என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே உள்ள கொனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது50). தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி சைலஜா. கொனேரிக் குப்பம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.
இன்று காலை சேகர் மோட்டார் சைக்கிளில் விப்பேடு பகுதிக்கு சென்றார். பின்னர் காலை 8.45 மணி அளவில் கொனேரிக்குப்பம் தலையாரி தெரு பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர் கும்பல் சேகரை வழிமறித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் சேகரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
கழுத்து, தலை, கையில் பலத்த வெட்டு காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிருக்கு போராடிய சேகரை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
டி.எஸ்.பி. ஜூலியர் சீசர், இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவம் இடத்தை ஆய்வு செய்தனர். கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. முன் விரோதத்தில் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து சேகருடன் மோதலில் ஈடுபட்டவர்கள் யார்-யார் என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் போது சேகருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் தொழில் போட்டியிலும் மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது.
எனவே இந்த தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க. பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதட்டமான நிலை நீடித்து வருகிறது. இதையடுத்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போரூர்:
மதுரவாயல் சன்னதி தெருவை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் மணிகண்டன் (வயது30) பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை 3 மணி அளவில் மணிகண்டனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர். மணிகண்டனை மீட்டு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது திடீர் சாவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதால் அந்த வார்டில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இதில் தி.மு.க. 31 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 9 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும், பா.ஜனதா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட்ட 17 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்ற 6 பெண்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும், வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களையும் சந்தித்து ஆதரவு பெறும் நடவடிக்கைகளை, அவர்களின் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் முக்கிய நிர்வாகிகள் மூலம் தங்களுக்கு மேயர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கும் வலியுறுத்தி வருகிறார்கள்.
தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளராக உள்ள ராமகிருஷ்ணனின் மனைவி மல்லிகா 18-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். காஞ்சிபுரம் தி.மு.க. நகரச் செயலாளராக இருக்கும் சன்பிராண்டு ஆறுமுகம் மகள் சசிகலா 17-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இவர்கள் இருவரும் மேயர் பதவியை பிடிக்க கடும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இவர்கள் தவிர முன்னாள் எம்.எல்.ஏ. உலகரட்சகன் மகன் ஷோபன்குமாரின் மனைவி சூர்யா 8-வது வார்டிலும், மாவட்ட அவைத் தலைவர் சேகரின் மனைவி விமலாதேவி 2-வது வார்டிலும், தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் யுவராஜின் மனைவி மகாலட்சுமி 9-வது வார்டிலும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ள சீனுவாசனின் மனைவி சாந்தி 32-வது வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களும் மேயர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இவர்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட செயலாளர் சுந்தர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயர் பதவியை கைப்பற்ற 26 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தி.மு.க. 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் மேயர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
போட்டி ஏற்பட்டாலும் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் வெற்றி பெறுவார். மேயர் பதவியை கைப்பற்ற கட்சிகள் இடையே இழுபறி இருந்திருந்தால் தற்போது தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள 36-வது வார்டு தேர்தல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்திருக்கும். ஆனால் தி.மு.க.வுக்கு பெரும்பான்மை இருப்பதால் அங்கு பரபரப்பு இல்லை.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் காந்தி ரோடு பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு அதில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்து மரியாதை செய்யப்பட்டது.
இதேபோல் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் பகுதி, மேட்டு தெரு, காமராஜர் சாலை, பூக்கடை சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் மாவட்டம் முழுவதும் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் உள்ளிட்ட கிளைக் கழகங்கள் தோறும் அ.தி.மு.க. கட்சி கொடி ஏற்றி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டன.
வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே பூவால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு லட்டுகள் வழங்கப்பட்டது. ஆயிரம் பேருக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மைதிலி, காஞ்சி பன்னீர் செல்வம், கே.யூ.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம் பாலாஜி, ஜெயராஜ், படுநெல்லி தயாளன், கரூர் மாணிக்கம், திலக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போரூர்:
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரான கே.கே. நகர் க.தனசேகரன் சென்னை மாநகராட்சி தேர்தலில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 137-வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.
இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் பழனியை விட கூடுதலாக 10ஆயிரத்து 583 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் தனசேகரனை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க, பா. ஜ.க உட்பட அனைத்து அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகளில் மொத்தம் உள்ள 1373 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் தி.மு.க. வேட்பாளர் தனசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தனசேகரன் தன்னை வெற்றி பெற செய்த 137-வது வார்டு மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது 50 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 36-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதால் அந்த இடத்தில் மட்டும் ஓட்டுப்பதிவு நடைபெறவில்லை.
நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க. 32 இடங்களில் வெற்றி பெற்று காஞ்சிபுரம் மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க.-9, சுயேட்சை-6, பா.ம.க.-2, பாரதிய ஜனதா-1 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேயர் பதவியை பிடிக்க வெற்றி பெற்ற தி.மு.க. வார்டு உறுப்பினர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் 4 உறுப்பினர்களிடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது.
18-வது வார்டு உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் 8-வது வார்டு உறுப்பினர் டாக்டர் சூர்யா ஷோபன்குமார், 17-வது வார்டு உறுப்பினர் சகிகலா கணேஷ், 32-வது வார்டு உறுப்பினர் சாந்தி சீனிவாசன் ஆகியோரும் மேயர் பதவியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எணிக்கை நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி கரை அருகே உள்ள கல்லூரியில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு வாக்கு எண்ணிக்கை காலை துவங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக-6,அதிமுக-3, காங்கிரஸ்-1, பாமக-1, சுயேச்சை-4.வெற்றி பெற்று திமுக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை கைப்பற்றியது.
வெற்றி பெற்றவர்கள் விவரம்:-
1வது வார்டு லில்லி மாணிக்கம்(திமுக)-244
2வது வார்டு பிரகாஷ் (அதிமுக)-511,
3வது வார்டு நர்மதா (திமுக)-722,
4வது வார்டு நிர்மலா (திமுக)-391,
5வது வார்டு தேவி (திமுக)-447,
6வது வார்டு சினுவாசன் (திமுக)-431,
7வது வார்டு பார்வதி குப்புசாமி(பாமக)-584,
8வது வார்டு சாந்தி சதீஷ் (திமுக)-744,
9வது செல்வமேரிஅருள்ராஜ் (காங்கிரஸ்)-737,
10வது வார்டு இந்திராணி சுப்பிரமணி( சுயேச்சை)-433,
11வது வார்டு வீரபத்திரன் (சுயேச்சை)-644,
12வார்டு கோமளா மோகன்(அதிமுக)-136,
13வது வார்டு இந்துமதிநவீன் (சுயேச்சை)-658,
14வது வார்டு சுதாகர்(அதிமுக)-806,
15வது வார்டு சாந்தகுமார்(சுயேச்சை)-317,
திருவள்ளூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 118 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகரா ட்சி, 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளுக்கு வாக்கு பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.
இதில் 315 வார்டுகளில் 825 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் 8 மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் நேரலை சி.சி.டி.வி. கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர் நகராட்சியில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் பட்டாபிராம் இந்து கல்லூரி மையத்தில் 21 மேஜைகளில் எண்ணப்படுகிறது.
பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளில் தலா 8 மேஜைகளிலும் திருமழிசை பேரூராட்சி 3 மேஜைகளிலும், பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
திருத்தணி நகராட்சிக்கு திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கலைக்கல்லூரியில் 7 மேஜைகளிலும், திருவள்ளூர் நகராட்சிக்கு திருப்பாசூரில் உள்ள திருமுருகன் கலைக்கல்லுரியில் 12 மேஜைகளிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
பொன்னேரி நகராட்சிக்கு உலகநாதன் கலைக்கல்லூரியில் 7 மேஜைகளிலும், ஆரணி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, நாரவாரி குப்பம் பேரூராட்சிகளுக்கு பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளியில் தலா 3 மேஜைகளிலும், பொதட்டூர் பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பேரூராட்சிகளுக்கு பள்ளிப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்ள்ளியில் 3 சுற்றுகளாகவும், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு ஊத்துக்கோட்டையில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் 3 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகள் குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகள், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்டசியில் 18 வார்டுகளில் தேர்தல் நடந்துள்ளது.
இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை காரப்பேட்டை பொன்னேரி கரையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் நடக்கிறது.
குன்றத்தூர்-மாங்காடு நகராட்சிகளுக்கு சிறுகளத்தூரில் உள்ள மாதாபொறியியல் கல்லூரியல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் 35 மேஜைகளில் 61 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை 14 மேஜைகளில் 16 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.
குன்றத்தூர் நகராட்சி 6 மேஜைகளில் 9 சுற்றுகளாகவும், மாங்காடு நகராட்சி 6 மேஜைகளில் 9 சுற்றுகளாகவும், ஸ்ரீபெரும்புதூர், உத்திர மேரூர் பேரூராட்சிகள் தலா 3 மேஜைகளில் 9 சுற்றுகளாகவும் எண்ணப்படுகிறது.
இதேபோல் வாலாஜாபாத் பேரூராட்சி ஓட்டு எண்ணிக்கை 3 மேஜைகளில் 9 சுற்றுகளாக நடக்கின்றன. வாக்கு எண்ணிக்கையையொட்டி கூடுதல் பாதுகாப்பு போட போலீசார் முடிவு செய்து இருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சிக்கு குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நந்திவரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் நகராட் சிகளுக்கு காட்டாங் கொளத்தூரில் உள்ள ஜே.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், செங்கல்பட்டு நகராட்சிக்கு செங்கல்பட்டில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. மதுராந்தகம் நகராட்சிக்கு மதுராந்தகத்தில் உள்ள சவுபாக்மல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அச்சிறுப்பாக்கம், கருங்குழி பேரூராட்சிகளுக்கு அச்சிறுப்பாக்கத்தில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியிலும், இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு கடப்பாக்கத்தில் உள்ளஅரசு மேல்நிலைப் பள்ளியிலும்,
மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகளுக்கு திருக்கழுக்குன்றத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மொத்தம் 92 மேஜைகளில் 91 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தாம்பரம் மாநகராட்சியில் அதிகபட்சமாக 49 மேஜைகளில் 20 சுற்றுகளாக நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற் குழு உறுப்பினர்கள் கூட்டம் கூடுவாஞ்சேரி என்.பி.ஆர். திருமண மண்டபத்தில் தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
அனைவரையும் மாவட்டக்கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பேசி முடித்ததும், தீர்மானங்களை விளக்கி மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் உரையாற்றினார். முடிவில் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழக மக்களின் நல்லாதரவுடன் மகத்தான வெற்றியை பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்று மக்கள் மனம் மகிழும் வகையில் நல்லாட்சி நடத்தி, இந்தியாவின் தலைசிறந்த முதல்வர் என்ற வரலாற்று சாதனையை படைத்த அன்புத் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்த நாளை மார்ச் 1-ந் தேதியில் இருந்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் மிகவும் சிறப்பான முறையில் மார்ச் மாதம் முழுவதும் எழுச்சியுடன் கோலாகலமாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது பிறந்த நாளான மார்ச் 1-ந் தேதி காலை 9 மணிக்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய நகர, பேரூர்களில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் கொடி தோரணங்கள் கட்டி, ஒலி பெருக்கி அமைத்து கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது.
40-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு மதிய உணவு, உடைகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 1-ந் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் மாவட்டத்தில் உள்ள பகுதி, நகரம், ஒன்றியம் பேரூர் வாரியாக தொடர் பொதுக் கூட்டங்கள் நடத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள் உள்ளிட்ட மருத்துவ முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தின் சுவடுகளை பதிவு செய்து உருவாக்கி உள்ள உங்களின் ஒருவன் என்ற வாழ்க்கை பயணம் புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா வருகிற 28-ந் தேதி மாலை 5 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிட உள்ளார். பல்வேறு மாநில முதல்வர்களும் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் திரளாக அணி திரண்டு பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும். விழாவுக்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிண்டி கத்திபாரவில் இருந்து பிரம்மாண்ட வரவேற்பும் கொடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை துபாய்க்கு செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ரிஸ்வான் கான் (வயது57) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்யும் போது அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பாஸ்போர்ட்டை கணினியில் ஆய்வு செய்த போது, அது போலியான பாஸ்போர்ட் என்று தெரியவந்தது.
அவர் வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் மேற்குவங்க மாநிலம் வழியாக வந்து, திரிபுரா மாநிலம் சென்று அங்கு சில ஏஜென்டுகளிடம் போலியான ஆவணங்கள் மூலம் அகர்தலா முகவரியில் இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் வங்காள தேசத்தை சேர்ந்த ரிஸ்வான் கானை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 50 வார்டுகளும், குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகளும், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகளும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளும், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளும், உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகளும் என மொத்தம் 155 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 76 ஆயிரத்து 257பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 338 பேரும் என 3 லட்சத்து 63 ஆயிரத்து 652 பேர் வாக்களிக்க உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 384 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 88 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு 29 நுண்பார்வையாளர்கள் நியக்கப்பட்டும், வெப்கேமரா மூலம் தொடர்ந்து வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகின்றது.
தேர்தல் பாதுகாப்பு பணியில் 1056 போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தலைமையில் இரண்டு ஏடிஎஸ்பி, எட்டு டி.எஸ்.பி.20 ஆய்வாளர்கள், 100 எஸ்.ஐ என மொத்தமாக 1056 காவல்துறையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 23 நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் 218 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 448 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 பெண் வாக்காளர்களும், 29 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 680 பேர் வாக்களிக்கிறார்கள்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 50 வார்டுக்கு மட்டுமே இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தற்கொலை செய்துகொண்டதால் அந்த வார்டுக்கு மட்டும் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு மையத்திற்கு வருகை புரியும் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு அறைக்கு செல்லும் முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி மற்றும் கையுறை வழங்கப்பட்டது.
வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகிறார்கள்.
ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என்று 396 பேர் போட்டியிடுகின்றனர்.
மாநகராட்சி முழுவதும் 350 பூத்துகளில் 21, 22, 34, 27, 29, 47 பதற்றமானவை என்று கண்டறியப்பட்டது. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. காலையிலேயே ஏராளமானோர் வாக்களிக்க அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர். திருநின்றவூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 1677 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 200 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்களிக்கும் மின்னணு எந்திரம் பழுதடையாமல் கண்காணிக்க ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சிக்கும் 10 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 75 க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தனது மனைவியுடன் செங்கல்பட்டு, அனுமந்தபொத்தேரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அப்போது கலெக்டர் ராகுல்நாத் கூறும்போது, வாக்கு மையங்களில் இருந்து ஓட்டுப்பதிவு எந்திரங்களை அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.
தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டுகள் உள்ளன. இந்த 70 வார்டுகளிலும் 683 பேர் உறுப்பினர் பதவிகளுக்காக போட்டியிடுகின்றனர். தாம்பரம் மாநகராட்சி முழுவதும் 703 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 67 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகிறார்கள்.
மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்காளர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் கருவி வேலை செய்யவில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த கருவி சரி செய்யப்பட்டது.
குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு களிலும் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நடுநிலைப் பள்ளியில் ஏராளமான பொதுமக்கள் அதிக அளவில் வரிசையில் நின்று தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் குன்றத்தூரில் உள்ள வள்ளுவர் நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக ஜானகிராமன் என்பவர் போட்டியிட்டார்.
கடந்த 10-ந் தேதி இவர் திடீரென வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். வேட்பாளர் இறந்ததையடுத்து 36-வது வார்டில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டில் தேர்தல் நடைபெறவில்லை. ஓட்டுப்பதிவு இல்லாததால் அந்த வார்டு பகுதி மட்டும் களையிழந்து காணப்பட்டது. மற்ற இடங்கள் அனைத்திலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.






