என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு அன்னவீதியை பகுதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (41). இவரது மனைவி பிரவீன்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஷேக் தாவூத் சென்ட்ரிங் சீட் மாட்டும் வேலை பார்த்து வந்தார். பிரவீன் வீட்டுவேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் ஷேக் தாவூத்துக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. மது அருந்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 2 மாதங்களாக நெல்லைக்கு வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் ஈரோட்டுக்கு வந்தார். கடந்த 3 வாரமாக வேலைக்கு செல்லாமல் மது அருந்துவிட்டு தினமும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் பிரவீன் சாப்பாடு வைத்தால் அதை எட்டி உதைத்து விட்டு பின்னர் மீண்டும் சாப்பிட்டு தனது அறைக்கு தூங்க சென்றார்.
காலை பிரவீன் எழுந்து பார்த்தபோது ஷேக் தாவூத் அறையில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஷேக் தாவூத் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






