என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ஆறுகள் குளங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது.
    • விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் விளைநிலங்கள் சேதமடைய தொடங்கியது.

    தென்தாமரைகுளம்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகள் குளங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. வடக்கு தாமரைகுளத்தில் இருந்து கக்கரம்பொத்தை செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலத்தின் குறுக்கே செல்லும் ஆற்றில் செடி, கொடிகள் சூழ்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது . அதேபோல் வெள்ளம் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் விளைநிலங்கள் சேதமடைய தொடங்கியது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் செடி கொடிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அகஸ்தீஸ்வரம் யூனியன் பொது நிதியில் இருந்து ராட்சத பொக்லைன் மற்றும் ஜே.சி.பி எந்திரம் மூலம் செடி கொடிகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு ஆகியோர் பணியை பார்வையிட்டனர்.

    • குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்.
    • பொதுமக்கள் பரிதவிப்பு.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாமிரபரணி ஆறு வள்ளியாறு, பெரியாறு, கோதையாறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் விளை நிலங்க ளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளா கியுள்ளனர்.

    மாங்காடு-முஞ்சிறை சாலையில் தண்ணீர் தேங்கி யுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி யுள்ளனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவர்கள் தவித்து வருகி றார்கள். திக்குறிச்சி பகுதிகளிலும் குடியிருப்பு களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவிப்பிற்குள் ளாகி உள்ளனர். சுசீந்திரம் பழைய ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெ ருக்கின் காரணமாக சுசீந்திரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. வடக்கு தாமரைகுளம் பகுதியில் தென்னந்தோப்புக்குள் பழையாற்று தண்ணீர் புகுந்துள்ளது. அழிக்கால் பிள்ளைதோப்பு பகுதியிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொது மக்கள் பரித விப்பிற்கு ஆளாகியுள்ள னர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை அப்புறப் படுத்தும் பணியில் பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் அருவியில் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை விதிக்கப் பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. தொடர் மழை யின் காரணமாக நேற்று ஒரே நாளில் 15 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. அகஸ்தீஸ்வரம், கல்குளம், திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களில் 9 மரங்களும் வேரோடு சாய்ந்தன. அகஸ்தீஸ்வரம் தாலு காவுக்குட்பட்ட பகுதிகளில் 3 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மலையோர பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் மழையினால் குலசேகரம், அருமனை, சுருளோடு, தடிக்கா ரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப் பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. மழைக்கு தாழக்குடி அருகே மீனமங்கலம் பகுதியில் வீடு இடிந்து ஒருவர் பலியான நிலையில் நேற்று இரவு குலசேகரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணி உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் மழைக்கு நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • மழையினால் நேற்று ஒரே நாளில் 3800 பேர் பார்த்தனர்.
    • சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இருப்பினும் சீசன் காலங்களிலும் வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால தொடர்விடுமுறை நாட்களிலும் வழக்கத்தை விட அதிகமான அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் பள்ளி களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதாலும், மிலாடி நபி விடுமுறை நாளான கடந்த மாதம் 28-ந்தேதி முதல் காந்தி ஜெயந்தி யான கடந்த 2-ந்தேதி வரை தொடர் விடுமுறை என்ப தால் கன்னியாகுமரிக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர்.

    தொடர் விடுமுறையை யொட்டி கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இந்த மாதம் 3-ந்தேதி வரை 6 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 37 ஆயிரத்து 660 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வை யிட்டு வந்து உள்ளனர். மழையின் காரணமாக நேற்று விடுமுறை விடப்பட்டி ருந்தாலும் 3,800 பேர் மட்டுமே விவேகா னந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர். இதன் மூலம் பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக நிறுவனத்துக்கு சுமார் ரூ.50 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

    • எங்களது நண்பரை தாக்கியதை தட்டி கேட்ட தகராறில் தீர்த்துக்கட்டினோம்
    • கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

    தக்கலை:

    தக்கலை அருகே குழிக்கோடு வயல்கரை பகுதியை சேர்ந்தவர் ரெஜின் (வயது 32). இவரது நண்பர் ராஜேஷ். இவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு அந்த பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்கியது. ரெஜினை அரிவாளாலும், கல்லாலும் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள் ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி ரெஜின் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக கோழிப்போர்விளையை சேர்ந்த வினித் (24), கூட்டமாவு பகுதியை சேர்ந்த பரத் லியோன் (24), குழிக்கோடு பகுதியை சேர்ந்த அருண் (23), ஜெபின் (24), ஜிஜிஸ் (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கள் கூறுகையில், எங்களது நண்பர் அனிசை மதுபோதை தகராறில் ரெஜின் தாக்கினார். இந்த பிரச்சினை தொடர்பாக ரெஜினிடம் கேட்க சென்றோம். இதில் எங்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை சரமாரியாக தாக்கி னோம் என்றனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வினித், பரத்லியோன், அருண், ஜெபின், ஜிஜிஸ் ஆகிய 5 பேரையும் நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

    கொலை செய்யப்பட்ட

    ெரஜின்

    • மாம்பழத்துறையாறு அணை ஒரே நாளில் 13½ அடி உயர்ந்தது
    • மயிலாடியில் 110.2 மில்லி மீட்டர் மழை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் கன மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இடைவிடாது மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. மாலையில் சற்று மழை குறைந்து இருந்த நிலையில் நள்ளிரவு மீண்டும் மழை பெய்தது. இன்று காலையில் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து பள்ளி களுக்கு இன்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள் ளது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.

    நாகர்கோவிலில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. மயிலாடி பகுதியில் நேற்று விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்கு அதிகபட்சமாக 110.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், சுருளோடு, தக்கலை, குளச்சல், மாம்பழத்துறை யாறு, திற்பரப்பு, கோழி போர்விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 1¼ அடியும் பெருஞ்சாணி அணை 2 அடியும் உயர்ந்துள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக மழை பெய்த பிறகும் உயராத நிலையில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. நேற்று ஒரே நாளில் 13½ அடி உயர்ந்துள்ளது.

    இதேபோல் நாகர் கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்ட மும் உயரத் தொடங்கி யுள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 5½ அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு அணை நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப் பட்டுள்ளது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 30.80 அடியாக இருந்தது. அணைக்கு 1546 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 274 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 57.85 அடியாக உள்ளது. அணைக்கு 1564 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 75 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.17 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.27 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 24.61 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 10 அடியாகவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 29.2, பெருஞ்சாணி 67.8, சிற்றாறு 1-42, சிற்றாறு 2-46.4, பூதப்பாண்டி 31.4, களியல் 79, கன்னிமார் 20.2, கொட்டாரம் 62, குழித்துறை 97.2, மயிலாடி 110.2, நாகர்கோவில் 72.2, புத்தன்அணை 63.2, சுருளோடு 56.4, தக்கலை 59.8, குளச்சல் 26.4, இரணியல் 18.2, பாலமோர் 62.6, மாம்பழத்துறையாறு 93.8, திற்பரப்பு 26.6, ஆரல்வாய்மொழி 10.4, கோழிப்போர்விளை 84.5, அடையாமடை 52.3, குருந்தன்கோடு 28, முள்ளங்கினாவிளை 57.8, ஆணைக்கிடங்கு 94, முக்கடல் 26.

    • பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவராண நிதி
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    திருவட்டார்:

    கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சோம்ராஜ் (வயது 55), வாழைத்தார் வியாபாரி. இவரது மனைவி ஜெயசித்ரா (45). மகன் அஸ்வின் (21), மகள் ஆதிரா (24) ஆகியோர் நேற்று வீட்டில் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது நேற்று பெய்த காற்று-மழை காரணமாக இவர்களது வீட்டு பக்கத்து வீட்டிலிருந்த மின்சார வயர் அருகிலுள்ள தகர மேற்கூரையில் பட்டபடி இருந்துள்ளதும் அந்த நேரத்தில் அஸ்வின் எடுத்து வந்த இரும்பு கம்பி, தகர மேற்கூரையில் பட்டதால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததும் தெரியவந்தது. மேலும் அவரை தாய் ஜெயசித்ரா மற்றும் சகோதரி ஆதிரா ஆகியோர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றபோது அவர்களும் மின்சாரம் தாக்கி பலியாகி இருப்பதும் தெரியவந்தது.

    பலியான ஆதிரா 8 மாத கர்ப்பிணி என்பது வேதனையான சம்பவமாக அமைந்தது. இந்த சம்பவத்தில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து விட்டது. அவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் குளச்சலை சேர்ந்த ஸ்ரீசுதன் என்பவருடன் திருமணமாகி உள்ளது.

    கர்ப்பிணியான ஆதிரா வளைகாப்புக்கு பிறகு பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது தான் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். அவரது கணவர் ஸ்ரீசுதன், ஆந்திர மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து உடனடியாக ஊருக்கு புறப் பட்டுள்ளார். இதற்கிடையில் பலியான 3 பேரின் உடல்களும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது.

    அதன்பிறகு கல்லூரி மாணவன் அஸ்வின், தாய் ஜெயசித்ரா ஆகியோரது உடல்கள் ஆற்றூரில் உள்ள அவர்களின் வீட்டின் அருகில் அடக்கம் செய்யப் படுகிறது. கர்ப்பிணி பெண் ஆதிராவின் உடல் அவரது கணவரிடம் ஒப்படைக்கப் பட்டு குளச்சலில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதற்கிடையில் மின்சா ரம் தாக்கி கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் இறந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரி வித்துள்ளார். இந்த துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    குடும்பத்தினரை இழந்து வாடும் சோம்ராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறு தலையும் தெரி வித்துக்கொள்வ தோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தர விட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    • அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
    • வாழை விவசாயிகளும், ரப்பர் விவசாயிகளும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் தங்கள் பயிர்களை இழந்து தவிக்கின்றனர். அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. நெற்பயிர் அறுவடை நடந்து கொண்டிருந்தபோது இந்த மழை பெய்துள்ளதால் முழுமை யான அறுவடை செய்ய முடியாமல் பயிர்களை விவசாயிகள் இழந்துள்ளனர்.

    அதனை போன்று வாழை விவசாயிகளும், ரப்பர் விவசாயிகளும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். வேளாண் துறை அதிகாரி கள் நேரில் சென்று ஆய்வு செய்து சேத விபரங்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் இந்த விவசாயிகளுக்கு தேவையான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.வில் வாழைநார் பயிற்சி வகுப்பிற்கு சென்றார்.
    • 2 பேர் ராஜஸ்ரீயின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் ராஜஸ்ரீ (வயது 37). இவர் மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.வில் வாழைநார் பயிற்சி வகுப்பிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ராஜஸ்ரீயின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து ராஜஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
    • தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பொன் நாடார். இவரது மனைவி ஆர்தர் செல்வி (வயது 72). இவர் குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தக்கலை அருகே குன்னத்துகோணம் பகுதியில் இருக்கும் மகள் டெய்சி வீட்டில் வசித்து வருகிறார். ஆர்தர் செல்வி தினமும் அருகில் உள்ள குன்னத்துகுளத்தில் குளிப்பது வழக்கம்.

    வழக்கம்போல நேற்று அதிகாலை 5 மணிக்கு குளத்தில் குழிப்பதற்கு சென்றவர் நிலை தடுமாறி குளத்தில் விழுந்தார். மழை நேரம் என்பதால் குளத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரத்து அதிகமானதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் இவரை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ஏற்கனவே ஆர்தர் செல்வி இறந்துவிட்டதாக கூறினார்.

    இதுசம்பந்தமாக உறவினர் டெய்சி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாங்காடு-முஞ்சிறை சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
    • திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

    அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாமிரபரணி ஆறு வள்ளியாறு, பெரியாறு, கோதையாறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோர பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும் விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    மாங்காடு-முஞ்சிறை சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள். திக்குறிச்சி பகுதிகளிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர். சுசீந்திரம் பழைய ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுசீந்திரம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. வடக்கு தாமரைகுளம் பகுதியில் தென்னந்தோப்புக்குள் பழையாற்று தண்ணீர் புகுந்துள்ளது. அழிக்கால் பிள்ளைதோப்பு பகுதியிலும் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

    திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் அருவியில் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக நேற்று ஒரே நாளில் 15 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. அகஸ்தீஸ்வரம், கல்குளம், திருவட்டார், கிள்ளியூர் தாலுகாக்களில் 9 மரங்களும் வேரோடு சாய்ந்தன. அகஸ்தீஸ்வரம் தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் 3 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.

    இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மலையோர பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் மழையினால் குலசேகரம், அருமனை, சுருளோடு, தடிக்காரன்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. மழைக்கு தாழக்குடி அருகே மீனமங்கலம் பகுதியில் வீடு இடிந்து ஒருவர் பலியான நிலையில் நேற்று இரவு குலசேகரம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணி உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டம் முழுவதும் மழைக்கு நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • நாகர்கோவிலில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது.
    • பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 30.80 அடியாக இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இடைவிடாது மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.

    மாலையில் சற்று மழை குறைந்து இருந்த நிலையில் நள்ளிரவு மீண்டும் மழை பெய்தது. இன்று காலையில் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து பள்ளிகளுக்கு இன்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.

    நாகர்கோவிலில் இன்று காலை முதலே மழை பெய்து வருகிறது. மயிலாடி பகுதியில் நேற்று விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இன்று காலையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்கு அதிகபட்சமாக 110.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், சுருளோடு, தக்கலை, குளச்சல், மாம்பழத்துறையாறு, திற்பரப்பு, கோழிபோர்விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது.

    தொடர் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 1¼ அடியும் பெருஞ்சாணி அணை 2 அடியும் உயர்ந்துள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக மழை பெய்த பிறகும் உயராத நிலையில் கடந்த 2 நாட்களாக கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

    இதேபோல் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 5½ அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றாறு அணை நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து விடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 30.80 அடியாக இருந்தது. அணைக்கு 1546 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 274 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 57.85 அடியாக உள்ளது. அணைக்கு 1564 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 14.17 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.27 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 24.61 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 10 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 29.2, பெருஞ்சாணி 67.8, சிற்றாறு 1-42, சிற்றாறு 2-46.4, பூதப்பாண்டி 31.4, களியல் 79, கன்னிமார் 20.2, கொட்டாரம் 62, குழித்துறை 97.2, மயிலாடி 110.2, நாகர்கோவில் 72.2, புத்தன்அணை 63.2, சுருளோடு 56.4, தக்கலை 59.8, குளச்சல் 26.4, இரணியல் 18.2, பாலமோர் 62.6, மாம்பழத்துறையாறு 93.8, திற்பரப்பு 26.6, ஆரல்வாய்மொழி 10.4, கோழிப்போர்விளை 84.5, அடையாமடை 52.3, குருந்தன்கோடு 28, முள்ளங்கினாவிளை 57.8, ஆணைக்கிடங்கு 94, முக்கடல் 26.

    • கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • மகள் ஆதிராவுக்கு திருமணமாகி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகவே பெய்து வந்த சாரல் மழை தற்போது கனமழையாக மாறியுள்ளது. கடந்த 4 நாட்களாகவே மாவட்டம் முழுவதும் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

    கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 134 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    மழை பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தொப்பவிளையை சேர்ந்தவர் சேம் (வயது47). இவர் வாழைக்குலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஜெயசித்ரா (45) என்ற மனைவியும், ஆதிரா (24) என்ற மகளும், அஸ்வின் (21) என்ற மகனும் இருந்தனர். மகன் அஸ்வின் கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மகள் ஆதிராவுக்கு திருமணமாகி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து அவர் தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

    இந்தநிலையில் நேற்று சேம் வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்தார். மாலை 6 மணியளவில் அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் இவர்களது பக்கத்து வீட்டின் தகர கூரை மீது மின்ஒயர் பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்துள்ளது. இந்தநிலையில், அஸ்வின் வீட்டில் இருந்த இரும்பு கம்பியுடன் வெளியே வந்தார். அந்த கம்பி எதிர்பாராமல் பக்கத்து வீட்டில் உள்ள தகர கூரையின் மீது உரசியது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து அலறினார். உடனே தாய் ஜெயசித்திரா மற்றும் சகோதரி ஆதிரா ஆகியோர் ஓடி வந்து அவரை பிடித்து காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ×