என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்றுவரை 30 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதால் பாதிப்பு பெரிய அளவில் இல்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள், முன்கள பணியாளர்கள் போலீசார் பலர் பாதிக்கப்பட்டனர்.

    அதன்பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

    இத்துடன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றும் சேர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி முதல் கொரோனா தினசரி மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 906 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. ஏற்கனவே சூரம்பட்டி பெண் இன்ஸ்பெக்டர், வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர், கடம்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர் ஒருவர், பெருந்துறை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர், முதல்நிலை காவலர், பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் ஏட்டு என 6 போலீசாருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

    இதைதொடர்ந்து மற்ற போலீசாருக்கும் தொற்று பரவ தொடங்கியுள்ளது. நேற்றுவரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 30 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதால் பாதிப்பு பெரிய அளவில் இல்லை.

    இவர்களில் ஒரு சிலர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள போலீசாருக்கு தொற்று வேகமாக பரவி வருவதால் மற்ற போலீசார் கலக்கத்தில் உள்ளனர். தடுப்பு நடவடிக்கையாக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்பகுதியில் ஈரோடு கிளை சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வழக்கில் கைது செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில் கைதிகளில் ஒரு சிலருக்கு காய்ச்சல், சளி இருந்ததால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் நேற்று மாலை மூன்று கைதிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக கிளைசிறை முழுவதும் கிருமிநாசினி செலுத்தப்பட்டது. மற்ற கைதிகள் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு, 19:

    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இரவு ஊரடங்கையொட்டி மாவட்டம் 1,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதேப்போல் 14சோதனைச் சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டது.  

    ஊரடங்கை மீறி சுற்றுபவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார்.

    எனினும் நேற்று இரவு ஊரடங்கு மீறி பலர் தேவையின்றி சுற்றித்திரிந்ததை காண முடிந்தது. சிலர் இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றி வந்தனர். 

    சிலர் முககவசம் அணியாமல் வந்தனர். நேற்று ஒரே நாளில் ஈரோடு மாநகர் பகுதியில் ஊரடங்கை மீறியதாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    மேலும் 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேப்போல் முக கவசம் அணியாமல் சென்ற நூற்றுக்கணக் கானவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.
    ஈரோட்டில் ரூ.2 கோடி நில மோசடி வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மேலும் ஒரு அ.தி.மு.க.பிரமுகர் சிக்கினார். அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது-.
    ஈரோடு:

    ஈரோட்டில் ரூ.2 கோடி நில மோசடி வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மேலும் ஒரு அ.தி.மு.க.பிரமுகர் சிக்கினார். அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது-.

    ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளிடம் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 350 பேரிடம் தலா ரூ.70ஆயிரம் வீதம் ரூ.2கோடி வரை வசூல் செய்து மோசடி செய்யப்பட்டது.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடந்த மாதம் ஈரோடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியுமான ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்த பி.பி.கே.பழனிச்சாமி, சங்க செயலாளரும், அ.தி.மு.க., கருங்கல்பாளையம் பகுதி செயலாளருமான ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த முருகசேகர் என்ற முருகநாதன், சங்கத்தின் பொருளாளரும் அ.தி.மு.க. வார்டு செயலாளருமான ஈரோடு இந்திராநகரை சேர்ந்த வைரவேல், 

    சங்க துணை தலைவரும், அ.தி.மு.க, வார்டு செயலாளருமான குணசேகரன், துணை செயலாளரும், அ.தி.மு.க. உறுப்பினருமான ஆறுமுகம், பி.பி.கே.பழனிச்சாமியின் 2&வது மனைவி மேகலா, முருகசேகர் மனைவி சாந்தி, குணசேகரன் மனைவி ஜோதிமணி, ஆறுமுகம் மனைவி ரேவதி, வைரவேல் மனைவி ஜெயந்தி, பி.பி.கே.பழனிச்சாமி மகன் வினோத்குமார் ஆகிய 11பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

    இதில் வைரவேல், வினோத்குமார், ஆறுமுகம் ஆகியோர்  ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தலைமறைவான அ.தி.மு.க. பிரமுகர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். 

    இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் தனிப்படை போலீசிடம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வந்ததால் இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வந்ததால் இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

    ஈரோடு மாவட்டத்தில் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் உட்பட பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளில் வேலைபார்த்து வருகின்றனர். 

    குறிப்பாக பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதேப்போல் தோல் தொழிற்சாலை, செங்கல் சூலை, எலக்ட்ரீசியன் கடைகள், பேக்கரி கடைகள் என மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் குடியிருந்து வேலைபார்த்து வருகின்றனர். 

    இந்நிலையில் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு  நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வட மாநிலத்தவர்கள் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு கடந்த 13&ந் தேதி குடும்பத்துடன் தங்களது மாநிலத்திற்கு கிளம்பி சென்றனர். 

    இதனால் ஈரோடு ரெயில்நிலையத்தில் வடமாநிலத்தவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்ததையொட்டி நேற்று முதல் வட மாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்துடன் மீண்டும் ஈரோட்டுக்கு வரதொடங்கி உள்ளனர். இதனால் மீண்டும் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. 

    இந்நிலையில் இன்று 2&வது நாளாக மீண்டும் வடமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் ரெயில்கள் மூலம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தனர். இதனால் இன்றும் ஈரோடு ரெயில்நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
    ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு, சான்றிதழ் கிடைக்காதவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு, 19 :

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு, சான்றிதழ் கிடைக்காதவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கு  முகாம் நடத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு காந்திஜி சாலை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் தடுப்பூசி கையிருப்பு உள்ள நாட்களில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

    இங்கு முதல், இரண்டாம் தவணை, பூஸ்டர் தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவசர தேவை மற்றும் பல்வேறு காரணத்துக்காக பரிந்துரையுடன் வருவோருக்கும் இங்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    அதேநேரம், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான பதிவு முறையாக செய்யாமல், ஒரு வாரத்துக்கு மேலானாலும், ஊசி செலுத்தியதற்கான பதிவு குறித்த எஸ்.எம்.எஸ்., வருவதில்லை. 

    மேலும்  பதிவு செய்தாலும், தடுப்பூசி செலுத்திய தேதி தவறாகவும், தடுப்பூசி பெயர், செல்போன் எண்கள் தவறாக வருவதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர். 

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவக்குமாரிடம் கேட்ட போது கூறியதாவது:&
    தடுப்பூசி செலுத்தியதற்கான பதிவு செய்யும் சர்வர், மாநில அளவில் அவ்வப்போது தாமதமாகிறது. மேலும், மகப்பேறு மருத்துவமனைக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்த வருவதால், ஊசிபோடும் நேரம் தவிர பிற நேரம் மொத்தமாக பதிவதால் தாமதம் ஏற்படுகிறது. அதை தவிர்க்க யோசனை வழங்குகிறோம்.

    அதேநேரம், இன்னும் பிற இடங்களிலும் தடுப்பூசி செலுத்தியவர்கள், உரிய தேதியில், உரிய மருந்து பெயருடன், சரியான எண்ணுக்கு பதிவு செய்வதை உறுதி செய்ய, குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கிறோம். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, கட்டாயமாக மாற்று ஏற்பாடு செய்யப்படும். 
    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோட்டில் தங்கி பஸ்நிலைய கட்டுமானப்பணியில் வேலைப்பார்த்த வடமாநில தொழிலாளி திடீர் என இறந்துவிட்டார்.
    ஈரோடு, 19:

    ஈரோட்டில் தங்கி பஸ்நிலைய கட்டுமானப்பணியில் வேலைப்பார்த்த வடமாநில தொழிலாளி திடீர் என இறந்துவிட்டார்.

    ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ்நிலையத்தில் தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் பீகார் மாநிலம் சுபால் பகுதியை சேர்ந்த ஜாபீர், முகமது அக்பர், முகமது இஸ்தாக், மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 20பேர் ஈடுபட்டுவருகின்றனர்.

    இவர்கள் பஸ்நிலையத்தின் ஒருபகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்து தங்கி கொண்டு கட்டுமான பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

    சம்பவத்தன்று காலை அனைவரும் வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்தனர். ஆனால் முகமது ஜாபீர் (20) என்பவர் மட்டும் எழுந்திரிக்கவில்லை. 

    இதையடுத்து அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர், முகமது ஜாபீர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    ஈரோடு, 19 :


    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.


    ஈரோட்டில் கடந்த 7&ந் தேதி தினசரி பாதிப்பு 100&ஐ கடந்தது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் கொரோனா புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.  சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக மேலும் 777 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 237 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந் துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனா பாதிப்புடன் 75 வயது முதியவர் ஒருவர் கோவையில் உள்ள  மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சைபலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 716 ஆக உயர்ந்து உள்ளது.


    தற்போது மாவட்டம் முழுவதும் 3,366பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாநகர பகுதியிலும் தற்போது தினசரி பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, ஈரோடுமாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 4,500 முதல் 5,000 பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறி உள்ளதால் அவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

     வீட்டு தனிமையில் இருப்பவர்களை அந்தந்த பகுதிக்கு உட்பட்ட சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதை ஒரு சிலர் இன்னும் காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை. இன்னமும் முககவசம் அணியாமல் வருவதை பார்க்க முடிகிறது.

    இதேபோல் சமூக இடைவெளியும் கேள்விக் குறியாகவே உள்ளது. பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது நமது மாவட்டத்தில் இறப்பு விகிதம் குறைவு தான். நமது மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதை கடந்த முதியவர்கள் தான்.

    எனவே 60 வயது தாண்டிய முதியவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முடிந்த வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    ஈரோடு 19:


    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில் இன்று காலை முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.


    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 1லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


    இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அதேநேரம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 104 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

    இந்தநிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்தமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இன்றுஅதிகாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99.94 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3119 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடியும், குடிநீர் தேவைக்காக 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடியும் என மொத்தம் 3100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கொடுமுடியில் இன்று காலை முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

    கொடுமுடி:

     கொடுமுடியில் இன்று காலை முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

    கொடுமுடி ரெயில் நிலையத்திற்கு இன்றுகாலை 5.30மணியளவில் ஒரு முதியவர் வந்தார். பின்னர் அவர் ரெயில் நிலையத்தில் அங்கும், இங்கும் நடமாடி கொண்டு இருந்தார். 

    அப்போது அங்கு இருந்தவர்கள் அவர் ஏதோ ஒரு ரெயில் ஏற வந்து உள்ளார் என்று நினைத்து கொண்டு இருந்தனர்.

    அப்போது  காலை 6 மணியளவில் அந்த வழியாக ஒரு ரெயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென அந்த முதியவர் யாரும் எதிர்பாராத வகையில் தண்டவாளத்தில் தலை வைத்தார். 

    இதில் ரெயில் மோதியதில் அந்த முதியவர் தலை துண்டித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதைப்பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசாரும்விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

    அப்போதுமுதல் கட்ட விசாரணையில் அவர் கொடு முடியை சேர்ந்த பழனிசாமி (65) என்றும் சைக்கிள் கடை வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. 

    மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வனத்துறைக்கு தகவல் அளித்தும் சம்பவ இடத்துக்கு வரவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் மொத்தம் 10 வன சரகங்கள் உள்ளன.

    இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனசரகத்தில் உள்ள யானைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி அடுத்த மல்லன்குழி என்ற கிராமத்தை சேர்ந்தவர் புட்டுசித்தா (60) விவசாயி. இவர் 6 மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் இவர் தனது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார்.

    இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வந்த 2 காட்டு யானைகள் மல்லன்குழி ஊருக்குள் புகுந்தது. பின்னர் விவசாயி புட்டுசித்தாவுக்கு சொந்தமான மாட்டு கொட்டகை தடுப்பு சுவரை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் யானைகள் உள்ளே கட்டப்பட்டு இருந்த ஒரு பசுமாட்டை குத்தி கொன்றது. அப்போது சத்தம் கேட்டு புட்டுசித்தா வெளியே வந்து பார்த்தார். அப்போது யானைகள் நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு ஊர் மக்கள் அங்கு திரண்டு வந்தனர்.

    பின்னர் ஊர் பொதுமக்கள் சத்தம் போட்டு பட்டாசு வெடித்து ஒரு மணி நேரம் போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    இது பற்றி கிராம மக்கள் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானை இன்று ஊருக்குள்ளே புகுந்து மாட்டை கொன்றுள்ளது. ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தும் சம்பவ இடத்துக்கு வரவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் இறந்த பசு மாட்டுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும் அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம், ஆசனூர் வனப்பகுதியில்இரவு காவல் பணியில் இருந்த 2 விவசாயிகள் ஒற்றை யானை தாக்கி பலியானார்கள். இந்த நிலையில் தாளவாடி பகுதியில் யானைகள் கிராமத்துக்குள் நுழைந்து பசுமாட்டை அடித்து கொன்ற சம்பவம் அநத பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வருவதால் நீர்மட்டம் 100 அடியாக குறைந்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வருவதால் நீர்மட்டம் 100 அடியாக குறைந்தது.

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும்.

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2லட்சத்து47ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி இருந்து வருகிறது. 

    நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவருகிறது. மேலும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிகளவில் தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்படுவதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. 

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.01அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 871 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

     அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 700 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 3,100 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்புநடவடிக்கை காரணமாக கொரோனாபாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்புநடவடிக்கை காரணமாக கொரோனாபாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது . இந்நிலையில் கடந்த 7-ந் தேதி தினசரி பாதிப்பு 100-ஐ கடந்து ஒவ்வொரு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.  

    இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவாக புதியஉச்சமாக மேலும் 613 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 168 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 

    இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 964 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் 65 வயது முதியவர் ஒருவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

    இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 715 ஆக உயர்ந்து உள்ளது.
     
    தற்போது மாவட்டம் முழுவதும் 2,827 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    மாவட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் மொத்த பாதிப்பில் பாதிக்கு பாதி மாநகர் பகுதியில் சேர்ந்தவர்களுக்குத் தான் ஏற்பட்டு வருகிறது. 

    இதனால் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்புநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும் என தொடர்ந்து அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.   

    ×