என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த பாசூர் அருகே உள்ள பனங்காட்டு புதூர் பகுதியில் கூலித்தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு 17 வயதில் ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.
இவரது மகள் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென வாந்தி எடுத்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்தபோது மாணவி மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டார்.
இதுகுறித்து அவரது தாயார் கேட்ட போது மாணவி தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதைக்கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து விசாரித்தபோது அதே ஊரை சேர்ந்த இவரது உறவினர் மகனான தாமோதரன் (வயது 22) என்பவர் கொரோனா காலகட்டத்தில் கடந்த ஆண்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மாணவியிடம் பழகி உள்ளார்.
மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்றதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமோதரன் அடிக்கடி மாணவி வீட்டுக்கு வந்து அவருடன் நெருங்கி பழகி திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாகவே மாணவி கர்ப்பமானது தெரிய வந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர்.
கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குளித்து செல்கின்றனர்.
விடுமுறை நாட்களில் ஈரோடு மட்டுமின்றி கோவை, சேலம், நாமக்கல், கரூர் உள்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.
இங்கு பொறிக்கப்படும் மீன்களை சாப்பிடுவதற்கு என்றே மக்கள் கூட்டம் தனியாக உள்ளது. காளிங்கராயன் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும்போது கொடிவேரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொடிவேரி அணை பகுதியில் பராமரிப்பு பணி நடந்து வந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கடந்த 9ந் தேதி முதல் மீண்டும் கொடிவேரி அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரி அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வருகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள். வரும் வாரத்தில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மேலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தண்ணீர் குறைவாக கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஈரோடு சாஸ்திரி நகர் அடுத்த குமரன் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்கள் குப்பை கொட்டுவதற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு குப்பைகள் கொட்டப்படுவது இல்லை.
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தரம்பிரித்து வாங்கி சென்று விடுகின்றனர். இதனால் குப்பை கொட்டும் இடம் காலியாக இருந்தது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் இன்று காலை நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது குப்பை கொட்டும் இடத்தில் ஏராளமான மருந்து, மாத்திரைகள் உட்பட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது.
இவ்வாறு மருத்துவ கழிவுகளை பொது இடத்தில் கொட்டுவது குற்றமாகும். இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுகாதார ஆய்வாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் அபராதம் விதித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதையும் மீறி நேற்று இரவு இந்த பகுதிக்கு வந்த நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் மாநகராட்சி பணியாளர்கள் அந்த மருத்துவ கழிவுகளை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் யார் என்று தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கருங்கல்பாளையம் அடுத்த கிருஷ்ணம்பாளையம் மின்வாரியம் அலுவலகம் அருகே 2 பேர் சந்தேகப்படும்படியாக சாக்கு மூட்டைகளை கையில் வைத்து நின்று கொண்டிருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் (57), சக்திவேல்(36) என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளை திறந்து சோதனை செய்தபோது அதில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
கூடுதல் விலைக்கு விற்பதற்காக மதுபாட்டில்களை சாக்கு மூட்டையில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சாக்கு மூட்டையில் இருந்த 98 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.13 ஆயிரம் இருக்கும்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் காங்கிரஸ் நடைபயண நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. மாநில துணை பொதுப்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
10 நாட்களுக்கு 250 கி.மீ. நடைபயணமாக 250 கிராமங்களுக்கு சென்று காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி இந்திக்கு எதிரான கட்சி அல்ல. இந்திய எல்லையில் பேசும் எந்த மொழியையும் வெறுக்கவில்லை. ஆனால் விரும்பாத மக்கள் மீது மொழியை திணிப்பதை எதிர்த்து வருகிறோம்.
மொழி கொள்கையில் மாற்றம் செய்வதை எதிர்க்கிறோம். ஜவஹர்லால் நேரு இந்திய தேசத்தில் மாநிலங்களை அடையாளப்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் மொழி வழி மாநிலங்களை உருவாக்கினார். வேற்றுமையில் ஒற்றுமையை கண்டது இந்தியா.
நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு அரசு வரி விகிதாச்சார அடிப்படையில் நிதி தாருங்கள் என தமிழக அரசு கேட்பதை தவறு என கூறுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. இதற்கு பிரிவினை உணர்வுள்ளவர்கள் இப்படி கேட்பதாக கூறுகிறார்.
9வது, 10வது நிதி கமிசன் அறிக்கையில் 1 ரூபாயில் 60 பைசா மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் 15வது நிதி கமிசன் அறிக்கையில் 35 பைசா மட்டுமே தரப்படுகிறது.
மாநில அரசு தனக்கு வரவேண்டிய தொகையில் 50 சதவீதம் இழக்கிறது. எப்படி நிர்வாகம் நடத்த முடியும். எங்கள் பங்கு 60 பைசா வழக்கமாக வழங்குவதை விட்டு 35 பைசா கொடுத்தால் எப்படி நிர்வாகம் நடத்த முடியும் என கேள்வி கேட்பதை நிர்மலா சீதாராமன் பிரிவினைவாதம் என்கிறார்.
பொறுப்பான இடத்தில் இருக்கும் நிதி அமைச்சர் சரியான பதிலை தர வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் கேட்கும் அதிகாரபூர்வமான கேள்விகளுக்கு அளிக்கும் பதிலா இது. திட்டமிட்டு மாநிலங்களின் வளத்தை குறைக்க முயற்சிக்கிறார்கள்.
தமிழகம் போன்ற மாநிலங்களை அடக்கி வைக்க நினைக்கிறார்கள். சமூக நீதி கொண்ட தமிழகத்தை வஞ்சிக்க பார்க்கிறது பா.ஜனதா.
கொடுக்கும் நிதியை நிறுத்தினால் நிர்வாகம் செயலிழந்து போய்விடும் என நினைக்கிறார்கள். கொள்கைகள், உரிமைகள் பறிக்கப்படும் போது பொதுமக்களிடம் சென்று பரப்புரை செய்யும் நிலையில் இருக்கிறோம்.
பா.ஜனதா நாட்டில் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. எவ்வளவு வேறுபாடுகள் இருக்கும் நாட்டில் ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒரே வழிபாடு எப்படி சாத்தியமாகும்.
சாதி, மதம் இறை வழிபாட்டின் பெயரால் இந்த நாட்டில் கலவரத்தை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் மதசார்பின்மைக்கான எடுத்துக்காட்டான அரசாக அனைத்து மக்களுக்குமான அரசாக தமிழக அரசு விளங்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






