என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆவடி மாநகராட்சியில் உறுப்பினர் பதவியேற்றக்காட்சி
காஞ்சிபுரம், திருவள்ளூர்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 750 உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்
புதிதாக உருவாகி உள்ள ஆவடி, காஞ்சிபுரம், தாம்பரம் மாநகராட்சிகளில் உறுப்பினர்கள் பதவியேற்பால் விழாக்கோலமாக காணப்பட்டது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் மொத்தம் 750 உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஒரு வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்ததால் தேர்தல் நடைபெறவில்லை.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு நகராட்சி உறுப்பினரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி உறுப்பினரும், 2 பேரூராட்சி உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற நகர்ப்புற உள்ளாட்சி உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
புதிதாக உருவாகி உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 வார்டு உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி கமிஷனர் நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. , காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், செல்வம் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 31 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்கள், பா.ஜ.க. 1 இடம், சுயேட்சை 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். புதிதாக உருவாகி உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதில் முதல் மேயர், துணை மேயர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் உள்ளன. இதில் 306 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் நகராட்சியில் ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் 306 பேர் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
புதிதாக உருவாகி உள்ள தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தாம்பரம் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 சுயேட்சைகளும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். தி.மு.க. மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. முதல் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் 4-ந்தேதி நடைபெற உள்ளது. ஆவடி மாநகராட்சி 48 வார்டு உறுப்பினர்களும், திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருவேற்காடு, பொன்னேரி, திருநின்றவூர் ஆகிய 6 நகராட்சிகளில் 141 வார்டு உறுப்பினர்களும் பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, திருமழிசை, ஊத்துக்கோட்டை, ஆரணி, நாரவாரிகுப்பம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் ஆகிய 8 பேரூராட்சிகளில் 129 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்,
இதில் திருத்தணி நகராட்சி பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் தலா ஒரு வார்டு உறுப்பினர்கள் ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் நகராட்சியில் 27 கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் சிவப்புக் கம்பளம் விரித்து, நகர மன்ற கூட்டரங்கம் புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது. இதில் வார்டு வாரியாக கவுன்சிலர்கள் அழைக்கப்பட்டு பதவியேற்றனர். விழாவில் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் நகராட்சியின் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ஆதிதிராவிடர் பெண் தி.மு.க. வேட்பாளர்களாக 1, 2, 8,16, 21 ஆகிய வார்டுகளில் போட்டியிட்ட வே.வசந்தி, பா.உதயமலர், கோ.சாந்தி, ப.இந்திரா, ம.கமலி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் தலைவர் பதவியை பிடிக்க 1-வது வார்டு தி.மு.க., வேட்பாளர் வசந்தி, 2-வது வார்டு முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியனின் மனைவி தி.மு.க., வேட்பாளர் உதயமலர், 8-வது வார்டு சாந்திகோபி ஆகிய மூவரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆவடி மாநகராட்சியின் 48 வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆவடி மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்காக மாநகராட்சியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சாமு.நாசர் குடும்பத்தாருடன் கலந்து கொண்டார். திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினராக ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிதாக உருவாகி உள்ள ஆவடி, காஞ்சிபுரம், தாம்பரம் மாநகராட்சிகளில் உறுப்பினர்கள் பதவியேற்பால் விழாக்கோலமாக காணப்பட்டது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் மொத்தம் 750 உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ஒரு வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை செய்ததால் தேர்தல் நடைபெறவில்லை.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு நகராட்சி உறுப்பினரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி உறுப்பினரும், 2 பேரூராட்சி உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற நகர்ப்புற உள்ளாட்சி உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
புதிதாக உருவாகி உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 வார்டு உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி கமிஷனர் நாராயணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. , காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், செல்வம் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 31 இடங்களிலும், பா.ம.க. 2 இடங்கள், பா.ஜ.க. 1 இடம், சுயேட்சை 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். புதிதாக உருவாகி உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதில் முதல் மேயர், துணை மேயர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள் உள்ளன. இதில் 306 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் நகராட்சியில் ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் 306 பேர் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
புதிதாக உருவாகி உள்ள தாம்பரம் மாநகராட்சியில் மொத்தம் 70 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தாம்பரம் மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 சுயேட்சைகளும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். தி.மு.க. மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. முதல் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேயர், துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் 4-ந்தேதி நடைபெற உள்ளது. ஆவடி மாநகராட்சி 48 வார்டு உறுப்பினர்களும், திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருவேற்காடு, பொன்னேரி, திருநின்றவூர் ஆகிய 6 நகராட்சிகளில் 141 வார்டு உறுப்பினர்களும் பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, திருமழிசை, ஊத்துக்கோட்டை, ஆரணி, நாரவாரிகுப்பம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் ஆகிய 8 பேரூராட்சிகளில் 129 வார்டு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்,
இதில் திருத்தணி நகராட்சி பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் தலா ஒரு வார்டு உறுப்பினர்கள் ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் நகராட்சியில் 27 கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் சிவப்புக் கம்பளம் விரித்து, நகர மன்ற கூட்டரங்கம் புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது. இதில் வார்டு வாரியாக கவுன்சிலர்கள் அழைக்கப்பட்டு பதவியேற்றனர். விழாவில் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் நகராட்சியின் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ஆதிதிராவிடர் பெண் தி.மு.க. வேட்பாளர்களாக 1, 2, 8,16, 21 ஆகிய வார்டுகளில் போட்டியிட்ட வே.வசந்தி, பா.உதயமலர், கோ.சாந்தி, ப.இந்திரா, ம.கமலி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் தலைவர் பதவியை பிடிக்க 1-வது வார்டு தி.மு.க., வேட்பாளர் வசந்தி, 2-வது வார்டு முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியனின் மனைவி தி.மு.க., வேட்பாளர் உதயமலர், 8-வது வார்டு சாந்திகோபி ஆகிய மூவரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆவடி மாநகராட்சியின் 48 வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆவடி மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்காக மாநகராட்சியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சாமு.நாசர் குடும்பத்தாருடன் கலந்து கொண்டார். திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினராக ஆ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிதாக உருவாகி உள்ள ஆவடி, காஞ்சிபுரம், தாம்பரம் மாநகராட்சிகளில் உறுப்பினர்கள் பதவியேற்பால் விழாக்கோலமாக காணப்பட்டது.
Next Story






