என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ராமாபுரத்தில் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை

    ராமாபுரத்தில் போலீஸ் அதிகாரி மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வினோதன். தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி தீபா ( வயது 48). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    வினோதன் நேற்று காலை வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். தீபா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய குழந்தைகள் கதவு பூட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்குள்ள படுக்கை அறை கழிவறைக்குள் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் தீபா இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்ததும் ராயலா நகர் போலீசார் விரைந்து வந்து தீபாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடந்த சில மாதங்களாகவே தீபா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×