என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
மடிப்பாக்கம், டாக்டர் ராமமூர்த்தி நகர் 2-வது பிரதான சாலையை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 76). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருடைய மனைவி பாப்பா (76). ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக நம்பி ராஜனுக்கு நுரையீரல் பிரச்சினையும், பாப்பாவிற்கு கேன்சர் வியாதி இருந்ததாக தெரிகிறது. இதனால் உடல் நலக் குறைவு காரணமாக இருவரும் கடும் அவதி அடைந்தனர். உதவிக்கு யாரும் இல்லாததால் கடும் மன நெருக்கடி இருந்து வந்தனர்.
இதையடுத்து நம்பிராஜனும், அவருடைய மனைவி பாப்பாவும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். நேற்று மதியம் இவர்கள் வீட்டில் உள்ள 2 அறைகளில் தனித்தனியாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நேற்று இரவு 8 மணி அளவில் நம்பிராஜனுடைய தம்பி சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்தார். அப்போது நம்பிராஜனும், பாப்பாவும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வயதான காலத்தில் கவனிக்க ஆள் இல்லாததாலும், உடல்நலக் குறைவு மற்றும் குழந்தை இல்லாத மனவேதனையில் வயதான தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 2 நகராட்சி, 3 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 384 வாக்குபதிவு மையங்களில் வாக்கு பதிவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
2 ஏ.டி.எஸ்.பி, 8 டி.எஸ்.பி., 20 இன்ஸ்பெக்டர்கள், 100 சப் இன்ஸ்பெக்டர்கள், 926 காவலர்கள் என மொத்தம் 1,056 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு பதிவு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசாரை நியமனம் செய்து, அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா காவல் அரங்கில் நடை பெற்றது. அப்போது போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பதால் அனைவரும் ஆர்வத்துடன் போட்டியிடுகின்றனர். தேர்தலில் ஏதேனும் பிரச்சினை உருவாக்க நினைப்பவர்கள் முழுக்க முழுக்க காவல்துறையை தான் குறிவைப்பார்கள். அதனால் காவல்துறையினர் அனைவரும் கவனமாகவும், நடுநிலைமையோடும் செயல்பட வேண்டும்.
சிறுசிறு சலசலப்புகள் ஏற்படும் என தெரிந்தவுடன் அதனை வீடியோ பதிவு செய்யவேண்டும்.
தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்கள் கூறும் அறிவுரைகளையும் ஏற்று கவனத்துடன் பணியாற்ற வேண்டும். 23 நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுர மங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன்.
இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொலை, மிரட்டி பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 48 வழக்குகள் உள்ளன.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் படப்பை குணா மீது 12 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் அவர் போலீசில் சிக்காமல் இருந்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை புறநகர் பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டது.
இதன் பின்னர் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். என்கவுண்டருக்கு பயந்து இருந்த படப்பை குணாவின் மனைவி தனது கணவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
அப்போது போலீசார் தரப்பில் என்கவுண்டர் திட்டம் எதுவும் இல்லை. சரண் அடைந்தால் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என்று தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையே கடந்த மாதம் 25-ந் தேதி ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை கோர்ட்டில் திடீரென சரண் அடைந்தார். பின்னர் அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே அவர் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பேன் என்று எழுதிக்கொடுத்ததில் இருந்து மீறியதால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரின் பரிந்துரையின் பெயரில் கலெக்டர் இதற்கான உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்.
ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் அனைவரையும் பிடிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பொங்கலுக்கு காசு கொடுப்பேன் என்று சொல்வதும், மகளிருக்கு ரூ.1000 கொடுப்பேன் என்று சொல்வதும் வெற்று அறிவிப்புதான். கூட்டுறவு வங்கியில் நகையை அடமானம் வைத்தவர்கள் தற்போது வட்டி கட்டி அவதிப்பட்டு வருகிறார்கள். அதை பற்றி பேச்சே கிடையாது.
தேர்தல் நேரத்தில் மிரட்டப்படுவது அச்சுறுத்தப்படுவது தொடர்பாக அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள் தான். அ.தி.மு.க., பா.ம.க.வை விட அதிக அளவு பாதிக்கப்பட்டது நாங்கள்தான். 60 பேருக்கும் மேற்பட்டோர் மிரட்டப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் வேட்பாளர்களை 3 நாட்கள், 4 நாட்கள் கடத்தி வைத்திருந்திருக்கிறார்கள். இதனை சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது. இது கொடுங்கோன்மை.இப்படி செய்வதற்கு தேர்தலே வேண்டாம் நாங்கள் வென்று விட்டோம் என அறிவித்து விட்டு போய்விடலாம்.
தேர்தல் என்றால் முறைப்படி நடக்க வேண்டும், பேரம் பேசாமல் அச்சுறுத்தல் இல்லாமல் நடைபெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்... நீட் விவகாரத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. பொதுவிவாதம் நடந்தால் நானும் தயார்: அன்புமணி அறிவிப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் முதல் முதலாக நடக்கும் தேர்தலில், உறுதியாக மேயராக பா.ம.கவை சேர்ந்தவர் வருவார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் மேயராக பா.ம.க. வெற்றி பெற்றவுடன், போடும் முதல் கையெழுத்து டாஸ்மாக் இல்லாத நகரமாக மாற்றுவது ஆகும். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.
முதல்-அமைச்சர் ஸ்டாலின் நீட் வர அ.தி.மு.க. தான் காரணம் என்று என்கிறார். ஆனால் அ.தி.மு.க. நீட் வர தி.மு.க. தான் காரணம் மாறி, மாறி குறை கூறுகின்றனர். இருவரும் பொது இடத்தில் விவாதம் நடத்த தயார் என்று மாறி மாறி கூறிக் கொள்கிறார்கள். அப்படி பொது விவாதம் நடந்தால் நானும் தயார். இன்று நீட் தேர்வு இருப்பதற்கு காரணம் காங்கிரஸ், தி.மு.க., பா.ஜ.க. , அ.தி.மு.க. என அனைவரும் தான்.
காஞ்சிபுரம் ஏரி மாவட்டம் என பெயர் பெற்ற நிலையில், தற்போது ஏரிகள் எங்கே என தேடவேண்டிய நிலையில் உள்ளது. போலி பட்டு கூட்டுறவு சங்கம் உருவாக்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.
மதுவிலக்கு குறித்து தி.மு.க., அ.தி.மு.க. விவாதத்திற்கு தயாரா? காஞ்சிபுரம் மாநகராட்சியில் பா.ம.க. வெற்றி பெற்று மேயரானால், காஞ்சிபுரம் நகரில் எங்கும் டாஸ்மாக் இயங்க அனுமதி வழங்க மாட்டோம். இதற்கான தீர்மானத்தில் கையெழுத்திடுவதையே முதலில் மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்... வினாத்தாள் கசிந்த விவகாரம்- குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை
காஞ்சிபுரம்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 384 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40 வாக்குச்சாவடிகள், குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளில் 33 வாக்குச்சாவடிகள், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சிகளில் 15 வாக்குச்சாவடிகள் என மொத்தமாக 88 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில், பதட்டமான வாக்குச்சாவடிகளில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.வி.கே நகராட்சி நடுநிலைப்பள்ளி, கைலாச நாதர் நகராட்சி தொடக்கப் பள்ளி, நாராயண குரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும்.
சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, பிள்ளையார் பாளையம், காஞ்சிபுரம் பெருநகராட்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொடக்கப் பள்ளி, வெங்கடாபுரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக் டர் மா.ஆர்த்தி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளான மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து தேவையான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் நாராயணன் உடன் இருந்தார்.
சோழிங்கநல்லூர்:
பள்ளிக்கரணை 189-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வ.பாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார். ராஜேஷ் நகர் பகுதியில் வேட்பாளர் வ.பாபு மளிகை கடைக்கு சென்று இளைஞர்களிடம் தி.மு.க. அரசின் சாதனை களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். வீடு வீடாகச் சென்று பொது மக்கள் முதியவர், பெண்கள், இளைஞர்களிடம் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து உங்கள் உங்களில் ஒருவராக நினைத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அந்த பகுதி மக்கள் அவருக்கு மாலை அணிவித்து ஆர்த்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவருடன் மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் அடுத்த தத்தலூர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ராஜேஷ் (வயது 27). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர் திருக்கழுகுன்றம், தத்தலூர் மெயின் ரோடு சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
வேனில் சிக்கிய மோட்டார் சைக்கிளுடன் சுமார் 100அடி தூரத்திற்கு ராஜேஷ் இழுத்து செல்லப்பட்டார். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்குதிரண்டனர். அவர்கள் விபத்து ஏற்படுத்திய வேனின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தப்பி ஓட முயன்ற வேன் டிரைவரை பிடித்து திருக்கழுகுன்றம் போலீசாரிம் ஒப்படைத்தனர். விபத்து குறித்து திருக்கழுகுன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5-ம் நாளான நேற்று மங்களகிரியின் மீது வள்ளி, தெய்வானையுடன் கந்தசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் முக்கிய வீதிகளிலும் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நாளை (13-ந் தேதி) தேரோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்ய உள்ளனர். தேரோட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாமல்லபுரம், ஆலத்தூர் வழியாக வரும் வாகனங்கள் கிரிவல பாதை வழியாக காலவாக்கம் சென்று ஓ.எம்.ஆர் சாலையில் இணைந்து செல்லலாம். செங்கல்பட்டு, ஆலத்தூர் வழியாக செல்லும் பஸ்கள் நகருக்கு வெளியே நிறுத்தி இயக்கப்படும்.
சென்னையில் இருந்து கேளம்பாக்கம் வழியாக ஓ.எம்.ஆர்.சாலையில் கோயிலுக்கு வரும் வாகனங்கள் நகருக்கு வெளியே புதிய புறவழிச் சாலை மூலம் கோவிலுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.






