search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேக்கா மண்டபம் அருகே குளிரில் நடுங்கிய முதியவருக்கு உதவிய கவுன்சிலர்
    X

    மேக்கா மண்டபம் அருகே குளிரில் நடுங்கிய முதியவருக்கு உதவிய கவுன்சிலர்

    • குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

    திருவட்டார்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் மேக்காமண்டபம் சந்தை பகுதியில் வயதான முதியவர் ஒருவர் மழையில் நனைந்தபடி உடலில் சாக்குப்பையை சுற்றியபடி படுத்திருந்தார். அவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

    இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த வார்டு உறுப்பினர் ஜோன், தனது நண்பர்களுடன் அங்கு வந்து, முதியவருக்கு உணவு, புதிய ஆடை வழங்கினர். அவர் வாய்பேச முடியாதவர் என்பதால், அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. தொடர்ந்து அவரை பிலாங்காலை பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.

    Next Story
    ×