என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
    • தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், தெங்கம் புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்க மங்கலம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழ மை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை, ஐ.எஸ்.இ.டி., மேல மணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்ம புரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், அனத்தங்கரை, முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன் கோட்ைட, காரவிளை, பருத்திவிளை, வைராக்குடி, கணபதிபுரம், தெக்கூர்,

    தெக்குறிச்சி, காக்காதோப்பு, பழவிளை, வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரிய மாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில் சந்திப்பு மற்றும் ராமவர்மபுரம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை நாகர்கோவில் மின் வினி யோக செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    • வளர்ச்சி பணிகளுக்காக பொது நிதி யிலிருந்து சுமார் ரூ. 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இரணியல்:

    நெய்யூர் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக பொது நிதி யிலிருந்து சுமார் ரூ. 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா பேரூராட்சிக்குட்பட்ட அந்தந்த பகுதிகளில் நடந்தது. பேரூராட்சி தலைவி பி.வி பிரதீபா தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் ஷீலா, அஜின், ஆசிரியர் மேரி லில்லி புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பென் டேவிட் வரவேற்றார்.

    9-வது வார்டு பிலாபிளை செல்லும் சாலையில் அலங்கார கற்கள் பதிக்கும் பணிக்கு ரூ.2 லட்சமும், 8 மற்றும் 9-வது வார்டு குழிவிளையில் இருந்து எரிவிளாகம் பம்பு ரூம் செல்லும் சாலை வரை சாலை சீரமைப்பு ரூ. 9.75 லட்சத்திலும், 14-வது வார்டு இடையன்விளை கிணறு வடக்குபக்கம் முதல் குளம் வரை வடிகால் அமைப்பதற்கு ரூ.4 லட்சத்திலும், 3-வது வார்டு முரசன்கோடு ஆர்சி சர்ச் குறுக்குசாலையில் சிமெண்ட் தளம் அமைக்க ரூ. 6.50 லட்சத்திலும், 7-வது வார்டுக்குட்பட்ட பாதிரிகோடு முதல் முரசங்கோடு இணைப்பு சாலை சீரமைப்பு ரூ. 9.85 லட்சத்திலும் உள்ள பணிகளை குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற தொகுதி தி.மு.க. மேற்பார்வையாளர் உசிலம்பட்டி அருண், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாய சங்கம் கோரிக்கை
    • தமிழக முதல்வர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஆகியோருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    கருங்கல்:

    மிடாலம் ஊராட்சி பகுதியில் உள்ளது பாறை குளம். மிடாலம் பி கிராமத்தில் புல. எண். 219/3- உள்ள இக்குளம் 2.45 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இக்குளத்தில் சிற்றாறு பட்டணங்கால் தண்ணீரை தேக்கி வைத்து அப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு பயன் படுத்தி வருகின்றனர். இக்குளத்து நீரை நம்பியே அப்பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் வாழை, தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.மட்டுமல்லாமல் மிடாலம் ஊராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவதும் இப்பாறைகுளமே.

    இந்நிலையில், சில தனிநபர்களின் நிலத்துக்கு சாலை கொண்டு செல்வ தற்காக இந்த குளத்தின் நடுப்பகுதியில் பக்கச்சுவர் எழுப்பி இந்த குளத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். நீர் நிலைகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாக மீறியும், பொதுப்பணித்துறை அனுமதி பெறாமலும் குளத்தின் நடுவே தடுப்பு சுவர் எழுப்பி உள்ள செயல் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் இப்பணியை துவங்கிய கடமை தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிள்ளியூர் வட்டார விவசாய ஆலோ சனை குழு தலைவர் கோபால் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பொதுமக்கள், விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடுத்து உள்ளார். மேலும் இது சம்பந்தமாக தமிழக முதல்வர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஆகியோருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    • திருவனந்தபுரம் கிம்ஸ் ஹெல்த் ஆஸ்பத்திரியில் நடந்தது
    • 56 வயதானவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து சுமார் 50 கடல் மைல் தூரத்தில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்த போது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 56 வயதானவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை இந்திய கடலோர காவல் படையின் உதவியோடு திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் ஹெல்த் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் சோதனை செய்தபோது மூளை மற்றும் நலனை பாதுகாக்கும் மென்படல சவ்வுக்கும் இடையே ரத்தக்கசிவு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப் பட்டது. இந்த நிலை வலையனையமிடை ரத்தக்கசிவு என மருத்துவ ரீதியாக அறியப்பட்டது.

    மூளையை சுற்றியுள்ள மூளை முள்ளந்தண்டு திரவத்தில் கசியும் ரத்தம் சேர்வது உள் மண்டை அழுத்தம் அதிகரிப்பதற்கு வழி வகுக்கும். இது நோயாளியின் ஆரோக்கி யத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும். குருதி நாள வீக்கத்தினால் ஏற்படும் கிழிசல் ரத்தக்கசிவின் மிக பொதுவான காரணமாகும்.அதைத்தொடர்ந்து அவருக்கு மண்டையோட்டை திறந்து செய்யப்படும் கிரானியோட்டமி என்ற அறுவை சிகிச்சை மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ஆலோசனை யின்பேரில் 5 மணி நேரம் நடந்தது. அதன் பிறகு அவர் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து சொந்த நாட்டுக்கு திரும்பி சென்றார். அவருக்கு அறுவை சிகிச்சையையும் மற்றும் பின் தொடர் சிகிச்சையையும் மேற்கொண்ட குழுவில் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் நிபுணர்கள் டாக்டர்கள் அபு மதன், என்.எஸ். நவாஸ், பாபி ஐப், நரம்பியல் மயக்கவியல் துறையின் டாக்டர் சுசாந்த் பி, உடல் மருத்துவத்துறை நிபுணர் டாக்டர் ேஜ.நித்தா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    • குளச்சல் நகர அ.தி.மு.க.வலியுறுத்தல்
    • குளச்சல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது.

    குளச்சல்:

    குளச்சல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் நடந்தது. நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் எஸ்.எம்.பிள்ளை, நகர அவைத்தலைவர் சிட்டி சாகுல் அமீது, நகர முன்னாள் செயலாளர் பஷீர்கோயா, ஆனக்குழி சதீஸ், நகர இணை செயலாளர் செர்பா, முன்னாள் கவுன்சிலர் பெலிக்ஸ் ராஜன் மற்றும் ஜெகன், வினோத், துபாய் மாகீன், ரமேஷ்குமார், ஜில்லட், ஜோக்கியான், நடேசன், அம்பிலிகலா, சிசிலி, தேவிசக்தி, நிர்மலா பேபி, பவுஸ்தீனம்மாள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்று விசைப்படகு கவிழ்ந்ததில் மாயமான குளச்சல் மீனவர்கள் ஆன்றோ, ஆரோக்கியம் ஆகியோரை மாவட்ட நிர்வாகமும், மீன் வளத்துறையும் துரிதமாக மீட்க கேட்பது, குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வை நியமனம் செய்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது, கழக 52-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வின் 65-வது பிறந்த நாளை வருகிற 17-ந்தேதி குளச்சல் அலுவலகத்தில் கொண்டாடுவது எனவும் வலியுறுத்தப்பட்டது.

    • கலெக்டர் தகவல்
    • தமிழ் வளர்ச்சித்துறையால் 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் ஆர்வலர் களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சித்துறையால் 2015-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் 'தமிழ்ச் செம்மல்' விருதும், விருதாளர்கள் ஒவ்வொரு வருக்கும் விருது தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

    அவ்வகையில், கன்னியா குமரி மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமி ருந்து 2023-ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சித்துறையின் www. tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை உரியவாறு நிறைவு செய்து, தன்விவ ரக்குறிப்பு, நூல்கள் அல்லது கட்டுரை வெளியிட்டு இருந்தால் அது தொடர்பான விவரங்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந் தால் அது தொடர்பான விவரம், தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம் மற்றும் 2 நிழற்படங்கள், ஆற்றிய தமிழ் பணிக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து கன்னியாகுமரி மாவட்டத்தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு 5-10-2023-ம் நாளுக்குள் கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 'தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கன்னியாகுமரி மாவட்டம், (இ) நாகர்கோவில். (தொலை பேசி எண். 04652-234508 என்ற முகவரிக்கு நேரில் அல்லது தொலை பேசி வாயிலாக தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

    திருவட்டார்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் மேக்காமண்டபம் சந்தை பகுதியில் வயதான முதியவர் ஒருவர் மழையில் நனைந்தபடி உடலில் சாக்குப்பையை சுற்றியபடி படுத்திருந்தார். அவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

    இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஜோன், தனது நண்பர்களுடன் அங்கு வந்து, முதியவருக்கு உணவு, புதிய ஆடை வழங்கினர். அவர் வாய்பேச முடியாதவர் என்பதால், அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. தொடர்ந்து அவரை பிலாங்காலை பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். 

    • இன்று (5-ந்தேதி) மாலை 6.30 மணியளவில் தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது.
    • பாலப்பள்ளம் சி.எஸ்.ஐ. ஆயர் சாம் றிச்சர்டு நெல்சன் தலைமை தாங்குகிறார்.

    குளச்சல்:

    குளச்சல் அருகே ஆனக்குழி சி.எஸ்.ஐ. ஆயர் மண்டல திருச்சபையில் 203-வது சபை நாள் இன்று (5-ந்தேதி) மாலை 6.30 மணியளவில் தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது. முதல் நாள் திருச்சபை ஆயர் ஆமோஸ் ஆல்பர்ட் முன்னிலையில் கரும்பாட்டூர் சி.எஸ்.ஐ. ஆயர் ராஜா ஸ்டாலின் சிறப்பு செய்தி அளிக்கிறார்.

    பாலப்பள்ளம் சி.எஸ்.ஐ. ஆயர் சாம் றிச்சர்டு நெல்சன் தலைமை தாங்குகிறார். 2-ம் நாள் கிறிஸ்துபுரம் சி.எஸ்.ஐ. ஆயர் கில்டன் தயானந்த் தலைமை தாங்குகிறார். 3-ம் நாள் கல்லுக்கூட்டம் சேகர சி.எஸ்.ஐ. ஆயர் றிங்கள் ஜெயக்குமார் தலைமை தாங்குகிறார். 3-ம் நாள் காலை 10 மணிக்கு உபவாச கூடுகை நடக்கிறது. 4-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மத்திக்கோடு சேகர ஆயர் ஜெயக்குமார் தலைமையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் சிறப்பு செய்தி அளிக்கிறார். திருச்சபை ஆயர் ஆமோஸ் ஆல்பர்ட் மற்றும் மத்திக்கோடு சேகரத்திற்குட்பட்ட ஆயர்கள், திருப்பணியாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். சிறப்பு செய்தியை தொடர்ந்து கல்வி பரிசு, நன்றி படைப்பு மற்றும் அன்பின் விருந்து ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆனக்குழி சி.எஸ்.ஐ. சபைக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • விஜய்வசந்த் எம்.பி.தகவல்
    • வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரோட்டை கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது:- குழித்துறை ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கிராசிங் எண் 14-ல் ரெயில் போகும் சமயங்களில கேட் நீண்ட நேரமாக அடைத்து வைப்பதின் காரணமாக இருபுறம் அதிகமான வாகன போக்குவரத்து காரணமாக நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த ரோட்டை கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    மேலும் தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நடைக்காவு, சூழால், விளாத்துறை, ஊரம்பு, பைங்குளம், மங்காடு, நித்திரவிளை, முன்சிறை, புதுக்கடை, ஐரேனிபுரம், கொல்லஞ்சி, காரவிளை போன்ற இடங்களில் உள்ள பொதுமக்கள் மார்த்தாண்டம் ரெயில் நிலையம் மற்றும் மார்த்தாண்டம் பஸ் நிலையம் வந்து செல்ல போக்குவரத்து நெருக்கடி காரணமாக சரியான நேரத்திற்குவர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அங்குள்ள மக்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் குழித்துறை ரெயில் நிலையம் அருகில் புதிய ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    விஜய்வசந்த் எம்.பி. ரெயில்வே அதிகாரிகளையும், ரெயில்வே அமைச்சரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பாராளுமன்றத்தில் பேசியதின் மூலமாக ரெயில்வே நிர்வாகம் அந்த இடத்தை ஆய்வு செய்து மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து முழு செலவையும் ஏற்று ரூ.45 கோடி செலவில் புதிய பாலம் அமைக்க முன்வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சீராகுவது மட்டுமல்லாது அப்பகுதி விரைவில் வளர்ச்சி பெறும். அதுபோல நீண்ட நாட்களாக விரிகோடு பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங் கேட் அடிக்கடி மூடப்படுவதால் அங்கு வசிக்கும் மக்களும், வாகன ஓட்டிகளும் மார்த்தாண்டம், நாகர்கோவில், திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டி நீண்ட நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர்.

    மாற்று இடத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைத்தால் விரிகோட்டை சுற்றியுள்ள மக்கள் பள்ளி, கல்லூரி செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் பேசி முழு முயற்சி எடுத்து வருகிறேன். எனவே அப்பகுதி மக்களின் விருப்பத்தின் படி அவர்களின் கோரிக்கை ஏற்றவாறு விரிகோட்டில் விரைவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண் கிராம நிர்வாக அதிகாரி உட்பட 3 பேர் மீது வழக்கு
    • இரட்சணியசேனை ஆலயத்தில் போதகராக பணிபுரிந்து வருகிறார்.

    நாகர்கோவில்:

    ஈசாந்திமங்கலம் அருகே நாவல்காடு துர்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தப்பன் (வயது 62). இவர் இரட்சணியசேனை ஆலயத்தில் போதகராக பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவில் ஜே.எம்.-2 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் இரட்சணியசேனை ஆலயத்தில் போதகராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கும் எறும்புக்காடு தம்மத்துகோணத்தை சேர்ந்த ரகுநாதன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் புத்தன்துறை பகுதியை சேர்ந்த தாமஸ் பெக்கெட் அவருக்கு சொந்தமான இடம் தேரேகால்புதூர், கோதை கிராமம் பகுதியில் உள்ளதாகவும், அந்த நிலத்தை குறைந்த விலையில் வாங்கி தருவதாகவும் என்னிடம் கூறினார்.

    தாமஸ்பெக்ெகட்டிடம் சென்று கேட்டபோது ரகுநாதனிடம் பேசிக்கொள்ளுமாறு கூறினார். இதையடுத்து ஒரு சென்ட் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வீதம் பேசி முடிக்கப்பட்டு முதல் கட்டமாக ரூ.5 லட்சம் பணம் கொடுத்தேன். அதன்பிறகு ரகுநாதன் அவரது மனைவி உஷா தேவி, கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருவதாக என்னிடம் கூறினார். கரம், சிட்டா, பட்டாவை இலவசமாக எடுத்து தருவதாக என்னை நம்ப வைத்து மேலும் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் அந்த இடத்தை கிரயம் செய்து தரவில்லை. இதனால் நான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டேன்.

    ஒரு லட்சத்து 50 ஆயிரம் திரும்பிக்கொடுத்தனர். அதன்பிறகு மீதமுள்ள ரூ.9 லட்சம் பணத்தை திரும்ப கேட்டேன். அப்போது வங்கி கணக்கில் பணத்தை செலுத்துவதாக கூறினார். ஆனால் ரூ.50 ஆயிரத்தை மட்டும் செலுத்தி விட்டு மீதி தொகையை கொடுக்கவில்லை. இதுதொடர்பாக கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், நம்ப வைத்து ஏமாற்றியதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கோட்டார் போலீசார் ரகுநாதன் அவரது மனைவி உஷா தேவி மற்றும் தாமஸ் பெக்கெட் மீது மோசடி உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • 32-வது ஆண்டு விழா கல்லூரி வெள்ளி விழா கலையரங்க த்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
    • படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம், காவல்கிணறு சந்திப்பில் உள்ள ராஜாஸ் பல் மருத்துவ கல்லூரியின் 32-வது ஆண்டு விழா கல்லூரி வெள்ளி விழா கலையரங்க த்தில் 3 நாட்கள் நடைபெ ற்றது. விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியின் சிறப்புகளை பற்றி பாராட்டியதோடு, கல்லூரி நிறுவனர் டாக்டர் ராஜா தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் மாணவ-மாணவிகளிடையே கல்விப்பணியை ஆற்றி ஒரு கல்விப்புரட்சியை ஏற்படுத்தினார் என்று குறிப்பிட்டார். மேலும் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார்.

    விழாவில் ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் வி ஞ்ஞானி டாக்டர் மஞ்சு கலந்துகொண்டு மாணவ-மாணவிகள் ஆராய்ச்சித்து றையில் மேற்படிப்பினை தொடர வேண்டும் அறிவுறு த்தினார்.

    விழாவில் ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஜேக்கப் ராஜா தலைமை உரையாற்றினார். நிர்வாக இயக்குனர் சபீனா ஜேக்கப் சிறப்புரை யாற்றி னார். கல்லூரி இயக்குனர் டாக்டர் பாக்கியராஜ், கல்லூரி முதல்வர் டாக்டர் அலெக்ஸ் மேத்யூ முருப்பல் மற்றும் துணை மற்றும் உதவி முதல்வர்கள், பேராசி ரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். கடந்த 30-ந்தேதி நடை பெற்ற கல்லூரி விழாவில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், டி.வி. புகழ், டாக்டர் ஸ்ரீதர் சேனாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • மரம் மின்சார கம்பி மீது திடீரென்று சாலையின் குறுக்கே விழுந்தது.
    • மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    கொல்லங்கோடு:

    கொல்லங்கோடு - ஊரம்பு சாலையில் சிலுவை புரம் பகுதியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஒரு மரம் மின்சார கம்பி மீது திடீரென்று சாலையின் குறுக்கே விழுந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்ப டுத்தும் பணியை மேற் கொண்டனர். மேலும் இது குறித்து மின்வாரிய அலுவல கத்திற்கும் தகவல் கொடுக் கப்பட்டது. மின் ஊழியர் களும் சம்பவ இடத்திற்கு வந்து மின்சார கம்பியை சரி செய்தனர். எனினும் சாலை யின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×