என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் கைது
Byமாலை மலர்6 March 2022 7:34 AM GMT (Updated: 6 March 2022 7:34 AM GMT)
பெண்கள், குழந்தைகள், மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் ரீதியான குற்றச்செயல்கள் குறித்து தயங்காமல் போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம்:
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
இந்த நிலையில் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூரில் அரசு பள்ளி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆங்கில ஆசிரியராக தர்மராஜ்(44) பணியாற்றி வந்தார்.
சிலநாட்களுக்கு முன்பு தர்மராஜ், சிறப்பு வகுப்பு எனக்கூறி மாணவிகளை பள்ளிக்கு அழைத்ததாக தெரிகிறது. அப்போது 2 மாணவிகளுக்கு அவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து சீண்டலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மாணவிகள் இருவரும் செங்கல்பட்டு மாவட்ட "சைல்டுலைன்" அமைப்பினரிடம் ஆசிரியரின் தவறான தொடுதல் குறித்து ரகசியமாக புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சைல்டுலைன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் தர்மராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் தர்மராஜ் மீது புகார் கொடுத்தனர். மாமல்லபுரம் மகளிர் போலீசார் தர்மராஜை "போக்சோ" சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெண்கள், குழந்தைகள், மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் ரீதியான குற்றச்செயல்கள் குறித்து தயங்காமல் போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
இந்த நிலையில் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூரில் அரசு பள்ளி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆங்கில ஆசிரியராக தர்மராஜ்(44) பணியாற்றி வந்தார்.
சிலநாட்களுக்கு முன்பு தர்மராஜ், சிறப்பு வகுப்பு எனக்கூறி மாணவிகளை பள்ளிக்கு அழைத்ததாக தெரிகிறது. அப்போது 2 மாணவிகளுக்கு அவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து சீண்டலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மாணவிகள் இருவரும் செங்கல்பட்டு மாவட்ட "சைல்டுலைன்" அமைப்பினரிடம் ஆசிரியரின் தவறான தொடுதல் குறித்து ரகசியமாக புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சைல்டுலைன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் தர்மராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் தர்மராஜ் மீது புகார் கொடுத்தனர். மாமல்லபுரம் மகளிர் போலீசார் தர்மராஜை "போக்சோ" சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெண்கள், குழந்தைகள், மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் ரீதியான குற்றச்செயல்கள் குறித்து தயங்காமல் போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X