என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக-6,அதிமுக-3, காங்கிரஸ்-1, பாமக-1, சுயேச்சை-4.வெற்றி பெற்று திமுக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை கைப்பற்றியது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எணிக்கை நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி கரை அருகே உள்ள கல்லூரியில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு வாக்கு எண்ணிக்கை காலை துவங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக-6,அதிமுக-3, காங்கிரஸ்-1, பாமக-1, சுயேச்சை-4.வெற்றி பெற்று திமுக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை கைப்பற்றியது.

    வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    1வது வார்டு லில்லி மாணிக்கம்(திமுக)-244

    2வது வார்டு பிரகாஷ் (அதிமுக)-511,

    3வது வார்டு நர்மதா (திமுக)-722,

    4வது வார்டு நிர்மலா (திமுக)-391,

    5வது வார்டு தேவி (திமுக)-447,

    6வது வார்டு சினுவாசன் (திமுக)-431,

    7வது வார்டு பார்வதி குப்புசாமி(பாமக)-584,

    8வது வார்டு சாந்தி சதீஷ் (திமுக)-744,

    9வது செல்வமேரிஅருள்ராஜ் (காங்கிரஸ்)-737,

    10வது வார்டு இந்திராணி சுப்பிரமணி( சுயேச்சை)-433,

    11வது வார்டு வீரபத்திரன் (சுயேச்சை)-644,

    12வார்டு கோமளா மோகன்(அதிமுக)-136,

    13வது வார்டு இந்துமதிநவீன் (சுயேச்சை)-658,

    14வது வார்டு சுதாகர்(அதிமுக)-806,

    15வது வார்டு சாந்தகுமார்(சுயேச்சை)-317,


    ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர் நகராட்சியில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் பட்டாபிராம் இந்து கல்லூரி மையத்தில் 21 மேஜைகளில் எண்ணப்படுகிறது.

    திருவள்ளூர்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 118 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகரா ட்சி, 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளுக்கு வாக்கு பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.

    இதில் 315 வார்டுகளில் 825 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் 8 மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் நேரலை சி.சி.டி.வி. கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர் நகராட்சியில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் பட்டாபிராம் இந்து கல்லூரி மையத்தில் 21 மேஜைகளில் எண்ணப்படுகிறது.

    பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளில் தலா 8 மேஜைகளிலும் திருமழிசை பேரூராட்சி 3 மேஜைகளிலும், பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

    திருத்தணி நகராட்சிக்கு திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கலைக்கல்லூரியில் 7 மேஜைகளிலும், திருவள்ளூர் நகராட்சிக்கு திருப்பாசூரில் உள்ள திருமுருகன் கலைக்கல்லுரியில் 12 மேஜைகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

    பொன்னேரி நகராட்சிக்கு உலகநாதன் கலைக்கல்லூரியில் 7 மேஜைகளிலும், ஆரணி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, நாரவாரி குப்பம் பேரூராட்சிகளுக்கு பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளியில் தலா 3 மேஜைகளிலும், பொதட்டூர் பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பேரூராட்சிகளுக்கு பள்ளிப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்ள்ளியில் 3 சுற்றுகளாகவும், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு ஊத்துக்கோட்டையில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் 3 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகள் குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகள், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்டசியில் 18 வார்டுகளில் தேர்தல் நடந்துள்ளது.

    இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை காரப்பேட்டை பொன்னேரி கரையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் நடக்கிறது.

    குன்றத்தூர்-மாங்காடு நகராட்சிகளுக்கு சிறுகளத்தூரில் உள்ள மாதாபொறியியல் கல்லூரியல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் 35 மேஜைகளில் 61 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை 14 மேஜைகளில் 16 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.

    குன்றத்தூர் நகராட்சி 6 மேஜைகளில் 9 சுற்றுகளாகவும், மாங்காடு நகராட்சி 6 மேஜைகளில் 9 சுற்றுகளாகவும், ஸ்ரீபெரும்புதூர், உத்திர மேரூர் பேரூராட்சிகள் தலா 3 மேஜைகளில் 9 சுற்றுகளாகவும் எண்ணப்படுகிறது.

    இதேபோல் வாலாஜாபாத் பேரூராட்சி ஓட்டு எண்ணிக்கை 3 மேஜைகளில் 9 சுற்றுகளாக நடக்கின்றன. வாக்கு எண்ணிக்கையையொட்டி கூடுதல் பாதுகாப்பு போட போலீசார் முடிவு செய்து இருந்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நந்திவரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் நகராட் சிகளுக்கு காட்டாங் கொளத்தூரில் உள்ள ஜே.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், செங்கல்பட்டு நகராட்சிக்கு செங்கல்பட்டில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. மதுராந்தகம் நகராட்சிக்கு மதுராந்தகத்தில் உள்ள சவுபாக்மல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அச்சிறுப்பாக்கம், கருங்குழி பேரூராட்சிகளுக்கு அச்சிறுப்பாக்கத்தில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியிலும், இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு கடப்பாக்கத்தில் உள்ளஅரசு மேல்நிலைப் பள்ளியிலும்,

    மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகளுக்கு திருக்கழுக்குன்றத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மொத்தம் 92 மேஜைகளில் 91 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தாம்பரம் மாநகராட்சியில் அதிகபட்சமாக 49 மேஜைகளில் 20 சுற்றுகளாக நடைபெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69-வது பிறந்த நாளை மார்ச் 1-ந் தேதியில் இருந்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பான முறையில் மாதம் முழுவதும் எழுச்சியுடன் கோலாகலமாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற் குழு உறுப்பினர்கள் கூட்டம் கூடுவாஞ்சேரி என்.பி.ஆர். திருமண மண்டபத்தில் தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

    அனைவரையும் மாவட்டக்கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பேசி முடித்ததும், தீர்மானங்களை விளக்கி மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் உரையாற்றினார். முடிவில் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தமிழக மக்களின் நல்லாதரவுடன் மகத்தான வெற்றியை பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்று மக்கள் மனம் மகிழும் வகையில் நல்லாட்சி நடத்தி, இந்தியாவின் தலைசிறந்த முதல்வர் என்ற வரலாற்று சாதனையை படைத்த அன்புத் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்த நாளை மார்ச் 1-ந் தேதியில் இருந்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் மிகவும் சிறப்பான முறையில் மார்ச் மாதம் முழுவதும் எழுச்சியுடன் கோலாகலமாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அவரது பிறந்த நாளான மார்ச் 1-ந் தேதி காலை 9 மணிக்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய நகர, பேரூர்களில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் கொடி தோரணங்கள் கட்டி, ஒலி பெருக்கி அமைத்து கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது.

    40-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு மதிய உணவு, உடைகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மார்ச் 1-ந் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் மாவட்டத்தில் உள்ள பகுதி, நகரம், ஒன்றியம் பேரூர் வாரியாக தொடர் பொதுக் கூட்டங்கள் நடத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள் உள்ளிட்ட மருத்துவ முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தின் சுவடுகளை பதிவு செய்து உருவாக்கி உள்ள உங்களின் ஒருவன் என்ற வாழ்க்கை பயணம் புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா வருகிற 28-ந் தேதி மாலை 5 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிட உள்ளார். பல்வேறு மாநில முதல்வர்களும் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் திரளாக அணி திரண்டு பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும். விழாவுக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிண்டி கத்திபாரவில் இருந்து பிரம்மாண்ட வரவேற்பும் கொடுக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

    துபாய் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த வங்காளதேச முதியவரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை துபாய்க்கு செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ரிஸ்வான் கான் (வயது57) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்யும் போது அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பாஸ்போர்ட்டை கணினியில் ஆய்வு செய்த போது, அது போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது.

    அவர் வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் மேற்குவங்க மாநிலம் வழியாக வந்து, திரிபுரா மாநிலம் சென்று அங்கு சில ஏஜென்டுகளிடம் போலியான ஆவணங்கள் மூலம் அகர்தலா முகவரியில் இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் வங்காள தேசத்தை சேர்ந்த ரிஸ்வான் கானை கைது செய்தனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 1677 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 200 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 50 வார்டுகளும், குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகளும், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகளும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளும், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளும், உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகளும் என மொத்தம் 155 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

    மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 76 ஆயிரத்து 257பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 338 பேரும் என 3 லட்சத்து 63 ஆயிரத்து 652 பேர் வாக்களிக்க உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 384 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 88 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு 29 நுண்பார்வையாளர்கள் நியக்கப்பட்டும், வெப்கேமரா மூலம் தொடர்ந்து வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகின்றது.

    தேர்தல் பாதுகாப்பு பணியில் 1056 போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தலைமையில் இரண்டு ஏடிஎஸ்பி, எட்டு டி.எஸ்.பி.20 ஆய்வாளர்கள், 100 எஸ்.ஐ என மொத்தமாக 1056 காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் 23 நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் 218 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 448 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 பெண் வாக்காளர்களும், 29 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 680 பேர் வாக்களிக்கிறார்கள்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 50 வார்டுக்கு மட்டுமே இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தற்கொலை செய்துகொண்டதால் அந்த வார்டுக்கு மட்டும் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு மையத்திற்கு வருகை புரியும் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு அறைக்கு செல்லும் முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி மற்றும் கையுறை வழங்கப்பட்டது.

    வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகிறார்கள்.

    ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என்று 396 பேர் போட்டியிடுகின்றனர்.

    மாநகராட்சி முழுவதும் 350 பூத்துகளில் 21, 22, 34, 27, 29, 47 பதற்றமானவை என்று கண்டறியப்பட்டது. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. காலையிலேயே ஏராளமானோர் வாக்களிக்க அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர். திருநின்றவூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 1677 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 200 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாக்களிக்கும் மின்னணு எந்திரம் பழுதடையாமல் கண்காணிக்க ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சிக்கும் 10 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 75 க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தனது மனைவியுடன் செங்கல்பட்டு, அனுமந்தபொத்தேரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அப்போது கலெக்டர் ராகுல்நாத் கூறும்போது, வாக்கு மையங்களில் இருந்து ஓட்டுப்பதிவு எந்திரங்களை அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

    தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. இந்த 70 வார்டுகளிலும் 683 பேர் உறுப்பினர் பதவிகளுக்காக போட்டியிடுகின்றனர். தாம்பரம் மாநகராட்சி முழுவதும் 703 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 67 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்காளர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் கருவி வேலை செய்யவில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த கருவி சரி செய்யப்பட்டது.

    குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு களிலும் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நடுநிலைப் பள்ளியில் ஏராளமான பொதுமக்கள் அதிக அளவில் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் குன்றத்தூரில் உள்ள வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.


    அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலையால் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டில் தேர்தல் நடைபெறவில்லை.
    காஞ்சிபுரம்:

    புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக ஜானகிராமன் என்பவர் போட்டியிட்டார்.

    கடந்த 10-ந் தேதி இவர் திடீரென வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். வேட்பாளர் இறந்ததையடுத்து 36-வது வார்டில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டில் தேர்தல் நடைபெறவில்லை. ஓட்டுப்பதிவு இல்லாததால் அந்த வார்டு பகுதி மட்டும் களையிழந்து காணப்பட்டது. மற்ற இடங்கள் அனைத்திலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    காஞ்சிபுரத்தில் வேட்பாளரை போலீசார் தாக்கியதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்குச்சாவடி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணன் தெருவில் வாக்குச்சாவடி மையம் உள்ளது.

    இங்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சூர்யாவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே வேட்பாளர் சூர்யாவை போலீசார் தாக்கியதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்குச்சாவடி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதனால அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
    மடிப்பாக்கத்தில் வயதான தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம், டாக்டர் ராமமூர்த்தி நகர் 2-வது பிரதான சாலையை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 76). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவருடைய மனைவி பாப்பா (76). ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக நம்பி ராஜனுக்கு நுரையீரல் பிரச்சினையும், பாப்பாவிற்கு கேன்சர் வியாதி இருந்ததாக தெரிகிறது. இதனால் உடல் நலக் குறைவு காரணமாக இருவரும் கடும் அவதி அடைந்தனர். உதவிக்கு யாரும் இல்லாததால் கடும் மன நெருக்கடி இருந்து வந்தனர்.

    இதையடுத்து நம்பிராஜனும், அவருடைய மனைவி பாப்பாவும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். நேற்று மதியம் இவர்கள் வீட்டில் உள்ள 2 அறைகளில் தனித்தனியாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    நேற்று இரவு 8 மணி அளவில் நம்பிராஜனுடைய தம்பி சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்தார். அப்போது நம்பிராஜனும், பாப்பாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வயதான காலத்தில் கவனிக்க ஆள் இல்லாததாலும், உடல்நலக் குறைவு மற்றும் குழந்தை இல்லாத மனவேதனையில் வயதான தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறும் அறிவுரைகளையும் ஏற்று கவனத்துடன் பணியாற்ற வேண்டும். 23 நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 2 நகராட்சி, 3 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 384 வாக்குபதிவு மையங்களில் வாக்கு பதிவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

    2 ஏ.டி.எஸ்.பி, 8 டி.எஸ்.பி., 20 இன்ஸ்பெக்டர்கள், 100 சப் இன்ஸ்பெக்டர்கள், 926 காவலர்கள் என மொத்தம் 1,056 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு பதிவு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசாரை நியமனம் செய்து, அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா காவல் அரங்கில் நடை பெற்றது. அப்போது போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் கூறியதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பதால் அனைவரும் ஆர்வத்துடன் போட்டியிடுகின்றனர். தேர்தலில் ஏதேனும் பிரச்சினை உருவாக்க நினைப்பவர்கள் முழுக்க முழுக்க காவல்துறையை தான் குறிவைப்பார்கள். அதனால் காவல்துறையினர் அனைவரும் கவனமாகவும், நடுநிலைமையோடும் செயல்பட வேண்டும்.

    சிறுசிறு சலசலப்புகள் ஏற்படும் என தெரிந்தவுடன் அதனை வீடியோ பதிவு செய்யவேண்டும்.

    தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறும் அறிவுரைகளையும் ஏற்று கவனத்துடன் பணியாற்ற வேண்டும். 23 நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுர மங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன்.

    இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொலை, மிரட்டி பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 48 வழக்குகள் உள்ளன.

    கடந்த ஒரு ஆண்டில் மட்டும் படப்பை குணா மீது 12 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் அவர் போலீசில் சிக்காமல் இருந்தார்.

    இதைத்தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டது.

    இதன் பின்னர் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். என்கவுண்டருக்கு பயந்து இருந்த படப்பை குணாவின் மனைவி தனது கணவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

    அப்போது போலீசார் தரப்பில் என்கவுண்டர் திட்டம் எதுவும் இல்லை. சரண் அடைந்தால் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என்று தெரிவித்து இருந்தனர்.

    இதற்கிடையே கடந்த மாதம் 25-ந் தேதி ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை கோர்ட்டில் திடீரென சரண் அடைந்தார். பின்னர் அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ஏற்கனவே அவர் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பேன் என்று எழுதிக்கொடுத்ததில் இருந்து மீறியதால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரின் பரிந்துரையின் பெயரில் கலெக்டர் இதற்கான உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.

    ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் அனைவரையும் பிடிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கான கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்தார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-  

    2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கு ஜனவரி 02.01.2022 முதல் 30.04.2022 நள்ளிரவு 11.59 முடிய புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகார நீட்டிப்பு மற்றும் கூடுதல் தொழிற் பிரிவுகள் மற்றும் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் www.skilltraining.in.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.04.2022 இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். சென்னை மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தை தொலைபேசி: 044-22501006 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் விவரம் பெறலாம். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    தேர்தல் நேரத்தில் மிரட்டப்படுவது அச்சுறுத்தப்படுவது தொடர்பாக அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள் தான். அ.தி.மு.க., பா.ம.க.வை விட அதிக அளவு பாதிக்கப்பட்டது நாங்கள்தான்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

    இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பொங்கலுக்கு காசு கொடுப்பேன் என்று சொல்வதும், மகளிருக்கு ரூ.1000 கொடுப்பேன் என்று சொல்வதும் வெற்று அறிவிப்புதான். கூட்டுறவு வங்கியில் நகையை அடமானம் வைத்தவர்கள் தற்போது வட்டி கட்டி அவதிப்பட்டு வருகிறார்கள். அதை பற்றி பேச்சே கிடையாது.

    தேர்தல் நேரத்தில் மிரட்டப்படுவது அச்சுறுத்தப்படுவது தொடர்பாக அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள் தான். அ.தி.மு.க., பா.ம.க.வை விட அதிக அளவு பாதிக்கப்பட்டது நாங்கள்தான். 60 பேருக்கும் மேற்பட்டோர் மிரட்டப்பட்டுள்ளனர்.

    சில இடங்களில் வேட்பாளர்களை 3 நாட்கள், 4 நாட்கள் கடத்தி வைத்திருந்திருக்கிறார்கள். இதனை சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது. இது கொடுங்கோன்மை.இப்படி செய்வதற்கு தேர்தலே வேண்டாம் நாங்கள் வென்று விட்டோம் என அறிவித்து விட்டு போய்விடலாம்.

    தேர்தல் என்றால் முறைப்படி நடக்க வேண்டும், பேரம் பேசாமல் அச்சுறுத்தல் இல்லாமல் நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையும் படியுங்கள்... நீட் விவகாரத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. பொதுவிவாதம் நடந்தால் நானும் தயார்: அன்புமணி அறிவிப்பு

    ×