search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடிவேரி அணை"

    • கோபி, நம்பியூர் பகுதிகளில் பவானி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது.
    • கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து செல்கிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை மற்றும் விழா நாட்களில் ஈரோடு, கோபி செட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கொடிவேரிக்கு தங்கள் குடும்பத்துடன் வந்து அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

    இதனால் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கெரிவேரியில் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலம், கோபி செட்டிபாளையம், நம்பியூர் கொடிவேரி மற்றும் சுற்று வாட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் கோபி, நம்பியூர் பகுதிகளில் பவானி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது.

    இதே போல் கொடிவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கொடிவேரியில் 1200 கன அடி தண்ணீர் செல்கிறது.

    இதனால் கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து செல்கிறது. இதையொட்டி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் அதிகளவு செல்கிறது.

    எனவே சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. அணையில் தண்ணீர் அளவு குறைவும் வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. நீர் வரத்து குறைந்த பின் வழக்கம் போல் அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையொட்டி கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு தடை என அறிவிக்கப்பட்டு இருந்ததது.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று காலை வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் பலர் வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து இருந்தனர். ஆனால் உள்ளே செல்லவும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதையொட்டி அவர்கள் அந்த பகுதியில் இயற்கை அழகை ரசித்து விட்டு அணையில் குளிக்க முடியவில்லையே என ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கொடிவேரி அணை வழியாக 1,302 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றானது கொடிவேரி அணை. இந்த அணைக்கு ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் உபரிநீர் பவானி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொடிவேரி அணை வழியாக 1,302 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானி ஆற்றில் 1302 கன அடி தண்ணீர் வெளியேறி வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைகட்டுக்கு வரவோ, குளிக்கவோ பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

    மேலும் பவானி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் கால்நடைகள் மேய்க்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும் பொதுபணித்துறை சார்பில் அறிவுறத்தப்பட்டுள்ளது.

    • வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
    • கொடிவேரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் கொடிவேரி உள்பட மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    இதே போல் கொடிவேரியில் கடந்த 2 மாதமாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதி வருகிறது.

    இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொடிவேரிக்கு அணைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதே போல் நேற்று (சனிக்கிழமை) கொடிவேரி தடுப்பணைக்கு அதிகளவில் பொதுமக்கள் வந்திருந்தனர்.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மக்களின் கூட்டம் அலை மோதியது.

    தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    கடந்த சில நாட்களாக கொடிவேரி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியாக காணப்பட்டது. கடும் வெயிலின் தாக்கத்தால் அவதிபட்டு வந்த பொது மக்கள் தற்போது குளிர்ந்த காற்று வீசுவதால் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்தனர்.

    இதையொட்டி கொடிவேரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக ஏராளமானோர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து குளித்து குதூகளித்தனர்.
    • பவானிசாகர் பஸ் நிலையம் மற்றும் பூங்கா பகுதியில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அமைந்துள்ளது. இந்த தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது. இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் காரணமாக கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் வந்து கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ரம்ஜான் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தெடர்ந்து 2 நாட்கள் விடுமுறை நாட்கள் வந்ததால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கொடிவேரி அணைக்கு நேற்று முன் தினம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்கத்து மாவட்டங்களான சேலம், கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

    இதே போல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் காலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்தனர். இதை தொடர்ந்து நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் கட்டுகடங்காமல் அலைமோதியது.

    இதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக ஏராளமானோர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து குளித்து குதூகளித்தனர். இதனால் நேற்று கொடிவேரி எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாகவே காணப்பட்டது. கொடிவேரி அணையில் நேற்று வழக்கத்தைவிட அதிகமான பொதுமக்களின் கூட்டம் இருந்தது.

    இதையொட்டி ஈரோடு, சத்தியமங்கலம் ரோடு கொடிவேரிக்கு செல்லும் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கார், வேன், பஸ், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து சென்றன.

    குடும்பத்துடன் வந்த பொதுமக்கள் தங்கள் கொண்டு வந்த உணவுகளை அந்த பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் அங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளையும் ருசித்து சாப்பிட்டு சென்றனர்.

    இதனால் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 6 ஆயிரத்து 500 பேரும், நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 500 பேர் என மொத்தம் 19 ஆயிரம் பேர் கடந்த 2 நாட்களில் மட்டும் கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்தனர். இதன் மூலம் ரூ. 95 ஆயிரம் வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொடிவேரி அணை வரலாற்றிலேயே நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்தது இதுவே முதன் முறை என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதே போல் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் பவானிசாகர் அணைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் பவானிசாருக்கு வந்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து குடும்பத்துடன் வந்த மக்கள் ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். மேலும் அணையில் கொட்டும் தண்ணீரை ரசித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் பலர் படகு சவாரி செய்து தண்ணீர் அழகை ரசித்தனர்.

    இதனால் பவானிசாகர் பஸ் நிலையம் மற்றும் பூங்கா பகுதியில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் குளிக்கும் இடத்தில் தண்ணீர் அதிகளவு செல்கிறது
    • நுழைவு வாயில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கோபி:

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 102 அடியை தொட்டது. இதையொட்டி பவானிசாகர் அணையில் இருந்து 6 ஆயிரத்து 772 கன கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடுவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் குளிக்கும் இடத்தில் தண்ணீர் அதிகளவு செல்கிறது.

    இதையொட்டி பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பார்த்து ரசிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ×