என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோபிசெட்டிபாளையம் அருகே பெயிண்டிங்தொழிலாளிதூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே  பெயிண்டிங்தொழிலாளிதூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (45). இவர் பெயிண்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

    இவரது மனைவி பூங்கொடி. மகேஸ்வரனுக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

    இந்த நிலையில் சம்பவத்தன்று மகேஸ்வரன் வீட்டின் அறையில் பேனில் லுங்கியால் தூக்கு போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அந்தியூரில் நண்பரை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). வேன் டிரைவர். இவர் அந்தியூர் தவிட்டுபாளையம் அருகே கடந்த 21-ந் தேதி இரவு டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள சாக்கடையில் பிணமாக கிடந்தார்.

    சதீஷ் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை யாரோ கொலை செய்து விட்டதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவியதால் அந்தியூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இந்நிலையில் சதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு நேற்று வெளிவந்தது. இதில் சதீஷ் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.

    இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது கொலை நடந்த நாளில் கடைசியாக சதீஷ் மொடச்சூரை சேர்ந்த தனது நண்பர் கார்த்திக் (26) என்பவருடன் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் சதீஷ் இறந்த நாளிலிருந்து கார்த்திக் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் தலைமறைவாக இருந்தார்.

    இதனால் அந்தியூர் போலீசார் கார்த்திக்கை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்தியூர் பகுதியில் பதுங்கியிருந்த கார்த்திக்கை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சதீசை கொன்றதை கார்த்திக் ஒப்புக்கொண்டார்.

    போலீஸ் விசாரணையில் கார்த்திக் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    நானும், சதீசும் நண்பர்கள். சம்பவ நாளன்று சதீஷ் எனக்கு சொந்தமான வேனை வாங்கி ஓட்டி சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். நானும் அவருடன் வேனில் சென்றேன்.

    அந்தியூர் ரவுண்டானா அருகே என்னை இறக்கிவிட்டு சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறி வேனை ஓட்டி சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. இதனால் நான் அந்த பகுதியில் நடந்து சென்றபோது அங்கு ஒரு பகுதியில் கூட்டமாக இருந்தது. நான் அங்கு சென்று பார்த்தபோது சதீஷ் குடிபோதையில் வேனை தாறுமாறாக ஓட்டி 3 பேர் மீது மோதுவது போல் சென்று நிறுத்தியுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் சதீஷ் மற்றும் வேனை பிடித்து வைத்து கொண்டனர்.

    நான் சென்று வேனை கேட்ட போது நாளை காலை வந்து எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டனர். இதனால் எனக்கு சதீஷ் மீது ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர் நானும் சதீசும் தொட்டிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் மது கடைக்கு சென்றோம்.

    அப்போது ஆத்திரத்தில் உன்னால்தான் என் வேன் அவர்களிடம் சிக்கி விட்டது என்று சதீசிடம் சண்டை போட்டேன். அப்போது ஆத்திரத்தில் சதீஷ் கழுத்தை நெரித்து சாக்கடையில் தள்ளி விட்டடேன். இதில் சதீஷ் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

    இதையடுத்து அந்தியூர் போலீசார் கார்த்திக்கை கைது செய்து பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோல், டீசல் விலையை சீராக வைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஜவுளி தொழில் நலிவடையாமல் இருக்கும்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) மொத்த, சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. இங்கு 280 கடைகளும், அதனை சுற்றி, பல நூறு ஜவுளி மொத்த விற்பனை கடைகள், குடோன் விற்பனை, வாகனங்களில் வைத்து விற்பனையும் நடக்கிறது.

    கடந்த, 20 நாட்களுக்கு மேலாக கோடை ஜவுளி விற்பனை தொடங்கி நடந்து வருகிறது. ஆனால், ஜவுளி விலை உயர்வால் மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து கனி மார்க்கெட் தினசரி கடை வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட் கூறியதாவது:-

    கொரோனா கட்டுப்பாடு முதல் ஜவுளி உற்பத்தியும் பாதித்து, விற்பனையும் குறைந்தது. தற்போது தளர்வுகள் நீங்கி முழுமையாக கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் நூல் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து வகையான ஆடைகளின் விலையும் உயர்ந்துள்ளன.

    உதாரணமாக ஆண்களுக்கான சட்டை 20 ரூபாயும், லுங்கி 8 முதல் 10 ரூபாயும், வேட்டி 5 முதல், 10 ரூபாயும், புடவை 30 ரூபாய், பேண்ட் 30 ரூபாய், பனியன், ஜட்டிகள் ஒரு டஜன் 20 முதல் 50 ரூபாயும், சற்று உயர்ந்த ரக ஜட்டி, பனியன்கள் 60 முதல் 70 ரூபாயும், கவுன் 30 முதல் 70 ரூபாயும் உயர்ந்துள்ளது.

    அதுபோல நைட்டி, உள்ளாடைகள், மெத்தை விரிப்பு போர்வை போன்றவையும் விலை உயர்ந்துள்ளது. கோடைக்கான ஆடை வாங்குவோர் அதனுடன் இணைந்து துண்டு, லுங்கி, வேட்டி, போர்வை போன்றவைகளும் வாங்குவார்கள். விலை உயர்வால், வாங்குவதை குறைத்தும் சிலர் வாங்காமலும் செல்வதால், வியாபாரம் கடுமையாக பாதிக்கிறது.

    நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோல், டீசல் விலையை சீராக வைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஜவுளி தொழில் நலிவடையாமல் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெருந்துறை அருகே ஆம்னி வேனை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே ஆம்னி வேனை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.

    பெருந்துறை குன்னத்தூர் ரோடு பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் சுரேந்தர் சிங் (வயது 34). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். குன்னத்தூர் ரோட்டில் பிளாஸ்டிக் கவர் மற்றும் தார்ப்பாய் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு தனது ஆம்னி வேனை கடையின் முன்பு சாவியுடன் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது வேனை காணவில்லை. உடனடியாக தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து வேனை தேடினார்.

    இந்த நிலையில் நேற்று காலை ஈரோடு ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் முன்பு ஆம்னிவேன் நின்று கொண்டிரு ப்பதாக சுரேந்தர் சிங்குக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தனது நண்பர்களுடன் சென்று பார்த்தபோது வேனுக்குள் ஒரு வாலிபர் படுத்து தூங்கிக் கொண்டி ருந்தார். அவரை எழுப்பி விசாரித்து பின்னர் பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர்.
     
    போலீசார் விசார ணையில் அவர் மதுரை திருபுவனம் பகுதியை சேர்ந்தவர் மணியன் (30) என தெரியவந்தது. மேலும் அவர் வேனை திருடி சென்றதை ஒப்புக்கொண் டார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மணியனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு அருகே கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு அருகே கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


    ஈரோடு மாவட்டம் பெரியசேமூர் அருகே பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கு தீர்ப்பில் உத்தரவிடப் பட்டுள்ளது.

    அதன்படி, ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அறிவுறுத் தலுக்கிணங்க, பெரியசேமூர் ஆ கிராமம்  அடுக்குப் பாறையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கம்பிவேலி போன்ற ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள்  போலீசார் உதவியோடு ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றினர்.

    கோபிசெட்டிபாளையத்தில் இன்று காலை ஒரு வீட்டில் சாரை பாம்பு புகுந்தது-. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    கோபி:

    கோபிசெட்டிபாளையத்தில் இன்று காலை ஒரு வீட்டில்  சாரை பாம்பு புகுந்தது-. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


    கோபிசெட்டிபாளையம் அடுத்த நாகமலை விரிவாக்கம் வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (43). இவரது வீட்டின் படுக்கை அறையில் இன்று காலை திடீரென ஒரு சாரை பாம்பு புகுந்தது. 

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அதை விரட்டி முயற்சி செய்தனர். 

    ஆனால் பாம்பு அங்கு பதுங்கி கொண்டது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அந்த சாரை பாம்பை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு விட்டனர். 
    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து இன்று 4-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
    ஈரோடு:


    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து இன்று 4-வது நாளாக பெட்ரோல்&டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்தியாவில் கடந்த 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.  ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
     
    இதன் காரணமாக கடந்த 21-ந் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை உயரத் தொடங்கியது.  கடந்த 21-ந்  தேதி ரூ.101.89-க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல்  படிப்படியாக உயர்ந்து இன்று மேலும் 76 காசு உயர்ந்து ரூ.104.83-க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட 4 நாட்களில் மட்டும் ரூ.2.94 காசு பெட்ரோல் உயர்ந்துள்ளது.

    இதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.93-க்கு விற்பனை யானது. படிப்படியாக உயர்ந்து இன்று மேலும் 70 காசு உயர்ந்து ரூ.94.90 காசுக்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட 4 நாட்களில் மட்டும் ரூ.2.97 காசுகள் உயர்ந்துள்ளன. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள், சிறு வியாபாரிகள்  திணறி வருகின்றனர். தொடர்ந்து இவ்வாறு விலை உயர்ந்து வருவதால் மற்ற பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கோசனம் பஸ் நிறுத்தம் அருகே கோபி&நம்பியூர் சாலையில் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    நம்பியூர்:

    கோசனம் பஸ் நிறுத்தம் அருகே கோபி&நம்பியூர் சாலையில் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நம்பியூர் அருகே உள்ள கோசனம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் வினியோ கிக்கப்பட்டு வந்தது.

     இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனையடுத்து இன்று காலை 7 மணி அளவில் கோசனம் பஸ் நிறுத்தம் அருகே கோபி&நம்பியூர் சாலையில் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    அப்போது பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. நாங்கள் குடிநீர் விலைக்கு வாங்கி உபயோகித்து வருகிறோம். நாளொன்றுக்கு ரூ.250&க்கும் மேல் குடிநீருக்காக செலவு செய்கிறோம் என கூறினர்.

     இதேபோல் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில்   கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. பொது மக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களை தேடி செல்கின்றனர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து  குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தாளவாடி மலைப்பகுதியில் பழுத்த தக்காளியை பறித்து குப்பையில் கொட்டி வருவதாகவும், சிலர் அப்படியே செடியில் விட்டு விடுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டத்தின் கடைகோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ளது தாளவாடி.

    அதன் சுற்றுவட்டார கிராமங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம்.

    இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ 2 ரூபாய் முதல் 3 ரூபாய் விலை கொடுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தாளவாடி விவசாயிகள் கூறியதாவது:-

    3 மாத பயிரான தக்காளி நாற்று, களைஎடுத்தல், உரம் மருந்து என ஏக்கர் ஒன்றுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. கடந்த 3 மாதம் முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.25 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் தற்போது ஒரு கிலோ 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.

    விளைச்சல் அதிகம் எனக் காரணம் கூறி குறைவான விலைக்கு கேட்கின்றனர். வியாபாரிகள் கொள்முதல் செய்வதால் பயிர்களுக்கு செலவு செய்த அசல் தொகை கூட கிடைப்பதில்லை.

    இதனால் பழுத்த தக்காளியை பறித்து குப்பையில் கொட்டி வருவதாகவும், சிலர் அப்படியே செடியில் விட்டு விடுவதாகவும் தெரிவித்தனர். விவசாயத்தை நம்பி இருந்தால் கடன் தொல்லையால் தான் அவதிபட முடியும். விவசாயத்தை விட்டு நகர் பகுதிக்கு தான் இனி செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.



    வனப்பகுதியையொட்டிய நிலத்தில் மான், காட்டு பன்றிகளை வேட்டையாடும் கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைக்கின்றனர். இதில் சிக்கி ஆடு, மாடுகள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த பசுவபாளையத்தைச் சேர்ந்தவர் மல்லிராஜ் (43). இவர் பசு மாடுகள், ஆடுகளை வளர்த்து வந்தார். இவரது பசு மாடுகள் அதே பகுதியில் உள்ள காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாடுகள் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று இருந்தது. அப்போது திடீரென வெடிச்சத்தம் கேட்டது.

    இதையடுத்து மல்லிராஜ் என்ன ஏதோ என்று பதறி கொண்டு காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது தனது பசுமாட்டின் வாய் சிதைந்து ரத்தம் கொட்டி நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து பவானி சாகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் காட்டுப் பன்றிகளை வேட்டையாட மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டை மாடு கடித்ததில் வெடித்து மாட்டின் வாய் சிதைந்தது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாட்டை அழைத்து சென்றனர்.

    வனப்பகுதியையொட்டிய நிலத்தில் மான், காட்டு பன்றிகளை வேட்டையாடும் கும்பல் நாட்டு வெடிகுண்டுகளையும் மறைத்து வைக்கின்றனர். இதில் சிக்கி ஆடு, மாடுகள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது. எனவே வேட்டை கும்பல் மீது போலீசார் மற்றும் வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கடந்த சில நாட்கள் முன்பு டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயியின் மாடு அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றபோது நாட்டு வெடிகுண்டை கடித்து அந்த மாட்டின் வாய் சிதைந்து சுமார் 5 நாட்களுக்கு பிறகு அந்த மாடு இறந்தது குறிப்பிடத்தக்கது.



    ஆசனூர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் விலை உயர்ந்த மரம், செடி, கொடிகள் எரிந்து சேதமானது.
    தாளவாடி:

    ஆசனூர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் விலை உயர்ந்த மரம், செடி, கொடிகள் எரிந்து சேதமானது.

     சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில்  புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் மழை பெய்யாததால் பசுமையாக இருந்த மரம், செடி, கொடிகள் காய்ந்து வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதும், விவசாய நிலத்தை சேதபடுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் அரேப்பாளையம்&  கேர்மாளம் செல்லும் சாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த மரம், செடி,  கொடிகள் எரிந்து சேதமடைந்தது.

    வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிவதைக் கண்ட மலைகிராம மக்கள் உடனடியாக ஆசனூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு  வனத் துறையினர் விரைந்து சென்று 4 மணி நேர போராட்டத்திக்கு பிறகு தீயை அணைத்தனர்.
    கீழ்பவானி வாய்க்காலில் குளித்த முதியவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    கீழ்பவானி வாய்க்காலில் குளித்த முதியவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு அடுத்த முத்தம் பாளையம் பூந்துறை ரோடு, பாங்க் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 68). இவர் அதே பகுதியில் கோழிகளை வளர்த்து வருகிறார். 

    இவரது மகன் ராஜேஷ். ஈரோடு வண்டியூரான் கோவில் பகுதியில் வசித்து வருகிறார். 

    இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி அரச்சலூர்&ஈரோடு ரோடு, திருமங்கலம் பிரிவிலுள்ள கீழ்பவானி வாய்க்காலில் குளித்து கொண்டிருந்தார். 

    அப்போது திடீரென அவர் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பழனிச்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    மேலும் இதுகுறித்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×