என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபடும் தனபாலை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
    • போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் தனபால் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கோரி குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு டி.ஜி.பி. அபாஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி அறிவுறுத்தலின்படி, மாவட்ட குடிமைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகினற்னா்.

    இதில் கடந்த 2-ந் தேதி பவானி சிங்கம்பேட்டையில் வாகன சோதனையின் போது அவ்வழியாக காரில் ரேஷன் அரிசி கடத்திய பவானி பழனிபுரம் 4-வது வீதியை சேர்ந்த தனபால்(49) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 2,640 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைதான தனபால் பவானி, அந்தியூா், பங்களாபுதூர், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தியதாக ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபடும் தனபாலை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனை ஏற்ற கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தனபாலை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதன்பேரில் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனபாலை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான தகவலை தெரிவித்து போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் தனபால் அடைக்கப்பட்டார்.

    • பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு உணவு கொடுக்க பள்ளிக்கு வந்த போது 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்ததை கண்டு அவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தார்.
    • மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை நடத்தி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    பவானி:

    பவானி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் பெருமாள்புரம், அண்ணா நகர், காமராஜ் நகர், சொக்கார அம்மன் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250 மாணவ, மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் கிருஷ்ணகுமாரி என்பவர் பணியாற்றி வருகிறார். அதேபோல் பட்டதாரி ஆசிரியர் 3 பேர், இடைநிலை ஆசிரியர் 5 பேர் என 9 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் 8-ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது.

    இந்நிலையில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு உணவு கொடுக்க பள்ளிக்கு வந்த போது 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருந்ததை கண்டு அவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்தார்.

    பின்னர் மாணவ, மாணவிகள் தேர்வை பார்த்து எழுதுவதாக குற்றம் சாட்டி சமூகவலைதளத்தில் அந்த வீடியோவை வெளியிட்டார். அதேபோல் பள்ளி தலைமை ஆசிரியர் மீது பள்ளி மேலாண்மை குழுவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை மாவட்ட கல்வி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.

    தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் செய்யப் போவதாக பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை மேற்கொண்டு தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி மீது துறை ரீதியான ந டவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் திரும்பி சென்றனர்.

    இதை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி விசாரணை நடத்தி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, பள்ளி நேரத்தின் போது உள்ளே வந்து யாரும் செல்போன் எடுக்க கூடாது. அதையும் மீறி சிலர் பள்ளி மேலாண்மை குழு என தெரிவித்து செல்போன் மூலம் படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு இன்று எங்கள் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    நாங்கள் எவ்வளவோ முறை சொல்லியும் வீடியோ எடுக்க வேண்டாம் எனக் கூறியும் அவர்கள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு இந்த பள்ளிக்கு அவ பெயர் ஏற்படுத்தி உள்ளனர்.

    அதே போல் ஒரு சின்ன சின்ன விஷயங்களை கூட பெரிய விஷயமாக மாற்றி வருகின்றனர் என்றனர்.

    • சென்னியம்மாளின் வயிறு நாளுக்கு நாள் வீக்கம் அடைந்து கொண்டு வந்தது. உடனடியாக அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் காட்டிய போது அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
    • அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னியம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளை யத்தை அடுத்துள்ள பெரிய கோரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. கூலி தொழிலாளி. இவரது மனைவி சென்னியம்மாள் (வயது 45). இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை.

    இந்த நிலையில் சென்னியம்மாளின் வயிறு நாளுக்கு நாள் வீக்கம் அடைந்து கொண்டு வந்தது. உடனடியாக அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் காட்டிய போது அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    பின்னர் சென்னியம்மாள் கடந்த வாரம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சாந்தி ராஜேந்திரன் சென்னியம்மாளை பரிசோதித்து பார்த்தார். அப்போது அவரது வயிற்றில் பெரிய கட்டி இருப்பது தெரிய வந்தது. அதை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னியம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் இருந்து 4½ கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

    • வெங்கமேடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இந்த மறியலால் அவ்வழியே சுமார் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ளது புஞ்சை பாலதொழுவு பஞ்சாயத்து.

    இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலமரம், வெங்க மேடு, ஓலப்பாளையம் உட்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு கொடு முடியில் உள்ள காவேரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக காங்கேயம் வழியாக கடந்த சில ஆண்டுகளாக காவிரி ஆற்று நீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பம்பிங் நிலையம் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் ஆற்றில் இருந்து முறையாக தண்ணீர் சப்ளை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு வெங்கமேடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த அதிகாரிகள் சில நாட்களில் குடிநீர் சப்ளையை சரி செய்து முறையாக கிடைக்கச் செய்வதாக உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் கடந்த 40 நாட்களாக மீண்டும் முறையாக குடிநீர் சப்ளை செய்யப்படாமல் பல நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை நடைபெற்றதாக பொது–மக்கள் கூறினர். முறையாக குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரி–களிடம் பொது மக்கள் முறையிட்டனர். இருப்பினும் போதுமான அளவு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

    இதையடுத்து வெங்கமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று மதியம் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே ஊத்துக்குளி செல்ல வந்த அரசு டவுன் பஸ் மற்றும் வாகனங்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கவுன்சிலர் செல்வம், புஞ்சை பாலதொழுவு பஞ்சாயத்து தலைவர் தங்கமணி விஜயகுமார், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 10 நாட்களில் முறையாக குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் அதுவரை லாரி தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். இதனையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த மறியலால் அவ்வழியே சுமார் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சம்பவத்தன்று மாலை வழக்கம் போல கண்ணன் வீட்டுக்கு வந்த போது கீதா செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
    • இரவு அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி கீதாவையும், குழந்தையையும் காணவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தை அடுத்துள்ள சிறுவலூர், ஊஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (35). வேன் டிரைவர். இவரது மனைவி கீதா (25). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கீதா எந்த நேரமும் செல்போனில் பேசிக் கொண்டு குழந்தையையும், வீட்டு வேலைகளையும் கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வழக்கம் போல கண்ணன் வீட்டுக்கு வந்த போது கீதா செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், கீதாவிடமிருந்து செல்போனை வாங்கி கொண்டு வெளியில் சென்று விட்டார். மீண்டும் இரவு அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி கீதாவையும், குழந்தையையும் காணவில்லை.

    எங்கு தேடியும் அவர்கள் கிடைக்க வில்லை. இதையடுத்து கண்ணன் சிறுவலூர் போலீஸ் போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மனைவி மற்றும் மகளை மீட்டு தர வேண்டும் என புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கள்ளியம்புதூர் பகுதியை சேர்ந்தவர் தீரன்குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து படுத்து உள்ளார்.
    • உடனடியாக தீரன்குமாரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் தீரன் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம் கள்ளியம்புதூர் பகுதியை சேர்ந்தவர் தீரன்குமார் (வயது 23). ஒரு தனியார் எண்ணெய் மில்லில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக குடிப்பழ க்கத்திற்கு அடிமையான தீரன்குமார் சரியாக சாப்பிடாமல் இருந்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று சாப்பிடாமல் மாலை அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து படுத்து உள்ளார். பின்னர் காலை 8 மணி ஆகியும் அவர் எழுந்திரு க்கவில்லை.

    அவரது தந்தை எழுப்பி பார்த்தபோது மூச்சுப் பேச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக தீரன்குமாரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் தீரன் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.
    • அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த மாதம் 5 -ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.

    பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரும், பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் ஒரே அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    • சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.
    • அவர்களிடமிருந்து தாயக்கட்டை மற்றும் பணம் ரூ.580-யை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்தனர்.

    போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (37), அப்புசாமி (30), வெங்கடேஷ் (31), ஆனந்த ஜோதி (37), கமலக்கண்ணன்(42), முரளிசங்கர் (32) என்பது தெரிய வந்தது.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தாயக்கட்டை மற்றும் பணம் ரூ.580-யை பறிமுதல் செய்தனர்.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
    • 81,098 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.60 லட்சத்து 81 ஆயிரத்து 369-க்கு விற்பனை நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,660 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 75 ரூபாய் 25 காசுக்கும், அதிகபட்ச விலையாக 82 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 81 ரூபாய் 47 காசுக்கும்,

    2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 52 ரூபாய் 85 காசுக்கும், அதிகபட்ச விலையாக 73 ரூபாய் 9 காசுக்கும், சராசரி விலையாக 70 ரூபாய் 39 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 81,098 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.60 லட்சத்து 81 ஆயிரத்து 369-க்கு விற்பனை நடைபெற்றது.

    • வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலின் வடபுற கரையில் தண்ணீரில் மிதந்த நிலையில் சுந்தர்ராஜன் உடல் கிடந்தது தெரியவந்துள்ளது.
    • இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள வெட்டையன் கிணறு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (47). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

    சுந்தர்ராஜனும் அவரது தாயார் சரோஜாமணியும் வசித்து வந்தனர். சுந்தர்ராஜன் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை. இதுகுறித்து அவர் விரக்தியில் தனது தங்கை சின்னம்மாளிடம் மனமுடைந்து பேசி வந்ததாக தெரிகிறது. சின்னம்மாளும் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 6 மணியளவில் வெளியில் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அப்போது வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலின் வடபுற கரையில் தண்ணீரில் மிதந்த நிலையில் சுந்தர்ராஜன் உடல் கிடந்தது தெரியவந்துள்ளது.

    வாய்க்கால் கரையில் விஷ மாத்திரைகளும் கிடந்துள்ளன. உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுந்தர்ராஜனை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.
    • மெகா தடுப்பூசி முகாமில் 21,678 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மைய ங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்பட்டன. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக போடப்பட்டது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    நேற்று முன்தினம் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 515 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 4 ஆயிரத்து 350 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 16 ஆயிரத்து 813 பேரும் என மொத்தம் 21,678 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் தெரிவித்தனர்.

    இந்த மாதம் இறுதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
    • இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பர்கூர் மலை பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் அந்தியூர் தாலுகா செய லாளர் தேவராஜ், பர்கூர் வட்டார குழு செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கோவில் நத்தம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். மாற்றுத்திறனாளி. அவரது வீட்டிற்கு புகுந்து அவரது உறவினர்கள் செல்வத்தை தாக்கி அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.

    அதை தடுத்த அவரது மனைவி மாதேவியையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பர்கூர் மலை பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×