search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    X
    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    ஈரோடு: ஒரே நாளில் 777 பேருக்கு தொற்று

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    ஈரோடு, 19 :


    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.


    ஈரோட்டில் கடந்த 7&ந் தேதி தினசரி பாதிப்பு 100&ஐ கடந்தது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் கொரோனா புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.  சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக மேலும் 777 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 237 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந் துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 201 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனா பாதிப்புடன் 75 வயது முதியவர் ஒருவர் கோவையில் உள்ள  மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சைபலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 716 ஆக உயர்ந்து உள்ளது.


    தற்போது மாவட்டம் முழுவதும் 3,366பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாநகர பகுதியிலும் தற்போது தினசரி பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, ஈரோடுமாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 4,500 முதல் 5,000 பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறி உள்ளதால் அவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

     வீட்டு தனிமையில் இருப்பவர்களை அந்தந்த பகுதிக்கு உட்பட்ட சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதை ஒரு சிலர் இன்னும் காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை. இன்னமும் முககவசம் அணியாமல் வருவதை பார்க்க முடிகிறது.

    இதேபோல் சமூக இடைவெளியும் கேள்விக் குறியாகவே உள்ளது. பிற மாவட்டங்களை ஒப்பிடும் போது நமது மாவட்டத்தில் இறப்பு விகிதம் குறைவு தான். நமது மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதை கடந்த முதியவர்கள் தான்.

    எனவே 60 வயது தாண்டிய முதியவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முடிந்த வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×