என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் 11 பணிமனைகளில் இருந்து தினமும் 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய வேலை நிறுத்த போராட்டத்தில் 90 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை.

    ஈரோடு:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும்.

    மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது.

    இந்த போராட்டத்திற்கு அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூ.சி, எல்.பி. எப்.எம்.எல்.எப், எல்.டி.யு.சி, உள்ளிட்ட 10 தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    இதனால் முதல் நாளான நேற்று பஸ் போக்குவரத்து, வங்கி சேவைகள், தபால் சேவைகள் முடங்கியது. குறிப்பாக பஸ் போக்குவரத்து ஊழியர்கள் பெரும்பாலானோர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பஸ் சேவை முடங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 11 பணிமனைகளில் இருந்து தினமும் 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய வேலை நிறுத்த போராட்டத்தில் 90 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    அதேநேரம் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயங்கியதால் அதில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை அனைத்து தொழிற்சங்கத்தினர் கூடிப் பேசி முடிவெடுத்து நாளை 2-வது நாளாக நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று 2-வது நாளாக பொது வேலை நிறுத்தம் தொடங்கியது. இருந்தாலும் ஈரோடு மாவட்டத்தில் இன்று வழக்கம் போல் அனைத்து அரசு பஸ்களும் இயங்கியது. மாநகர பஸ்கள், புறநகர் பஸ்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

    இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி 93 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதியத்திற்குள் அனைத்து பஸ்களும் அதாவது 100 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்நிலையில் 2-வது நாளாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுபோல் கோபி,சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி போன்ற இடங்களிலும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தாளவாடி அருகே பசு, கன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தாளவாடி:

    தாளவாடி அருகே பசு, கன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு  யானை, சிறுத்தை, மான்கள்  உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
    தாளவாடி வனச்சரகத் துக்கு உட்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளி யேறும் சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்டத் துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டை யாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்தநிலையில் தாள வாடி அருகே உள்ள சேஷன் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்தராஜ் (48). விவசாயியான இவர் 6 மாடுகள் வளர்த்து வருகிறா.  வழக்கம் போல் தனது தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். தொடர்ந்து அவர் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாடுகளை அழைத்து வர சென்றார்.

    அப்போது ஒரு பசு மாடு மற்றும் கன்று குட்டி ஒன்று கழுத்து  பகுதியில் அடிபட்டு இறந்து கிடந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். கால்நடைகளை வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு சிறுத்தை அடித்து கொன்று இருக்கலாம் என எண்ணினார்.
    இது பற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் அந்த பகுதியில் இருந்த கால் தடம் மற்றும் இறந்த மாடுகளை ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை தாக்கி மாடுகள் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

    கடந்த வாரம் இதே பகுதியில் ஒரு சிறுத்தை காளியப்பன் என்பவர் கரும்பு தோட்டத்தில் புகுந்து பதுங்கி கொண்டது குறி ப்பிடத் தக்கது.

    எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தை நடமாட்டத்தை கண் காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். மேலும் இறந்த மாடுகளுக்கு  இழப்பீடு தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பொது வேலை நிறுத்தத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 10 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்கள்அவதியடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    பொது வேலை நிறுத்தத்தையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 10 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்கள்அவதியடைந்துள்ளனர்.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 
    தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இன்றும்,  நாளையும் அகில இந்திய அளவில் இரண்டு நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 

    இந்தப் போராட்டத்திற்கு அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யூ.சி. எல்.பி.எப்., எம்.எல்.எப்., எல்.டி.யு.சி., உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் பஸ் போக்குவரத்து, வங்கி சேவைகள், தபால் சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. 
    பஸ் போக்குவரத்து ஊழியர்கள் இந்த பொது வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சம்பளம் பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 2 நாள் பொது வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது. 

    எச்சரிக்கையும் மீறி பஸ் போக்குவரத்து ஊழியர்கள் பெரும்பாலா னோர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
    இதனால் பொதுமக்கள், வியாபா ரிகள், வெளியூரி லிருந்து வருபவர்கள், பள்ளி&கல்லூரி மாணவ மாணவிகள் கடும் அவதியடைந்தனர்.ஈரோடு மாவட்டத்தில் 11 பணிமனை களில் இருந்து தினமும் 700&க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் இன்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியதால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பெரும்பாலும் வேலைக்கு வரவில்லை. இதனால் அரசு போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

    இருக்கின்ற பணியாட் களை வைத்து ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப் பட்டது. ஆனால் அதேநேரம் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. இதனால் தனியார் பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று காலை கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் அதிகளவில் வந்து இருந்தனர்.
    ஆனால் அரசு பஸ்கள் சொற்ப அளவிலேயே இயக்கப்பட்டதால் மாணவ, மாணவியர் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக 10 &ம் வகுப்பு மற்றும் 12&ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. ஆனால் பஸ்கள் இயங்காததால் அவர் கடும் அவதி அடைந்தனர். ஒரு சில பஸ்கள் மட்டுமே இயங்கியது. ஆனாலும் அந்த பஸ்சில் கூட்டம் அலைமோதியது. பஸ்சில் இடம் பிடிக்க மாணவர்கள் போட்டி போட்டு ஏறினர். இதேபோல் வேலைக்கு செல்லும் பணியாளர்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

    காலை 9 மணி நிலவரப்படி வெறும் 10 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கின. அதேபோல் வெளி மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படா ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். ஒரு மணி நேரம் ஆகியும் பஸ்கள் வராததால் சிலர் பொறுமை இழந்து நடந்து செல்ல தொடங்கினர். டவுன் பஸ்கள் குறிப்பிட்ட அளவே இயங்குவதால் கோபி, அந்தியூர், சத்தியமங்கலம் செல்லும் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். 
    இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பஸ்கள் இயக்கப்படாததால் கர்நாடக பயணிகள் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்து அவதி அடைந்து வருகின்றனர்.
    இதேபோல் கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி போன்ற பஸ் நிலையங்களிலும் ஒரு சில பஸ்கள் மட்டுமே இயங்கியதால் மக்கள் அவதி அடைந்தனர். ஆனால் அதேநேரம் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கியது. இதனால் ஆட்டோக்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 10 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பஸ் நிலையங்களில் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர்.
    தனியார் ஆஸ்பத்திரி மருந்து கடையில் தீ விபத்து நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    தனியார் ஆஸ்பத்திரி மருந்து கடையில் தீ விபத்து நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
    ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் தலைமை மின் பொறியாளர் அலுவலகம் எதிரே தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 

    மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மனைக்கு  மருந்து கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து, மெடிக்கல் கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றனர். 

    இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் பூட்டப்பட்டிருந்த மருந்து கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால், மருத்துவமனையில் இருந்த நோயாளிகளில் ஒரு சிலருக்கு  மூச்சு திணறல் ஏற்பட்டது. இதுகுறித்து நோயாளியின் உறவினர்கள் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்,  பிடித்த தீயை சுமார் 50 நிமிடம் போராடி தீயையும், கரும்புகையையும் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் உயிர் காக்கும் மருந்துகள், பிரிட்ஜ், போன்றவை நாசமானது. 

    தீ விபத்துக்குண்டான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கவுந்தப்பாடி அருகே காவலாளியிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கவுந்தப்பாடி அருகே காவலாளியிடம் வழிப்பறி செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கவுந்தப்பாடி அருகே பி.மேட்டுப்பாளையம் ஓவியர் வீதியில் வசிப்பவர் அய்யாச்சாமி (57). இவர் ஆப்பக்கூடலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி அதிகாலை சைக்கிளில்  வேலைக்கு சென்றார். பெருந்தலையூர் மயானம் அருகே சென்று கொண்டிருந்த போது அவரை வழி மறித்த 3 வாலிபர்கள் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர்.

    இச்சம்பம் குறித்து அய்யாச்சாமி கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ் பெக்டர் சுபாஷ் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடிவந்தார். 

    இந்நிலையில் கவுந்தப்பாடி அடுத்துள்ள சிறுவலூர் ரோடு அய்யன்வலசு பிரிவு அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் விஜயமங்கலம் மூங்கில் பாளையத்தை சேர்ந்த கவின் என்கிற லோகேஷ் (23), பவானி கூலிக்காரன் பாளையம் சேர்ந்த வேல் பிராகாஷ் என்கிற பிரகாஷ் (25) என்பதும், 2 பேரும் பெருந்தலையூர் மயானம் அருகே அய்யாச்சாமியிடம் வழிப்பறி செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது  செய்து அவர்களிடம்  இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார்  பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும்  கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    காய்கறி வரத்து அதிகரிப்பு எதிரொலியாக வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது தக்காளி கிலோ ரூ.7&க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
    ஈரோடு:

    காய்கறி வரத்து அதிகரிப்பு எதிரொலியாக வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது
    தக்காளி கிலோ ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

    ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி தினசரி மார்க்கெட்டில் ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தற்போது காய்கறிகள் விளைச்சல் அதிகரித்து காணப் படுவதால் காய் கறிகள் வரத்தும் அதிகரித்து காணப் படுகின்றன. இதனால் கடந்த சில நாட்களாகவே வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்து வருகின்றன. ரூ.10 முதல் 20 வரை காய்கறிகள் விலை குறைந்துள்ளது.

    இன்று வ. உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
    கத்திரிக்காய்-15, வெண்டைக்காய்- 30 முதல் 35, பீட்ரூட்-40, பாவைக் காய்-30, புடலங்காய்-15, முருங்கைக்காய்-40, அவரைக்காய்-30 முதல் 40, சேனைக்கிழங்கு-25, முட்டைக்கோஸ்-15 முதல் 20, கேரட்-60 முதல் 70, பீன்ஸ்-30 முதல் 40, இஞ்சி-50, பச்சபட்டாணி-70, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம்-20, 3 கிலோ தக்காளி-20. கிலோ கணக்கில் ஒரு கிலோ தக்காளி ரூ.7-க்கு விற்கப்பட்டு வருகிறது.
    பெருந்துறை அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    பெருந்துறை அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் மாவட்டம் தாள வாய்பட்டி பகுதியை சேர்ந் தவர் அருணகிரி (35). லாரி டிரைவர்.
    இவர் கர்நாடகா மாநிலத் தில் இருந்து பாக்கு மட்டை லோடு ஏற்றி கொண்டு பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் அடுத்த பூண்டி காட்டு வலசு பகுதியில் உள்ள பாக்குமட்டை தொழிற்சாலைக்கு வந்தார்.

    தொடர்ந்து அவர் அங்கு லாரியை நிறுத்தி விட்டு லாரி மீது ஏறி தார்பாயை அகற்றினார். அப்போது மேலே இருந்த மின்சார கம்பி மீது எதிர் பாராதவிதமாக அவரது கை உரசியது. இதையடுத்து அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு கழுத்து, காலில் பலத்த காயம் அடைந்து அலறினார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத் தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திராவிட இயக்கத்தின் பாசறையாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கையுடன் இந்த இயக்கம் தொடர்ந்து செயல் படுகிறது. இதை தொடர்ந்து இளைஞர்கள் கட்டி காக்க வேண்டும்.

    சூரம்பட்டி:

    ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள புதுப்பிக்க பட்ட ம.தி.மு.க.அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாநகர மாவட்ட ம.தி.மு.க செயலாளர் முருகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர்.கலைஞர் மற்றும் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் கட்டிக்காத்து வரும் திராவிட இயக்க பாசறையில் இந்துத்துவா சனாதன அமைப்புகள் ஊடுருவ முயற்சிக்கின்றன.

    இந்த ஊடுருவலை தடுக்க இளைஞர்கள் அதிகம் வர வேண்டும். பெரியாரின் சிந்தனைகளை, அண்ணாவின் கொள்கைகளை, கலைஞரின் எழுத்துக்களை இளைஞர்கள் அதிகம் படிக்க வேண்டும். திராவிட பாசறைக்குள் ஊடுருவ முயற்சிக்கும் சனாதன சக்திகளை முறியடிக்க வேண்டும்.

    திராவிட இயக்கத்தின் பாசறையாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கையுடன் இந்த இயக்கம் தொடர்ந்து செயல் படுகிறது. இதை தொடர்ந்து இளைஞர்கள் கட்டி காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு அலுவலக வளாகத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

    ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 85 திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளார். இதில் ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஈரோடு சோலாரில் ரூ.60 கோடி செலவில் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    இப்போது அங்கு தற்காலிகமாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதேப்போல கனிராவுத்தர் குளத்தில் புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. ஈரோடு சி.என்.சி. கல்லூரியை 20 ஆண்டு காலமாக அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இப்போது தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த கல்லூரியை புதுப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க. மற்றும் தி.மு.கவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட செயலாளர் குழந்தைவேல் நன்றி கூறினார்.

    ஈரோடு மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்தது. தற்போது 4 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்தது. தற்போது 4 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில்  கொரோனா முதல் மற்றும்  2-ம் அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. 

    இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் என்னும் தொற்றால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டு தினசரி பாதிப்பு அதிகரித்தது. எனினும் தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் போட்ட காரணத்தினால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. லேசான அறிகுறிலேயே அவர்கள் குணமடைந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 31 ஆயிரத்து 929 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர். நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. 

    தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 4 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இன்று ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி அலகு குத்தி வந்து வழிப்பட்னர்.
    ஈரோடு:

    ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இன்று ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி அலகு குத்தி வந்து வழிப்பட்னர்.

    ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் வகையறா கோவில்களான நடு மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்கள் உள்ளன.


    இந்த கோவில்களில் ஆண்டு தோறும் நடைபெறும் குண்டம், தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.ஆனால் கொரோனோ காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பெரிய மாரியம்மன் வகையறா கோவில் பண்டிகைகள் நடத்தப்படாமல் இருந்தன.

    தற்போது 2 ஆண்டுக்கு பிறகு கோவில்களின் குண்டம் மற்றும் தேர்திருவிழாவானது கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான கோவில்களில் கம்பம் நடும் நிகழ்ச்சி கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.

    இதில் 3 கோவில் களுக்கான கம்பங்கள் எடுத்து வரப்பட்டு பூஜை செய்யப்பட்டு கோவில்களில் நடப்பட்டது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு ஈரோடு மற்றும் அதன் சுற்று பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

    குறிப்பாக பெண்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டு செல்கின்றனர். இன்று ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் வந்து வழிபட்டனர்.

    இதேபோல் நூற்றுக் கணக்கான பெண்கள் கம்பத்திற்கு நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து வரும் 30-ந் தேதி குண்டம் விழாவும், 31-ந் தேதி தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து வருகிற 2-ந் தேதி கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு கம்பங்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. 3-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    கோபிசெட்டிபாளையம் அருகே காதலிக்க சொல்லி சிறுமியை மிரட்டிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் பகுதியைச்சேர்ந்த 13 வயது சிறுமி தினமும் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு பால் பண்ணைக்கு சைக்கிளில் பால் ஊற்ற சென்று வந்தார்.

    இந்த நிலையில் ஒட்டக்கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சென்னியப்பன் என்பவரது மகன் நந்தகுமார் (23) என்பவர் தினமும் சிறுமியை பின் தொடர்ந்து செல்போன் மூலம் போட்டோ எடுத்து வந்து உள்ளார்.

    சம்பவத்தன்று சிறுமி வழக்கம் போல் சைக்கிளில் கூட்டுறவு பால் பண்ணையில் பால் ஊற்றி விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது நந்தகுமார் தனது மோட்டார் சைக்கிளில் சிறுமி மீது மோதுவது போல் பயமுறுத்தி உள்ளார். மேலும் நான் உன்னை காதலிக்கிறேன். நீயும் என்னை காதலிக்க வேண்டும் நான் கூப்பிடும்போது என்னுடன் வரவேண்டும். இல்லை என்றால் உன்னை வாழ விடமாட்டேன். என் பேச்சை கேட்காவிட்டால் உன் போட்டோக்களை எடிட் செய்து என் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன். இது பற்றி உனது பெற்றோர்களிடம் தெரிவித்தால் உன்னையும், அவர்களையும் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்து உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி நடந்த விவரங்களை தனது தந்தையிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறுமியின் தந்தை கோபிசெட்டி பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி நந்தகுமார் மீது போக்சோ மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மீரான் மொய்தீன் வீதியில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
     
    அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் வந்து கொண்டிருந்தார். அந்த நபரை தடுத்து நிறுத்தி  மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த வெள்ளை மூட்டையை போலீசார் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர், ஈரோடு மீரான் மொய்தீன் வீதியை சேர்ந்த அசாருதீன் (37) என்பதும், விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றதையும் ஒப்புக் கொண்டார்.

    இதனையடுத்து அசாருதீனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள 40.32 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×