என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பொதுமக்கள் திரளானோர் பார்வையிட்டனர்
    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப் படக்கண்காட்சி நடை பெற்றது.

    இதில் முதல்- அமைச்ச ரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளு படி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப் பட்டதை நேரில் பார்வை யிட்டது. இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலை ஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம், காணி பழங்குடியி னர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது உள்ளிட்ட பல்வேறு துறை களின் சார்பில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது கால மானவர்களின் வாரி சுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது. காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப் படுத்தப்பட்டது.

    மேலும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நலத் திட்ட உதவிகள் வழங்கியது. மாநில அளவிலான விளை யாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தது உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப் பட்டிருந்த புகைப்பட கண் காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு
    • சுமார் 5 மணி நேரம் நடந்த போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது.

    தக்கலை :

    தக்கலை அருகே கோதநல்லூர் முட்டைக்காடு பாறையங்கால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்றது.

    இதன் அருகில் கல்லாம் பொத்தை, கோயிக்காவிளை, கிருஷ்ணன் நகர், செக்காலர் தெரு, குலாலர் தெரு, வழிக்கலாம்பாடு போன்ற ஊர்களில் நூற்றுக்க ணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் தொடக்க பள்ளி, கோவில்கள், சர்ச் போன்ற வை உள்ளன. டவர் அமைத் தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகளால் கேன்சர் போன்ற புற்று நோய்கள் வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் எந்த விதமான அனுமதியும் பெறாமல் செல்போன் டவர் அமைக்கும் வேலையை தனியார் நிறு வனம் தொடங்கியதாக கூறப் படுகிறது. இதை அறிந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டம் செய்த னர். போராட்டத்தில் கோத நல்லூர் பேரூராட்சி தலைவர் கிறிஸ்டல் பிரேமா குமாரி, துணைத்தலைவர் டேவிட், வார்டு உறுப்பி னர்கள் அம்பிகா, சுனிதா, அஜிதா மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குமார புரம் கிராம நிர்வாக அலு வலர் கலைசெல்வன், கொற்றிகோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அரசின் உரிய அனுமதி பெற்று வேலை செய்யலாம் என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 5 மணி நேரம் நடந்த போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது.

    • கொட்டாரத்தில் 74.6 மில்லி மீட்டர் பதிவு
    • மாம்பழத்துறையாறு அணை நிரம்பியது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் க னமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு குளு சீசன் நிலவுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி யுள்ளது.

    குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதியான வைக்கலூர், முஞ்சிறை பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடியாத நிலையில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொட்டாரம் பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், சந்தையடி பகுதிகளில் ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். கொட்டாரத்தில் அதிகபட்ச மாக 74.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவில் பகுதியில் விட்டுவிட்டு தினமும் மழை பெய்து வருகிறது.

    பூதப்பாண்டி, சுருளோடு, தக்கலை, குளச்சல், இரணியல், ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடை யாமடை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    சிற்றாறு அணைப்பகு தியில் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கி யுள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளது. இதனால் கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது. திற்ப ரப்பில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அங்கு மழை விட்டுவிட்டு பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.

    9 நாட்களுக்கு பிறகு அருவியில் குளிப்பதற்கு இன்று அனுமதி அளிக்கப பட்டுள்ளது. சுற்றுலா பயணி கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். மாம்பழத்துறையாறு அணை கடந்த 2-ந்தேதி 3.28 அடியாக இருந்தது. அதன்பிறகு கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 21 நாட்களில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. முழு கொள்ளள வான 54.12 அடி எட்டி நிரம்பி வழிவதையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய தண்ணீரை பாசனத்திற்காக திறந்து விட்டுள்ளனர்.

    இதேபோல் முக்கடல் அணையும் நிரம்பி வருகிறது. நாளைக்குள் முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.46 அடியாக உள்ளது. அணைக்கு 704 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 229 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. அணைக்கு 496 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 23.50 அடியாக உள்ளது. தொடர் மழையின் கார ணமாக மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 125-க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

    நேற்று அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மழைக்கு மேலும் ஒரு வீடு இடிந்துள் ளது. பல்வேறு இடங்களில் நடவு செய்யப்பட்ட நெற்ப யிர்களும், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களும் மூழ்கியுள்ளதால் விவசா யிகள் கவலை அடைந்துள்ள னர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 2.8, சிற்றார் 1-28.2, சிற்றார் 2-32.6, பூதப்பாண்டி 5.2, களியல் 7.4, கன்னிமார் 5.8, கொட்டாரம் 74.6, மயிலாடி 43.2, நாகர்கோவில் 27.2, தக்கலை 22.4, குளச்சல் 13, இரணியல் 15.6, மாம்பழத்துறையாறு 45, திற்பரப்பு 8.2, ஆரல் வாய்மொழி 35, கோழிபோர்விளை 5.3, அடையாமடை 17.2, குருந் தன்கோடு 35.4, ஆணை கிடங்கு 43.6, முக்கடல் 15.4.

    • 7 இடங்களில் பிரபல நகைக்கடை இயங்கி வந்தது.
    • கடந்த 2 மாதமாக நகைக் கடை வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியது

    நாகர்கோவில் : திருச்சியை தலைமை யிடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் போன்ற 7 இடங்களில் பிரபல நகைக்கடை இயங்கி வந்தது. இந்த நகைக்கடையின் கவர்ச்சிகரமான அறி விப்பை நம்பி ஏராளமானோர் பணம் முதலீடு செய்தனர். ஆரம்பத்தில் வட்டி தொகை மாதந்தோறும் வழங்கப்பட்ட நிலையில். கடந்த 2 மாதமாக நகைக் கடை வழங்கிய காசோலை பணமில்லாமல் திரும்பியது.

    அதைத்தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட முதலீட் டாளர்கள் நாகர்கோவில் மற்றும் பல பகுதிகளில் உள்ள பிரணவ் ஜுவல்லரி கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதற்கிடையில் அந்தக் கடை திடீரென மூடப் பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்த னர்.

    அதன்பேரில் பொருளா தார குற்றப்பிரிவு ஐ.ஜி. சத்ய பிரபு பிரியா உத்தரவின் பேரில் நகை கடையின் 11 கிளைகளிலும் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. நாகர்கோ வில் கிளையில் பொருளா தார குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு குமரேசன், இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா,சப்-இன்ஸ்பெக்டர் கள் மேரி அனிதா, இசக்கித்தாய் மற்றும் போலீ சார் நேற்று மாலை சென்றனர்.அவர்கள் கடை ஊழியர்களை ஒரு இடத்தில் அமர வைத்து விட்டு, கடையில் உள்ள நகைகளை ஆய்வு செய்தனர்.

    இன்று 2-வது நாளாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தங்கள் ஆய்வினை தொடர்ந்தனர். கடையில் இருப்பு உள்ள நகைகள், கணக்கு விவரங்கள், முதலீடு செய்தவர்கள் எத்தனை பேர்? என்பது குறித்து போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    • பாதாள சாக்கடை பணி நடைபெற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மூடிகள் சாலையின் மட்டத்தை விட தாழ்வாக காணப்படுகிறது
    • பாதாள சாக்கடை மூடிகள் முதல் கட்டமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

    நாகர்கோவில் :நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைதிட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த பணிகள் தற்பொழுது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    பாதாள சாக்கடை பணி நடைபெற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மூடிகள் சாலையின் மட்டத்தை விட தாழ்வாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சாலையின் மட்டத்தை விட தாழ்வாக காணப்படும் மூடிகளை சீரமைக்க மேயர் மகேஷ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

    இதையடுத்து நாகர்கோவில் முக்கிய சாலைகளில் உள்ள பாதாள சாக்கடை மூடிகள் முதல் கட்டமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் பாதாளசாக்கடை திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட மூடிகள் சாலையின் மட்டத்தை விட தாழ்வாக உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு அதை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூடிகளை குடிநீர் வடிகால் வாரியம் தான் சீரமைக்க வேண்டும்.

    ஆனால் பொது மக்கள் நலன் கருதி மாநகராட்சி சார்பில் சீரமைக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மூடிகளும் சீரமைக்கப்படும். மாநகரப் பகுதியில் 1500 பாதாளசாக்கடை மூடிகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    தெருவிளக்கு பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் வரப்பட்ட நிலையில் அதை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. நாகர்கோவில் மாநகரப் பகுதியில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்க ரூ. 14 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 14251 எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்ட உள்ளது.

    முதல் கட்டமாக 820 எல்.இ.டி.விளக்குகள் ரூ.71 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். 31 வார்டுகளில் இதற்கான பணி நடைபெற்று வருகிறது. கோர்ட் ரோட்டில் இன்று அந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து 15-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பில் காங்கிரீட் சாலை அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

    • பார்வதிபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்: தமிழ்நாடு மின் ஊழியர் சி.ஐ.டி.யூ. மத்திய அமைப்பின் சார்பில் பார்வதிபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. பிரபகுமார் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் செல்லச்சுவாமி, சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் தங்கமோகனன், துணைத்தலைவர் ஜான் சவுந்தரராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மின்சார வாரியத்தில் கடந்த பல வருடங்களாக ஒப்பந்தப் பணியாளர்களாக இருப்பவர்களை நிரந்தரப்படுத்த வேண்டியும், புதிதாக போடப்பட்ட இ-டெண்டர் முறையை ரத்து செய்திட வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடந்தது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்டச் செயலாளர் குணசேகரன், பொருளாளர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பருவமழை காலங்களில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரிய அதிகாரி விளக்கம்பருவமழை காலங்களில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரிய அதிகாரி விளக்கம்
    • பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மழைக்காலங்களில் விபத்தை தவிர்க்கும் பொருட்டு வீடுகளில் இன்வெர்ட்டர் பயன் படுத்தும்போது நுகர்வோர் கள் அதற்கென நியூட்ரல் வயரினை தனியாக பயன்படுத்த வேண்டும். நில இணைப்புக்கானது குறைந்தபட்சம் 3 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும். வீடுகள் மற்றும் கடைகளில் பயன்படுத் தப்படும் கிரைண்டர், குளிர் சாதனப்பெட்டி, அயர்ன் பாக்ஸ், துணி துவைக்கும் எந்திரம் போன்ற சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் பிளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். அவற்றை பயன்படுத்தும்போது காலணிகள் அணிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.

    விவசாய மின் இணைப்பு, வீடுகள் மற்றும் ஓ.எச்.டி. மின் இணைப்புகளில் உள்ள மின் மோட்டர்களில் பணிபுரியும் போது கவனமுடன் பாதுகாப்பாக பணி புரியுமாறும், அருகில் உள்ள வயரிங் மற்றும் சர்வீஸ் வயர்கள் நல்ல நிலையில் உள்ளதையும் சர்வீஸ் பைப்பில் பி.வி.சி. குழாய் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கட்டிட வேலை செய்யும்போது அருகில் போதிய இடைவெளி இன்றி செல்லும் மின்கம்பிகளை மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து மாற்றி அமைத்த பின் பாதுகாப்புடன் பணிபுரிய வேண்டும். குளிர் சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற சாதனங்களை சுத்தம் செய்யும்போது சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் மின் சாதனங்களில் கவனமுட னும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி யும் மின் விபத்துகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சாமிதோப்பில் நடைபெற்றது.
    • சிறப்பாக செயல்பட்டு வரும் ஒன்றிய செயலாளர் பாபுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

    தென்தாமரைகுளம்:

    சாமிதோப்பு, கரும்பாட்டூர், வடக்கு தாமரைகுளம் ஆகிய ஊராட்சிகளின்தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சாமிதோப்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர் நம்பி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ் கலந்துகொண்டு பேசினார். மேலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒன்றிய செயலாளர் பாபுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

    இதில் சாமிதோப்பு தலைமைபதி குருவும், தி.மு.க.வக்கீலுமான ஜனா யுகேந்த், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர்கள் பொன் ஜான்சன், தமிழன் ஜானி, வடக்கு தாமரைகுளம் பஞ்சாயத்து தலைவர் ஆறுமுகம் பிள்ளை, மாவட்ட பிரதிநிதி தமிழ்மாறன், நிர்வாகி தாமரை பிரதாப், கரும்பை மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
    • நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியை சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி தினமும் டியூசனுக்கு சென்று வருவார். அவ்வாறு செல்லும் அந்த மாணவியை வாலிபர் ஒருவர் தினமும் பின் தொடர்ந்து சென்று தாலலை கொடுத்தப்படி இருந்துள்ளார். நேற்றும் அந்த மாணவி வழக்கம்போல டியூசனுக்கு சென்றார். பின்பு டியூசன் முடிந்ததும் இரவில் பீச் ராடு வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது மாணவிக்கு ஏற்கனவே தொல்லை கொடுத்து வந்த வாலிபர் அங்கு வந்தார்.

    அவர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை செய் துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பயத்தில் அலறினார்.இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். அவர்கள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்பு அந்த வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். போலீசார் அந்த வாலிப ரிடம் விசாரணை நடத்தினார்கள். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க விரும்பவில்லை.

    இதனால் அந்த வாலிபர் மீது போலீசாரால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதுபோன்ற செயலில் ஈடுப டக்கூடாது என்று அந்த வாலிபரிடம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து அனுப்பினர். டியூசனுக்கு சென்று வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலி பருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பீச் ரோடு பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

    • நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ்பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 5-ம் திருவிழாவான நேற்று மாலை ஆன்மீக உரையும், இரவு திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் நாட்டிய குழுவினரின் பரதநாட்டியமும் நடந்தது.

    அதன் பிறகு பல வண்ண மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகா ரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது இலங்கையை சேர்ந்த அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள் தலைமையில் இலங்கை பக்தர்கள் கூடை, கூடையாக தாமரை, மரிக்கொழுந்து, கொழுந்து, பிச்சி, முல்லை, ரோஜா உள்பட பல வண்ண மலர்களை தூவி வழிபட்ட நிகழ்ச்சி நடந்தது.

    கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும் போது கோவில் ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடல் பாடியபடி அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிர கார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமர வைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர். நிறைவாக கோவிலில் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராத னையும் நடந்தது.

    6-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பிலும் காலை 10 மணிக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சார்பிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி ஆபர ணங்கள் மற்றும் சந்த னக்காப்பு அலங்காரத்து டன் தீபாராதனையும், அதைத் தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் நடந்தது.

    மாலையில் சாயரட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு வெள்ளிக் காமதேனு வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிர காரத்தை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • தக்கலையில் 27-ந்தேதி நடக்கிறது
    • தொழிற் சங்கங்களின் அலுவலக பொறுப்பாளர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையர் பங்கஜ்வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- வருங்கால வைப்புநிதி நிறுவனம் சந்தாதாரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்களுக்கு வைப்புநிதி உங்கள் அருகில் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன்படி அக்ேடாபர் மாதத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தக்கலை கல்குளம் தாசில்தார் அலு வலகம் அருகில் உள்ள அரசு ஊழியர்கள் சங்கத்தில் வருகிற 27-ந்தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது. இதில் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், ஓய்வூதியர்கள், பிராந்திய குழு உறுப்பினர்கள், தொழிற் சங்கங்களின் அலுவலக பொறுப்பாளர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் பெயர், பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, பணியில் இருந்து விலகிய தேதி ஆகியவற்றிற்கான திருத்தம் தொடர்பாகவும் மனு கொடுக்கலாம்.

    தொழில் நிறுவனங்கள் சட்ட திட்ட விதிகள் தொடர்பான சந்தேகங்கள், யு.ஏ.என். ஒதுக்கீடு செய்தல், புதிய பணியாளர்களை சேர்ப்பது தொடர்பான உதவிகளை பெற இந்த நிகழ்ச்சியை பயன் படுத்தலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் பங்கு தாரர்கள் தங்கள் குறை களை நேரடி யாகவோ, தபால் மூலமாக வோ அலுவலக மின் அஞ்சல் முகவரி ro.nagercoil@epfindia.gov.in மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது எப்படி என்ற கேள்வியும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.
    • 7 வயது சிறுவன் மழைநீர் ஓடையில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இரணியல்:

    இரணியல் அருகே வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற 7 வயது சிறுவன் மழைநீர் ஓடையில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாலமான மழைநீர் ஓடை கட்டப்பட்ட நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது எப்படி என்ற கேள்வியும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.

    இந்த நிலையில் வில்லுக்குறி சந்திப்பில் சுமார் 4 அடி நீளம், 4 அடி உயரம் என கட்டப்பட்ட மழைநீர் ஓடை உள்ளது. ஆனால் இந்த ஓடை தேசிய நெடுஞ்சாலைக்கு அடியில் வெறும் 1 அடி விட்டம் என தூர்ந்துபோய் கிடக்கிறது. இதனாலேயே தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேலும் கேபிள்கள், குடிநீர் குழாய்கள், பிளாஸ்டிக் கழிவுகள் என ஆக்கிரமித்து உள்ள இந்த சிறிய இடைவெளி வழியாகவே சிறுவன் ஆஷிக் அதிர்ஷ்டவசமாக வெளியேறி இருக்கிறான். இந்த மூலையில் சுருங்கிபோய் கிடக்கும் தில்லாலங்கடி மழைநீர் ஓடையை சிலர் சமூக வலைதளத்தில் படம் பிடித்து பரப்பி உள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

    ×