என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு திருக்கோவில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தி கொடியினை ஏற்றினார்கள். இதனைத் தொடர்ந்து ஏலவார்குழலி அம்மனுக்கும் ஏகாம்பரநாதர் சுவாமிக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
கொடியேற்ற விழாவில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், கோவில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், ஆய்வாளர் பிரித்திகா கோயில் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவினை முன்னிட்டு தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வருகின்றனர். இம்மாதம் 13ம் தேதி காலையில் அறுபத்தி மூன்று நாயன்மார்கள் வீதி உலாவும், இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. மறுநாள் 14ம் தேதி மகா ரதம் எனப்படும் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
பதினெட்டாம் தேதி அதிகாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இரவு தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். இம்மாதம் 21ஆம் தேதி 108 கலசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் தலைமையிலான விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 21-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி நாளை மாலை சிம்ம வாகனமும் 9-ந் தேதி காலை சூரிய பிரபை, மாலை சந்திர பிரபை வாகனத்திலும், 11-ந் தேதி மாலை வெள்ளி இடப வாகனத்திலும் சுவாமி வீதி உலா வருகிறார்.
வருகிற 13-ந் தேதி காலை 63 நாயன்மார்கள் வீதி உலா வருகின்றனர். அன்று மாலை வெள்ளித் தேரில் ஏகாம்பரநாதர் பவனி வருகிறார்.
17-ந்தேதி பங்குனி உத்திர திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெற உள்ளது. 21-ந் தேதி காலை 108 கலசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் விழா நடக்கிறது. விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் ஏகாம்பரநாதர் சுவாமி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உதவி ஆணையர் முத்துரத்தினவேல் மற்றும் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் செய்து உள்ளனர்.
போரூர்:
இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் ஜெரால்டு கிலேசியஸ் (49). இவரது மனைவி மஞ்சுளா இவர்களது மகள்கள் மேரி ஜென்சிகா, மேரி சன்ஜிகா, மகன் ரிஜின்னோல்டு.
கடந்த 2007-ம் ஆண்டு குடும்பத்துடன் அகதியாக சென்னைக்கு வந்த ஜெரால்டு போரூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஜெரால்டு கிலேசியஸ் குடும்பத்துடன் கனடா நாட்டில் குடியேற முடிவு செய்து இலங்கை நாட்டவர் என்பதை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை, பான்கார்டு மற்றும் அடையாள அட்டைகள் பெற்று உள்ளனர்.
பின்னர் குடும்பத்தினர் அனைவரும் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்து பெற்று இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இலங்கை நாட்டவர் என்பதை மறைத்து போலியான ஆவணங்கள் மூலம் ஜெரால்டு பாஸ்போர்ட் பெற்று இருப்பது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போரூர் உதவி கமிஷனர் பழனி மற்றும் போலீசார் மோசடியில் ஈடுபட்டு பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு தப்பி செல்ல முயன்ற ஜெரால்டு அவரது மனைவி மகள்கள், மகன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
இந்த நிலையில் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூரில் அரசு பள்ளி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆங்கில ஆசிரியராக தர்மராஜ்(44) பணியாற்றி வந்தார்.
சிலநாட்களுக்கு முன்பு தர்மராஜ், சிறப்பு வகுப்பு எனக்கூறி மாணவிகளை பள்ளிக்கு அழைத்ததாக தெரிகிறது. அப்போது 2 மாணவிகளுக்கு அவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து சீண்டலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மாணவிகள் இருவரும் செங்கல்பட்டு மாவட்ட "சைல்டுலைன்" அமைப்பினரிடம் ஆசிரியரின் தவறான தொடுதல் குறித்து ரகசியமாக புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சைல்டுலைன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் தர்மராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் தர்மராஜ் மீது புகார் கொடுத்தனர். மாமல்லபுரம் மகளிர் போலீசார் தர்மராஜை "போக்சோ" சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெண்கள், குழந்தைகள், மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் ரீதியான குற்றச்செயல்கள் குறித்து தயங்காமல் போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகாட்சி 51 வார்டுகளுடன் புதிதாக உருவாக்கப்பட்டது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது 50 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.
ஒரு வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதால் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் முடிவில் தி.மு.க. 31 இடங்களையும், அ.தி.மு.க.-9, பா.ம.க.-2, சுயேட்சகைள்-6, பாரதீய ஜனதா, காங்கிரஸ் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.
தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று காஞ்சிபுரம் மாநகராட்சியை கைப்பற்றி இருந்தது. இதனால் காஞ்சிபுரம் புதிய மாநகராட்சியின் முதல் மேயர் யார்? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக 9-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் மகாலட்சுமி அறிவிக்கப் பட்டார். இதனால் அவர் போட்டியின்றி மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே இன்று காலை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி 50 வார்டு உறுப்பினர்களும் மாநகராட் சியின் கூட்டரங்கிற்கு காலை 9 மணிக்குள் வந்தனர்.
மேயர் வேட்பாளராக மகாலட்சுமி நகராட்சி கமிஷனர் நாராயணனிடம் மனுதாக்கல் செய்தார். சிறிது நேரத்தில் அவரை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த 8-வது வார்டு உறுப்பினர் சூர்யா சோபன்குமார் மேயர் வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்தார். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சேர்ந்த 10-வது வார்டு உறுப்பினர் சரஸ்வதியும் மேயர் பதவி போட்டியில் குதித்தார். பின்னர் அவர் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றார்.
இதன் காரணமாக மேயர் வேட்பாளரை போட்டியின்றி தேர்வு செய்ய முடியாத நிலை உருவானது. தி.மு.க.வினர் 2 பேருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
மேயர் பதவி போட்டி பற்றி அறிந்ததும் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் மாநகராட்சி வளாகம் பரபரப்பானது.
தி.மு.க. மாவட்ட செயலாளர் சுந்தர், எழிலரசன் எம்.எல்.ஏ., செல்வம் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் தலைமை அறிவித்த வேட்பாளர் மகாலட்சுமிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி தி.மு.க. உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
காலை 10 மணிக்கு மேல் மேயரை தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு மாநகராட்சியில் உள்ள கூட்ட அரங்கில் உறுப்பினர்களிடம் நடந்தது.
இதன் முடிவு காலை 11.30 மணிக்கு மேல் அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க. தலைமை கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மகாலட்சுமிக்கு 30 உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்தது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட உறுப்பினர் சூர்யா சோபன் குமாருக்கு 20 பேர் வாக்களித்து இருந்தனர். தி.மு.க. ஓட்டு முழுவதும் சிதறாமல் மகாலட்சுமிக்கு கிடைத்ததால் அவர் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பு வெளியானதும் அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் மேயரான மகாலட்சுமிக்கு மேயருக்கான உடை மற்றும் செங்கோலை மாவட்ட செயலாளர் சுந்தர், எழிலரசன் எம்.எல்.ஏ., செல்வம் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.
பின்னர் மகாலட்சுமியை மேயர் இருக்கைக்கு அழைத்து சென்றனர். கடும் போட்டிக்கு இடையே மகாலட்சுமி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் மாநகராட்சியில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுகத்தேர்தல் இன்று நடைபெற்றது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், ஆவடி, தாம்பரம் ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெற்றது.
இதேபோல் 12 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு மறைமுக தேர்தல் நடந்தது. பெரும்பாலான இடங்களில் தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிற்பகலில் நடந்த துணை தலைவர் பதவி தேர்தலில் சில இடங்களில் போட்டி நடந்தது.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
காஞ்சீபுரம்- செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் நகராட்சி தலைவர்-மலர்விழி குமார் (தி.மு.க.).
குன்றத்தூர் நகராட்சி தலைவர்- சத்தியமூர்த்தி (தி.மு.க.).
செங்கல்பட்டு நகராட்சி தலைவர்- தேன்மொழி (தி.மு.க.).
மறைமலைநகர் நகராட்சி தலைவர்-சண்முகம் (தி.மு.க.).
கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர்-எம்.கே.டி.கார்த்திக் (தி.மு.க.).
திருப்போரூர் பேரூராட்சி தலைவர்-தேவராஜ் (தி.மு.க.).
திருக்கழுக்குன்றனம் பேரூராட்சி தலைவர்-யுவராஜ் (தி.மு.க.).
உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர்-சசிகுமார் (தி.மு.க.).
வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர்-இல்லாமல்லி ஸ்ரீதர் (தி.மு.க.).
இடைக் கழிநாடு பேரூ ராட்சி தலைவர்- லட்சுமி சங்கர் (தி.மு.க.).
அச்சரப் பாக்கம் பேரூராட்சியில் தவைர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. தி.மு.க. வேட்பாளரான 11-வது வார்டு உறுப்பினர் நந்தினியை எதிர்த்து 15-வது வார்டு உறுப்பினர் சகுந்தலா போட்டியிட்டார்.
இதில் நந்தினி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சகுந்தலாவுக்கு 5 ஓட்டுகள் கிடைத்தது. நந்தினி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கருங்குழி பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. 2-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் தசரதனை எதிர்த்து 15-வது வார்டு சுயேட்சை உறுப்பினர் கண்ணன் போட்டியிட்டார். இதில் தசரதன் 11 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கண்ணனுக்கு 4 வாக்குகள் கிடைத்தது.
திருவள்ளூர் நகராட்சி தலைவர்-உதய மலர் பாண்டியன் (தி.மு.க.).
திருத்தணி நகராட்சி தலைவர்- சரஸ்வதி பூபதி (தி.மு.க.).
பொன் னேரி நகராட்சி தலைவர்- டாக்டர் பரிமளம் (தி.மு.க.).
பூந்தமல்லி நகராட்சி தலைவர்- காஞ்சனா சுதாகர் (தி.மு.க.).
திருவேற்காடு நகராட்சி தலைவர்- கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.).
திருநின்றவூர் நகராட்சி தலைவர்- உஷாராணி (தி.மு.க.).
மீஞ்சூர் பேரூராட்சி தலைவர்- சுமதி (தி.மு.க.).
ஊத்துக் கோட்டை பேரூ ராட்சி தலைவர்-அப்துல் ரஜீத் (தி.மு.க.).
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர்-ஷகிலா அறிவழகன் (தி.மு.க.).
பள்ளிப்பட்டு பேரூராட்சி தலைவர்-மணிமேகலை (தி.மு.க.).
திருமழிசை பேரூராட்சி தலைவர்-வடிவேலு (தி.மு.க.).
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த சின்னாளம்பாடியை சேர்தவர் ரவி. முன்னாள் ஊராட்சி தலைவர்.
இவரது 2-வது மனைவி அருணா. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் அருணா கத்திக்குத்து காயத்துடன் காஞ்சிபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நான் தாய் வீட்டிற்கு சென்று விட்டேன். மீண்டும் என்னை குடும்பம் நடத்த கணவர் ரவி அழைத்தார்.
இதையடுத்து நான் அங்கு சென்றபோது கணவர் ரவி மற்றும் அவருடன் இருந்த மர்ம நபர்கள் கத்தியால் என்னை வெட்டினர். அதனை தடுக்க முயன்ற எனது தாய், தம்பிக்கும் காயம் ஏற்பட்டது.
கணவரால் எனது குழந்தைக்கும், எனக்கும் ஆபத்து உள்ளது பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் கத்திக்குத்து காயத்துடன் வந்த அருணாவை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆலந்தூர்:
குவைத்தில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒருவர் தனது உள்ளாடையில் மறைத்து ரூ.40.55 லட்சம் மதிப்புள்ள 880 கிராம் தங்கத்தை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்தவர் கொடுத்த தகவலின் படி அதனை வாங்க விமானநிலையத்தில் காத்திருந்த ஒருவரையும் அதிகாரிகள் பிடித்தனர். கைதான 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் மொத்தம் 750 உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஒரு வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்ததால் தேர்தல் நடைபெறவில்லை.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு நகராட்சி உறுப்பினரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி உறுப்பினரும், 2 பேரூராட்சி உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற நகர்ப்புற உள்ளாட்சி உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
புதிதாக உருவாகி உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 வார்டு உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி கமிஷனர் நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. , காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், செல்வம் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 31 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்கள், பா.ஜ.க. 1 இடம், சுயேட்சை 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். புதிதாக உருவாகி உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதில் முதல் மேயர், துணை மேயர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் உள்ளன. இதில் 306 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் நகராட்சியில் ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் 306 பேர் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
புதிதாக உருவாகி உள்ள தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தாம்பரம் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 சுயேட்சைகளும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். தி.மு.க. மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. முதல் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் 4-ந்தேதி நடைபெற உள்ளது. ஆவடி மாநகராட்சி 48 வார்டு உறுப்பினர்களும், திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருவேற்காடு, பொன்னேரி, திருநின்றவூர் ஆகிய 6 நகராட்சிகளில் 141 வார்டு உறுப்பினர்களும் பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, திருமழிசை, ஊத்துக்கோட்டை, ஆரணி, நாரவாரிகுப்பம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் ஆகிய 8 பேரூராட்சிகளில் 129 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்,
இதில் திருத்தணி நகராட்சி பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் தலா ஒரு வார்டு உறுப்பினர்கள் ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் நகராட்சியில் 27 கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் சிவப்புக் கம்பளம் விரித்து, நகர மன்ற கூட்டரங்கம் புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது. இதில் வார்டு வாரியாக கவுன்சிலர்கள் அழைக்கப்பட்டு பதவியேற்றனர். விழாவில் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் நகராட்சியின் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ஆதிதிராவிடர் பெண் தி.மு.க. வேட்பாளர்களாக 1, 2, 8,16, 21 ஆகிய வார்டுகளில் போட்டியிட்ட வே.வசந்தி, பா.உதயமலர், கோ.சாந்தி, ப.இந்திரா, ம.கமலி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் தலைவர் பதவியை பிடிக்க 1-வது வார்டு தி.மு.க., வேட்பாளர் வசந்தி, 2-வது வார்டு முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியனின் மனைவி தி.மு.க., வேட்பாளர் உதயமலர், 8-வது வார்டு சாந்திகோபி ஆகிய மூவரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆவடி மாநகராட்சியின் 48 வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆவடி மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்காக மாநகராட்சியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சாமு.நாசர் குடும்பத்தாருடன் கலந்து கொண்டார். திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினராக ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிதாக உருவாகி உள்ள ஆவடி, காஞ்சிபுரம், தாம்பரம் மாநகராட்சிகளில் உறுப்பினர்கள் பதவியேற்பால் விழாக்கோலமாக காணப்பட்டது.
உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து ரஷிய ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது. இன்று 6-வது நாளாக தாக்குதல் நீடிக்கிறது. முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷிய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் நாட்டுக்குள் முன்னேறி வருகின்றன.
இதனால் உக்ரைன் நாட்டிற்கு படிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் உள்பட இந்தியர்கள் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
போர் தீவிரமாக நடந்து வருவதால் தலைநகர் கிவ், கார்கிவ் பகுதியில் ஏராளமானோர் வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர். அவர்கள் குண்டு மழைக்கு மத்தியில் பதுங்கு குழியில் பதுங்கி உள்ளனர்.
தமிழக மாணவர்கள் ஏராளமானவர்களும் இங்கு சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் வெளியேறுவதிலும், உணவுக்காகவும் இக்கட்டான நிலையை சந்தித்து வருகின்றனர். வாட்ஸ்அப் வீடியோக்கள் மூலம் அவர்கள் உதவிகேட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே போர் பதட்டம் அதிகமாக உள்ள கார்கிவ் பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பாலசங்கர் என்பவர் பதுங்கு குழியில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் உள்பட இந்தியர்கள் 1,500 பேருக்கு இலவசமாக உணவு வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலசங்கர் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக கார்கிவ் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். போர் ஆரம்பித்ததும் அவர் தனது மனைவி சோனியாவை நகரத்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தார்.
பின்னர் அவர் மனைவியின் வேண்டுகோளை மீறி போர் நடக்கும் பகுதிக்கு வந்து மீண்டும் தங்கினார். அங்கு அவரது இரண்டு சகோதரர்கள் அப்புகிருஷ்ணன், சுஜித்குமார் ஆகியோருடன் சேர்ந்து குண்டு மழைக்கு மத்தியில் பதுங்கு குழியில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி உதவி வருகிறார்.
கடந்த 5 நாட்களில் பாலசங்கர் தனது உணவகம் மூலம் மற்றும் தனது தொண்டு நிறுவனமான மாறன் அறக்கட்டளையுடன் இணைந்து உணவு பொட்டலங்களை வினியோகித்து வருகிறார்.
இது தொடர்பாக பாலசங்கர் கூறியதாவது:-
நாங்கள் உக்ரேனிய தமிழ் சங்கத்துடன் இணைந்து பல ஆண்டுகளாக ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறோம். உக்ரைன் எனது 2-வது தாய் நாடு. எனக்கு புதிய வாழ்க்கையை வழங்கியது. இந்த நாடு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி இருக்கும் போது மக்களுக்கு உதவ விரும்புகிறேன்.
நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி பதுங்கு குழியில் சிக்கி இருப்பதாக நாங்கள் அறிந்தோம். மளிகை பொருட்கள் தீரும் வரை உணவை சமைத்து வினியோகிக்க முடிவு செய்துள்ளோம்.
மளிகை பொருட்கள் குறைந்து விட்டதாலும் கடைகள் எதுவும் திறக்காததாலும் சமைத்த உணவுக்கு பதிலாக ஆப்பிள், வாழைப்பழம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம்.
உணவை கொண்டு செல்லும் போது உக்ரேனிய போலீசார், ரஷியா ராணுவத்தினர் பலமுறை தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் உணவு பொருட்களை பார்த்த பின்னர் கொண்டு செல்ல அனுமதித்தனர்.
முதல் நாள் நான் சந்தித்த சிலருக்கு உணவுகளை வினியோகித்தேன். பின்னர் மாணவர்கள் தங்களது வாட்ஸ்அப் குழுக்களில் என்னை சேர்த்துள்ளனர். நகரின் புறநகர் பகுதியில் இருந்து மளிகை பொருட்கள் வாங்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.






