search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
    • இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பர்கூர் மலை பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் அந்தியூர் தாலுகா செய லாளர் தேவராஜ், பர்கூர் வட்டார குழு செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கோவில் நத்தம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். மாற்றுத்திறனாளி. அவரது வீட்டிற்கு புகுந்து அவரது உறவினர்கள் செல்வத்தை தாக்கி அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.

    அதை தடுத்த அவரது மனைவி மாதேவியையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பர்கூர் மலை பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×