி சிறப்பு வழிபாடு கள், விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷே கங்கள் அலங்கார தீபாரா தனை போன்றவை நடைபெற்றன. இதனால் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    • பாரதிய ஜனதா பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு
    • இந்திய தண்டனை சட்டம் 341, 294 (பி) 506 (1), பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு

    நாகர்கோவில் :

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. நாகர்கோ வில் அருகே உடையப்பன் குடியிருப்பில் கலைஞர் உரிமை திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சாலையில் கோலமிட்டார்.

    அப்போது தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் ஜெனஸ் மைக்கேல் மற்றும் அம்மு ஆன்றோ ஆகியோ ரும் அங்கே வந்தனர். சாலையில் கோல மிட்டதற்கு அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ராஜேஷ் உள்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. மாவட்டம் முழுவதும் பெரும் பரப ரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்ட ரணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல் தலை மையில் ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் நிர்வாகிகள் சுசீந்திரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தனர்.

    அந்த புகாரில் கடந்த 15-ந்தேதி தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் தொண் டர்கள் இணைந்து உடையப்பன் குடியிருப்பில் தி.மு.க. தொண்டர் வீட்டின் முன்பு கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.

    அப்போது உடையப்பன் குடியிருப்பை சேர்ந்த ராஜேஷ் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர், கலைஞர் உரிமைத்தொகை திட்டம் என்று போடப்பட்ட கோலத்தை அழிக்க முயன்றதுடன் எங்களை மிரட்டினார்கள்.

    மேலும் அரசு வழங்கிய நிதி உதவியையும் கொச் சைப்படுத்தி பேசினார் கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் விசா ரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி, உடையப்பன் குடியிருப்பை சேர்ந்த ராஜேஷ் மற்றும் கண்டால் தெரியும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.

    இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 294 (பி) 506 (1), பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.

    • மாஞ்சோலை எஸ்டேட் நோக்கி நகர்கிறது
    • யானை கூட்டத்துடன் சேர்ந்து சுற்றித்திரிகிறது

    நாகர்கோவில் :

    தேனி மாவட்டம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    பிடிபட்ட யானையை நெல்லை, குமரி மாவட்ட எல்லை பகுதியான முத்துகுளிவயல் பகுதியில் விட்டனர். விடப்பட்ட அரிசிகொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு யானையை தினமும் கண்காணித்து வந்தனர். யானையை விடப்பட்ட நாள் முதல் ஒரு மாத காலத்திற்கு அதே இடத்திலேயே வசித்து வந்தது.

    இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை மெலிந்து காணப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை அந்த பகுதியில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்ந்து உலா வருவது போன்ற காட்சிகளும் வெளியானது. இருப்பினும் வனத்துறையினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    அரிசி கொம்பன் யானை விடப்பட்ட நாள் முதல் தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்காமல் காணப்பட்டது. ஆனால் கடந்த 2 வாரங்களாக யானை தினமும் ஓய்வின்றி 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி திரிகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்ந்து அரிசி கொம்பன் யானை சுற்றி திரிவது தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை விடப்பட்ட பகுதியில் இருந்து நாலுமூக்கு பகுதிக்கு வந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வாழைகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். தற்பொழுது அரிசி கொம்பன் யானை அம்பாசமுத்திரம் அருகே மாஞ்சோலை எஸ்டேட்டை நோக்கி நகர்ந்து வருவதா கவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிலா ளர்கள் தங்கி உள்ளனர். அரிசி கொம்பன் யானை தற்போது அங்கு நகர்ந்து வருவதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து குமரி மாவட்ட வனஅதிகாரி இளையராஜா கூறுகையில், அரிசி கொம்பன் யானை விடப்பட்ட இடத்தில் தான் கடந்த சில மாதங்களாக சுற்றி திரிந்தது. முதலில் தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நடந்த யானை தற்போது 14 கிலோமீட்டர் தூரம் வரை தினமும் நடக்கிறது.

    அந்த பகுதியில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்ந்து அது உலா வருகிறது. யானையை தினமும் வனத்துறையினர் கண் காணித்து வருகிறார்கள் என்றார்.

    • விலை குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    • மலர் வளையம் பக்கத்தில் பூக்களை பாதுகாக்க குளிர்சாதன கிட்டங்கி அமைத்து தர வேண்டும்

    ஆரல்வாய்மொழி :

    குமரி மாவட்டம் தோவாளை பூ சந்தை மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா, வேளச்சேரி மூலம் வெளிநாடுகளுக்கும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகளும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும் பூக்களால் தினசரி வருவாய் பெற்று வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர், ஆவரைகுளம் மாட நாடார் குடியிருப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பிச்சிப்பூ வும், மதுரை, மானா மதுரை, வத்தலகுண்டு, கொடை ரோடு, திண்டுக்கல், ராஜ பாளையம், சங்கரன் கோவில், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து மனம் வீசும் மல்லிகை பூவும், சேலம், ராயக்கோட்டை, தர்மபுரி, ஓசூர், பெங்களூர் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர்ரோஸ் ஆகிய பூக்களும், தென்காசி, புளியங்குடி, அம்பாச முத்திரம், திருக்கண்ணங்குடி ஆகிய ஊர்களில் இருந்து பச்சை துளசி, கொழுந்து, மரிக்கொழுந்து, தோவாளை, செண்பகரா மன்புதூர், தோப்பூர், மருங்கூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து அரளிப்பூ, சம்பங்கி, கோழிக் கொண்டை, அருகம்புல், தாமரை ஆகிய பூக்கள் பூச்சந்தைக்கு வந்து விற்பனையாகி வருகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரிக்கும் என எண்ணிய விவசாயிகள், தற்போது விலை குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    ஒரே ஒரு நாள் மட்டும் ஆயிரத்துக்கும், 1500-க்கும் விற்பனையான பூக்கள், புரட்டாசி மாதம் என்பதால் கோவில் திருவிழாக்கள், திருமணங்கள் போன்ற விசேஷ வீடு இல்லாததால் பூக்கள் விலை மிகவும் குறைந்துவிட்டது.

    குறிப்பாக ஒரு கிலோ பிச்சி ரூ.350-க்கும், மல்லிகைப்பூ ரூ.500-க்கும், அரளிப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும், வாடாமல்லி ரூ.30-க்கும், சிவப்பு கிரேந்தி ரூ.20-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், முல்லை ரூ.300-க்கும், துளசி ரூ.40-க்கும், கொழுந்து ரூ.90-க்கும், மரிக்கொழுந்து ரூ.120-க்கும் மற்ற பூக்களும் விலை குறைந்தே காணப்படுகிறது.

    பூக்கள் விலை குறைவால் விவசாயிகள் பறிப்பு செலவு கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். பூக்கள் அதிகமாக வருகிறது. ஆனால் விலை இல்லை. இதனால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.

    இதுகுறித்து பூ வியாபாரி கேசவ முருகன் கூறுகையில், ஓணத்தை நம்பி விவசாயிகள் அதிகளவு பூக்களை உற்பத்தி செய்தார்கள். விற்பனையும் இல்லை, விலையும் இல்லை. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் விலைகள் இல்லை. இனி ஆயுத பூஜை வந்தால் தான் பூக்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

    மேலும் பூக்களை பாதுகாக்க குளிர்சாதன கிட்டங்கி அமைத்து தந்தால் பூக்களை பாதுகாக்க முடியும் இல்லையென்றால் விற்பனையாகாத பூக்களை மலைபோல குவித்து குப்பை தொட்டிக்கு தான் அனுப்ப முடியும். எனவே அரசு மலர் வணிக வளாகத்தில் அல்லது மலர் வளையம் பக்கத்தில் பூக்களை பாதுகாக்க குளிர்சாதன கிட்டங்கி அமைத்து தர வேண்டும் என கூறினார்.

    ×