search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி மாத பிறப்பையொட்டி குமரி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    புரட்டாசி மாத பிறப்பையொட்டி குமரி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கன்னியாகுமரி :

    பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விரதம் இருப்பதற்கு ஏற்ற நாளாகவும் கூறப்படுகிறது.

    அதனால் புரட்டாசி மாதம் பெரும்பாலானோர் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்க மாக இருந்து வருகிறது. இதனால் புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது. இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி விவேகா னந்தபுரம் விவேகா னந்த கேந்திர கடற்கரை வளா கத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ் தான வெங்கடாஜலபதி கோவிலில் காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசன மும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும், தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இடர்தீர்த்த பெரு மாள் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு நிர்மால்ய பூஜை யும், 9 மணி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கி றது.

    மேலும் குமரி மாவட் டத்தில் உள்ள புகழ்பெற்ற பெருமாள் கோவில்களான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவா ரகை கிருஷ்ணன் கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப்பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ணசாமி கோவில், கன்னியாகுமரி பால கிருஷ்ணசாமி கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகர பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோ வில், வடசேரி பால கிருஷ்ணன் சுவாமி கோ வில், கோட்டார் வாகையடி ஏழகரம்பெருமாள் கோவில், வட்டவிளை தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதப்பிறப்பை யொட்டி சிறப்பு வழிபாடு கள், விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷே கங்கள் அலங்கார தீபாரா தனை போன்றவை நடைபெற்றன. இதனால் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    Next Story
    ×