search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை
    X

    கோட்டார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை

    • பெண் டாக்டர் கூறியுள்ள தகவல்கள் உண்மைதானா? என்பது குறித்த விவரங்களை அவர் பயிற்சி டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.
    • வேறு யாருக்காவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து உள்ளாரா

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டா ரில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஏராளமான உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் மருந்து வாங்கு வதற்கும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் எங்கு பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவருக்கு டாக்டர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெண் டாக்டர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் இன்று ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக பயிற்சி டாக்டர்கள் இரண்டு பேரிடம் விசாரணை நடத் தப்பட்டது. பயிற்சி மாணவி களிடம் தனிஅறையில் சுமார் ஒரு மணி நேரமாக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணை மேற்கொண்டார். பெண் டாக்டர் கூறியுள்ள தகவல்கள் உண்மைதானா? என்பது குறித்த விவரங்களை அவர் பயிற்சி டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.

    புகார் தெரிவித்த டாக்டர் வேறு யாருக்காவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து உள்ளாரா என்பது குறித்த தகவல்களையும் போலீசார் கேட்டறிந்தனர். பெண் டாக்டர் புகார் கூறிய டாக்டர் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறையில் இருந்ததாக உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக அவரிடம் விசாரணை நடத்த போலீ சார் முடிவு செய்துள்ளனர். பெண் டாக்டர் ஒருவருக்கு டாக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு குலசேகரம் அருகே மருத்துவக் கல்லூரி ஒன்றில் கல்லூரி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் பயிற்சி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் நடை பெற்று சில நாட்களிலேயே மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×