என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இரவுநேர ஊரடங்கை மீறியவர்கள் மீது வழக்கு
Byமாலை மலர்19 Jan 2022 10:17 AM GMT (Updated: 19 Jan 2022 10:17 AM GMT)
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு, 19:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இரவு ஊரடங்கையொட்டி மாவட்டம் 1,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதேப்போல் 14சோதனைச் சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டது.
ஊரடங்கை மீறி சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார்.
எனினும் நேற்று இரவு ஊரடங்கு மீறி பலர் தேவையின்றி சுற்றித்திரிந்ததை காண முடிந்தது. சிலர் இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றி வந்தனர்.
சிலர் முககவசம் அணியாமல் வந்தனர். நேற்று ஒரே நாளில் ஈரோடு மாநகர் பகுதியில் ஊரடங்கை மீறியதாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேப்போல் முக கவசம் அணியாமல் சென்ற நூற்றுக்கணக் கானவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X