search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "russia ukraine conflict"

    • ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைனில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் முற்றிலும் தகர்க்கப்பட்டு உள்ளது.
    • இந்த நகரங்களில் மின் வினியோகத்தை சீராக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது. 9 மாதங்கள் முடிந்தும் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகிவிட்டனர்.

    ரஷியா நடத்திய ஏவுகணை வீச்சில் உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைன் பொது மக்கள் ஒருவித அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்த போரால் உக்ரைனில் சுமார் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் மின்சார வசதி இல்லாமல் தவித்து வருவதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைனில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் முற்றிலும் தகர்க்கப்பட்டு உள்ளது. இதனால் ஓடெசா, சுமி, கிவ், வின்னிட்சியா உள்ளிட்ட நகரங்களில் மின் வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கபட்டு உள்ளனர்.

    வின்னிட்சியா, சுமி ஆகிய நகரங்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நகரங்களில் மின் வினியோகத்தை சீராக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உக்ரைனில் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷியா எச்சரித்து உள்ளதால் சிறிய அணு ஆயுதங்கள் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று தகவல்.
    • ரஷ்யா என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்து என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தீர்மானிக்கப்படும்.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. சுமார் 7 மாதங்களாக போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வந்தன.

    உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி அமெரிக்கா, மேற்கத்திய நாடு விடுத்த எச்சரிக்கையை ரஷியா கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே உக்ரைனின் வடகிழக்கில் ரஷிய படைகளின் வசம் இருந்த பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டது.

    அதேபோல் கார்கிவ் புறநகர் பகுதிகளை மீட்டது. அங்கிருந்து ரஷிய படைகள் பின்வாங்கியது. இதற்கிடையே உக்ரைனில் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷியா எச்சரித்து உள்ளதால் சிறிய அணு ஆயுதங்கள் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தநிலையில் ரஷிய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "அணு ஆயுதம் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது 2-ம் உலக போருக்கு பிறகு போரின் முகத்தை மாற்றும். எனவே வேண்டாம். இதுபோன்ற ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்கா தக்க விளைவுகளை கொடுக்கும்.

    அவர்கள் (ரஷியா) என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்து என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தீர்மானிக்கப்படும்" என்று கூறினார்.

    இந்தநிலையில் உக்ரைனில் பல பகுதிகளில் உக்ரைன் படைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. கெர்சன், கார்கிவ், டொனெட்ஸ்க், மைகோ லேவ் பகுதிகளில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    • ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
    • கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் 6 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை எங்களது படைகள் மீட்டெடுத்து உள்ளன.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தற்போது கிழக்கு உக்ரைனில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். ரஷியா, கைப்பற்றிய பகுதிகளை மீட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "வடகிழக்கில் இருந்து பகுதிகளை உக்ரைன் படைகள் மீட்டு வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் இருந்து கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் 6 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை எங்களது படைகள் மீட்டெடுத்து உள்ளன. நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். இதில் ரஷிய படை வீரர்கள் பலர் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். ரஷியாவுக்கு சரியான பதிலடியும் கொடுக்கப்படுகிறது" என்றார்.

    ×