search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிள்ளியூர் வைக்கலூர் பகுதியில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ரூ.7 கோடியில் தடுப்பு சுவர்
    X

    கிள்ளியூர் வைக்கலூர் பகுதியில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ரூ.7 கோடியில் தடுப்பு சுவர்

    • அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் “அ“ கிராமம், பரக்காணி என்னுமிடத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட வைக்கலூர் பகுதியில் மழையால் சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் பார்வையிட்டார். பின்னர், தடுப்புசுவர் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பத்மனாபபுரம் கோட்டம், கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் "அ" வருவாய் கிரா மத்திற்குட்பட்ட வைக்கலூர் பகுதியில் கடந்த 15.10.2023 அன்று இரவு பெய்த கனமழையின் காரணமாக 16.10.2023 அன்று சிற்றார் அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விட்ட காரணத்தினால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெ டுத்து பரக்காணி தடுப்பணை ஓரமாக தண்ணீர் வரப்பெற்று புருஷோத்தமன் நாயர், சுனில்குமார் ஆகியோரின் வீடுகள் சேதமடைந்ததோடு, கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழையின்போது சுமாதேவி வீடும் சேதமடைந்தது.

    மேலும் கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் "அ" கிராமம், பரக்காணி என்னுமிடத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அரிப்பு ஏற்படாதவாறு தண்ணீர் நிரம்பியுள்ள பட்டா நிலத்தில் மண் நிரப்புதல் மற்றும் தடுப்பணை மேலும் நீட்டித்து கட்டுவது தொடர்பான திட்டப்பணி பொதுப்பணி துறையில் நிலுவையில் உள்ளது. இந்த பணியினை விரைந்து முடித்திடக்கோரி அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும், கரைகள் அரிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு சுவர் கட்ட வேண்டியும் அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதனடிப்படையில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அறிவுறுத்தலுக்கிணங்க பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் பாதிக்கப்பட்ட இடத்தினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த 3 குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்கள். அந்த அறிக்கையினை மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக அனுப்பியதை தொடர்ந்து கனமழையினால் வீடுகளை இழந்த வைக்கலூர் பகுதியை சேர்ந்த 3 குடும்பத்தினருக்கும் கொல்லங்கோடு நக ராட்சிக் குட்பட்ட கலிங்கராஜபுரம் பகுதியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

    மேலும், கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போதும் வைக்கலூர் பகுதி அதிக அளவு சேதமடைந்திருந்தது.

    தாமிரபரணி ஆற்றுப்படுகைக்குட்பட்ட வைக்கலூர், ஆற்றங்கரை பகுதியில் அமைந்திருந்த 2 வீடுகள் சேதமடைந்து சாலைகள் அரிப்பு ஏற்பட்டதன் அடிப்படையில், ஆற்றோர பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள நெடுஞ்சா லைத்துறை மற்றும் நீர்வளம் ஆதாரத்துறை யினருக்கு அறிவுறுத்தப்பட் டது.

    அதனடிப்படையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2021-22 கீழ் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று தடுப்பு சுவர் அமைப்பதற்கான பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து, மனோதங்கராஜ், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் திருவட்டார் வட்டம், மேக்கோடு கிராமத்தில் புதிதாக அமையவுள்ள ஊழியர்களின் மாநில காப்பீடு மருத்துவமனைக்கான இடத்தினை பார்வையிட்டார்கள்.

    நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., பொதுப்ப ணித்துறை (நீர்வளம்) துணை செயற்பொறியாளர் பொறியாளர் பாஸ்கர், திருவட்டார் தாசில்தார் முருகன், கொல்லங்கோடு நகராட்சி உறுப்பினர் கமலாசனன் நாயர், ஷீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×