என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உண்ணாமலை கடை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது
    X

    உண்ணாமலை கடை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது

    • போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று கடைகளை சோதனை மேற்கொண்டுள்ளனர்.
    • கடையில் 436 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது இதன் மதிப்பு ரூ.3,500 ஆகும்

    குழித்துறை :

    மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்குட்பட்ட உண்ணாமலை கடை பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, மார்த்தாண்டம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று கடைகளை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது உண்ணாமலை கடை குருசடி வீட்டு விளையைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பவரின் கடையில் 436 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3,500 ஆகும்.எனவே புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×