அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் என்.சி.சி. கடற்படை தொடக்க விழா

சுவாமிதோப்பு குரு மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் என்.சி.சி. கடற்படை தொடக்க விழா
Published on

என்.ஜி.ஓ.காலனி :

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய மாணவர் படை கடற்படை பிரிவு தொடக்க விழா கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமையில் நடந்தது. கல்லூரி தலைவர் மணி குத்துவிளக்கு ஏற்றினார். கல்லூரி செயலாளர் ராஜன், பொருளாளர் சுப்பிரமணியம், துணை தலைவர் சந்திரமோகன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அதிமஹாலிங்கம், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுவாமிதோப்பு குரு மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கல்லூரியில் தேசிய மாணவர் படை கடற்பிரிவை தொடங்கி வைத்தார். மேலும் கல்லூரியில் என்.சி.சி. அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஜான் ரஸ்கின், தமிழ்த்துறை தலைவர் இளங்குமார், வணிகவியல் துறை தலைவர் தர்ம ரஜினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பேராசிரியர் சுரேஷ் வரவேற்று பேசினார். முடிவில் என்.சி.சி. கடற்படை அதிகாரி பேராசிரியர் பிரபுமாறச்சன் நன்றி கூறினார்.

பேராசிரியர் கவியரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழாவில் கல்லூரி பொதுக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவ, மாணவிகள், என்.சி.சி. அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com