என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்தணி நகராட்சி தலைவராக சரஸ்வதி பூபதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
    X
    திருத்தணி நகராட்சி தலைவராக சரஸ்வதி பூபதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு தலைவர்-துணைத் தலைவர் தேர்வு

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், ஆவடி, தாம்பரம் ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் மாநகராட்சியில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தலைவர், துணைத் தலைவர்களுக்கான மறைமுகத்தேர்தல் இன்று நடைபெற்றது.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், ஆவடி, தாம்பரம் ஆகிய 3 மாநகராட்சிகளுக்கு மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெற்றது.

    இதேபோல் 12 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு மறைமுக தேர்தல் நடந்தது. பெரும்பாலான இடங்களில் தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிற்பகலில் நடந்த துணை தலைவர் பதவி தேர்தலில் சில இடங்களில் போட்டி நடந்தது.

    தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

    காஞ்சீபுரம்- செங்கல்பட்டு மாவட்டம்

    மதுராந்தகம் நகராட்சி தலைவர்-மலர்விழி குமார் (தி.மு.க.).

    குன்றத்தூர் நகராட்சி தலைவர்- சத்தியமூர்த்தி (தி.மு.க.).

    செங்கல்பட்டு நகராட்சி தலைவர்- தேன்மொழி (தி.மு.க.).

    மறைமலைநகர் நகராட்சி தலைவர்-சண்முகம் (தி.மு.க.).

    கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர்-எம்.கே.டி.கார்த்திக் (தி.மு.க.).

    திருப்போரூர் பேரூராட்சி தலைவர்-தேவராஜ் (தி.மு.க.).

    திருக்கழுக்குன்றனம் பேரூராட்சி தலைவர்-யுவராஜ் (தி.மு.க.).

    உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர்-சசிகுமார் (தி.மு.க.).

    வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர்-இல்லாமல்லி ஸ்ரீதர் (தி.மு.க.).

    இடைக் கழிநாடு பேரூ ராட்சி தலைவர்- லட்சுமி சங்கர் (தி.மு.க.).

    அச்சரப் பாக்கம் பேரூராட்சியில் தவைர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. தி.மு.க. வேட்பாளரான 11-வது வார்டு உறுப்பினர் நந்தினியை எதிர்த்து 15-வது வார்டு உறுப்பினர் சகுந்தலா போட்டியிட்டார்.

    இதில் நந்தினி 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சகுந்தலாவுக்கு 5 ஓட்டுகள் கிடைத்தது. நந்தினி பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கருங்குழி பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. 2-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் தசரதனை எதிர்த்து 15-வது வார்டு சுயேட்சை உறுப்பினர் கண்ணன் போட்டியிட்டார். இதில் தசரதன் 11 வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கண்ணனுக்கு 4 வாக்குகள் கிடைத்தது.

    திருவள்ளூர் நகராட்சி தலைவர்-உதய மலர் பாண்டியன் (தி.மு.க.).

    திருத்தணி நகராட்சி தலைவர்- சரஸ்வதி பூபதி (தி.மு.க.).

    பொன் னேரி நகராட்சி தலைவர்- டாக்டர் பரிமளம் (தி.மு.க.).

    பூந்தமல்லி நகராட்சி தலைவர்- காஞ்சனா சுதாகர் (தி.மு.க.).

    திருவேற்காடு நகராட்சி தலைவர்- கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.).

    திருநின்றவூர் நகராட்சி தலைவர்- உஷாராணி (தி.மு.க.).

    மீஞ்சூர் பேரூராட்சி தலைவர்- சுமதி (தி.மு.க.).

    ஊத்துக் கோட்டை பேரூ ராட்சி தலைவர்-அப்துல் ரஜீத் (தி.மு.க.).

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர்-‌ஷகிலா அறிவழகன் (தி.மு.க.).

    பள்ளிப்பட்டு பேரூராட்சி தலைவர்-மணிமேகலை (தி.மு.க.).

    திருமழிசை பேரூராட்சி தலைவர்-வடிவேலு (தி.மு.க.).

    Next Story
    ×