search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜாஸ் பல் மருத்துவ கல்லூரியில் 32-வது ஆண்டு விழா
    X

    ராஜாஸ் பல் மருத்துவ கல்லூரியில் 32-வது ஆண்டு விழா

    • 32-வது ஆண்டு விழா கல்லூரி வெள்ளி விழா கலையரங்க த்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
    • படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார்.

    நாகர்கோவில்:

    நெல்லை மாவட்டம், காவல்கிணறு சந்திப்பில் உள்ள ராஜாஸ் பல் மருத்துவ கல்லூரியின் 32-வது ஆண்டு விழா கல்லூரி வெள்ளி விழா கலையரங்க த்தில் 3 நாட்கள் நடைபெ ற்றது. விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியின் சிறப்புகளை பற்றி பாராட்டியதோடு, கல்லூரி நிறுவனர் டாக்டர் ராஜா தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் மாணவ-மாணவிகளிடையே கல்விப்பணியை ஆற்றி ஒரு கல்விப்புரட்சியை ஏற்படுத்தினார் என்று குறிப்பிட்டார். மேலும் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார்.

    விழாவில் ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் வி ஞ்ஞானி டாக்டர் மஞ்சு கலந்துகொண்டு மாணவ-மாணவிகள் ஆராய்ச்சித்து றையில் மேற்படிப்பினை தொடர வேண்டும் அறிவுறு த்தினார்.

    விழாவில் ராஜாஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஜேக்கப் ராஜா தலைமை உரையாற்றினார். நிர்வாக இயக்குனர் சபீனா ஜேக்கப் சிறப்புரை யாற்றி னார். கல்லூரி இயக்குனர் டாக்டர் பாக்கியராஜ், கல்லூரி முதல்வர் டாக்டர் அலெக்ஸ் மேத்யூ முருப்பல் மற்றும் துணை மற்றும் உதவி முதல்வர்கள், பேராசி ரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். கடந்த 30-ந்தேதி நடை பெற்ற கல்லூரி விழாவில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், டி.வி. புகழ், டாக்டர் ஸ்ரீதர் சேனாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    Next Story
    ×