என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    பரவலாக பெய்த கோடை மழை

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

    குறிப்பாக ஈரோடு புறநகர் பகுதியான அம்மாபேட்டை, அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி, கோபிசெட்டிபாளையம், மொடக்குறிசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    சில சமயம் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் ஏராளமான வாழைகள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. 

    இந்நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் காலை வெயில் வாட்டி வதைத்தது. 

    மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன.இதையடுத்து புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 

    பெருந்துறை, தாளவாடி, பவானிசாகர், சென்னிமலை,  கொடிவேரி, வரட்டுப்பள்ளம், மொடக்குறிச்சி போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. 

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருந்துறை-11, கோபி-12.2, தாளவாடி-11.2, சத்தியமங்கலம்-6, பவானிசாகர்-9.6, பவானி-2.4, சென்னிமலை-18, கவுந்தபாடி - 14.4, எலந்தகுட்டைமேடு-4.8, வரட்டுப்பள்ளம்-6,  குண்டேரிபள்ளம்-3, கொடிவேரி-14, மொடக்குறிச்சி- 1.
    Next Story
    ×