என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் 12 ேஜாடிகளுக்கு திருமணம் நடந்தது.
    • இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் புகழ் பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.மலை மேல் அமைந்துள்ள இக் கோவிலில் சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது.

    இன்று கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் 12 ேஜாடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.

    12 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் ேகாவிலை சுற்றி வந்து சுப்பிரமணி சாமியை தரிசனம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் உறவினர்களுடன் போட்டோ எடுத்து கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.

    திருமணத்தில் கலந்து கொள்ள உறவினர்கள் அதிகளவில் வந்ததால் மலைமீது அவர்கள் வந்த வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    • அமைச்சர் முத்துசாமி ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
    • 23 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதால் திண்டல் கோவிலில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஈரோடு:

    இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் இன்று 23 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திண்டல் வேலாயுத சுவாமி கோவில் எதிரே உள்ள வேளாளர் மகளிர் கல்லூரி கலை அரங்கில் திருமண நிகழ்ச்சி நடந்தது.

    இதற்காக கலையரங்கம் முன்பு வாழை தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் முத்துசாமி திருமண விழாவிற்கு தலைமை தாங்கினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார்.

    மணமகன்கள், மணமகள்கள் பட்டு சேலை, வேஷ்டி அணிந்து மாலையுடன் தயாராக இருந்தனர். அமைச்சர் முத்துசாமி ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து மணமக்களுக்கு 3 கிராம் தங்க திருமாங்கல்யம், பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி, சட்டை துண்டு, வெள்ளி மெட்டி, சாமி படம், குத்துவிளக்குகள், பூஜை தட்டு, பூஜை மணி, குங்கும சிமிழ், சந்தன கிண்ணம், இரும்பு கட்டில், போம் மெத்தை, தலையணை, பெட்ஷீட், ஜமுக்காளம், கிரைண்டர், மிக்ஸி, கேஸ் அடுப்பு, ஹாட் பாக்ஸ், பெரிய சில்வர் அண்டா

    சில்வர் பால் பாத்திரம், கை கோதி (முடியுறுவி கம்பி), எவர்சில்வர் சாப்பாடு தட்டு, எவர்சில்வர் சிப்பிதட்டு, எவர்சில்வர் பெரிய டம்ளர், எவர் சில்வர் சிறிய டம்ளர், எவர்சில்வர் அன்னக்கூடை, எவர்சில்வர் தாம்பூல தட்டு, எவர்சில்வர் காய்வடி கூடை, சில்வர் பாக்ஸ், எவர்சில்வர் போனி, 21 லிட்டர் பிளாஸ்டிக் பாக்கெட், பிளாஸ்டிக் கோப்பை, மணமக்களுக்கான 16 பொருட்கள் அடங்கிய அழகு சாதன பொருட்கள் பேழை என 34 வகையான சீர் வரிசைகள் வழங்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில் புதுமண தம்பதிகள் சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து வேலாயுத சுவாமி திருக்கோவில் மண்டபத்தில் விருந்து நடைபெற்றது. 23 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதால் திண்டல் கோவிலில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இந்த திருமண நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., இந்து அறநிலையத்துறை மாவட்ட அறங்காவல் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் மேனகா, உதவி ஆணையர்கள் அன்னக்கொடி, இளையராஜா, சாமிநாதன், ஆணையர், செயல் அலுவலர் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் திருச்செங்கோடு ரமணி காந்தன் ஆய்வாளர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகாலையில் எழுந்து வழக்கம்போல் முருகன் தனது மொபட்டில் வெளியே சென்றவர் மீண்டும் காலை வீடு திரும்பினார்.
    • அப்போது வீட்டின் முன்புறம் இருந்த தேனீக்கள் அவரை சூழ உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை காமராஜர் வீதியில் ஆற்றோரத்தில் குடியிருப்பவர் முருகன் (60). முடி திருத்தும் கூலித்தொழிலாளி. இவர் தனியாக குடியிருந்து வருகிறார்.

    இவரது வீட்டின் எதிரே ஒரு வேப்ப மரம் உள்ளது. இன்று அதிகாலையில் எழுந்து வழக்கம்போல் முருகன் தனது மொபட்டில் வெளியே சென்றவர் மீண்டும் காலை 8 மணிக்கு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்புறம் இருந்த தேனீக்கள் அவரை சூழ உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டார். பின்னர் அவ்வப்போது வெளியே எட்டி பார்த்துள்ளார்.

    வெளியே வந்தால் தேனீக்கள் அவரை நோக்கி வருவதால் அவர் மீண்டும் வீட்டுக்குள்ளேயே சென்று விட்டார்.

    அதனால் அவர் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். இது குறித்து செல்போன் மூலம் அவருக்கு தெரிந்தவர் களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இருப்பினும் அப்பகுதிக்கு செல்ல மற்றவர்களும் அச்சப்படுகின்றனர்.

    மேலும் ஆற்றங்கரையில் ஆடு, மாடு மேய்ப்பவர்களும் அவ்வழியே மரத்தை ஒட்டியவாறு தான் செல்ல வேண்டும். ஆனால் இதுவரை அப்பகுதியில் யாரும் செல்லவில்லை.

    இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சம்பவத்தன்று மர்ம நபர்கள் சிலர் கோவில் பூட்டு உடைத்து அங்கு இருந்த உண்டியலை வெளியே எடுத்து சென்றனர்.
    • இதை தொடர்ந்து அவர் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மல்லிபாளை யம் பகுதியில் அன்னமார் கோவில் உள்ளது. இந்த கோவில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் திறக்கப்பட்டு சிறப்பு பூைஜகள் நடப்பது வழக்கம்.

    அதே போல் கடந்த அமா வாசை அன்று கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று மர்ம நபர்கள் சிலர் கோவில் பூட்டு உடைத்து அங்கு இருந்த உண்டியலை வெளி யே எடுத்து சென்ற னர். தொடர்ந்து அவர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.1500 பணத்தை திருடி விட்டு உண்டியலை அங்கேயே ேபாட்டு விட்டு சென்று விட்டனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் கோவில் பூசாரி தெய்வசிகாமணி (55) என்பவர் கோவிலுக்கு வந்து பார்த்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப் பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதை தொடர்ந்து அவர் சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் உள் நோயாளிகள் செல்போன்கள் தொடர்ந்து திருட்டு போனது.
    • அப்போது ஒரு வாலிபர் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து செல்போன் திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி புது பஸ் நிலையம் அருகே ஒரு தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் உள் நோயாளிகள் செல்போன்கள் தொடர்ந்து திருட்டு போனது.

    இது குறித்து ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குநர் ஹரி கிருஷ்ணன் என்பவர் பவானி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு வாலிபர் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து செல்போன் திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அர்பாத் நகர் பகுதியைச் சேர்ந்த தியாகத் அலி என்பவரது மகன் நியாஷ் அகமது (20) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருவது போல் நடித்து தொடர் செல்போன் திரு ட்டில் ஈடுப ட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடமிருந்து 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பவானி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கடத்தூர் போலீசார் சிங்கிரி பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.
    • அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் ஒருவர் அனுமதி யின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பெருமாள் மற்றும் போலீசார் கோபிசெட்டி பாளையம் அடுத்த சிங்கிரி பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் ஒருவர் அனுமதி யின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் அவர் அங்கு இருந்து தப்பி ஓடினார். போலீசார் அவரை சுற்று வளைத்து பிடித்தனர்.

    போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கோவை மாவ ட்டம் நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (41) என்பதும், அவர் சிங்கிரிபாளையம் பகுதியில் தங்கி அனுமதி யின்றி மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.19 ஆயிரத்து 450 மதிப்புள்ள 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • மழை, வெயில், பனி பொழிவு என மாறி வருவதால் நெற்பயிரில் நோய் தாக்குதல் காணப்படுகிறது.
    • இதனால் வேளாண் துறை சார்பில் விதை பண்ணைகள், வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி- – அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர். சில மாதமாக மழை, வெயில், பனி பொழிவு என மாறி வருவதால் நெற்பயிரில் நோய் தாக்குதல் காணப்படுகிறது.

    இதனால் வேளாண் துறை சார்பில் விதை பண்ணைகள், வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இது குறித்து ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் கூறியதாவது:

    ஈரோடு மாவட்ட பாசன பகுதிகளில் ஏ.எஸ்.டி.16, டி.பி.எஸ்.5, மேம்படு த்தப்பட்ட வெள்ளை பொன்னி, ஐ.ஆர்.20, ஏ.டி.டி.38, கோ– 51, பி.பி.டி.5204, ஆர்.என்.ஆர்.15048 ஆகிய நெல் ரகங்களில் விதை பண்ணைகள் அமைத்துள்ள னர்.

    விதை பண்ணையில் அதிக நீர் தேங்காமல் வடிகால் வசதி ஏற்படுத்த வும், அதிக தழைச்சத்து அளிக்கக்கூடி உரங்களை குறைந்த அளவில் பயன்படுத்தவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது நிலவும் பருவ நிலை மாற்றத்தால் மஞ்சள் கரிப்பூட்டை நோய் பரவ சாதகமாக உள்ளது. இந்நோயால் ஒவ்வொரு தானியமும் மஞ்சள் நிறமாக மாற்றம் அடைந்து நெற்பழம் உருண்டைகளாக மாறிவிடும். இதனால் விதை உற்பத்தி பாதிக்கும். தானிய விற்பனையின்போது விலை இழப்பு ஏற்படும்.

    எனவே இந்நோயை கட்டுப்படுத்த நெல் பஞ்சுபுடை பருவத்தில் காப்பர் ைஹட்ராக்ைஸடு மருந்து ஒரு லிட்டருக்கு 2.5 கிராம் என்ற அளவில் தெளிப்பதுடன் மகரந்த சேர்க்கை முடிந்ததும் மீண்டும் ஒரு முறை தெளித்து தரமான விதை உற்பத்தி செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, உதவி விதைச்சான்று அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • போர்க்கால அடிப்படையில் வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்திற்கு 25 சதவீதம் கூலி உயர்வை வழங்க வேண்டுகிறோம்.
    • இந்த கூலி உயர்வின் மூலம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மற்றும் விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரமும் மேம்பட வழிவகை செய்யும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழக அரசின் சார்பில் பொங்கல் அன்று பொது மக்களுக்கு இலவசமாக கொடுக்க தமிழகத்தில் உள்ள 228 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கம் மூலம் 65 ஆயிரம் விசைத்தறிக்கும் மேல் இந்த வருடம் ஒரு கோடி சேலையும், ஒரு கோடியே 20 லட்சம் வேஷ்டியும் உற்பத்தி செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    அக்டோபர் 2-ம் வாரத்தில் இருந்து வேட்டி உற்பத்தி தொடங்கி, நவம்பர் முதல் வாரத்தில் இருந்து சேலை உற்பத்தி தொடங்கி ஈரோடு, திருச்செங்கோடு, திருப்பூர் மற்றும் கோவை சரகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் மொத்த உற்பத்தியில் 80 சதவீதத்துக்கு மேல் ஈரோடு மற்றும் திருச்செங்கோடு சரகங்களில் பெரும்பாலான விசைத்தறிகள் மூலம் பிரதான தொழிலாக 4 முதல் 5 மாதத்திற்கு உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதத்தை நம்பி கொண்டு உள்ளார்கள்.

    விசைத்தறி நலனுக்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 500 யூனிட் மின்சாரம் இலவசம் என்று விசைத்தறிவுகளுக்கு வழங்கி நெசவாளர்களின் துயர் துடைத்து, தற்போது 750 யூனிட் இலவசமாக உள்ளதை ஆயிரம் யூனிட் இலவசமாக கொடுக்கப்படும் என்று 2021 தேர்தல் அறிக்கையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டபலின் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு விசைத்தறிக்கான மின் கட்டணத்தை 31 சதவீதம் உயர்த்தி மேலும் நிலை கட்டணம் ஆகிய வற்றையும் உயர்த்தியுள்ளது.

    இதன் மூலம் சராசரி 20 தறி வைத்திருக்கும் விசைத்தறியாளர்கள் எடுத்துக்காட்டாக ஒரு விசைத்தறிக்கு இரண்டு மாதத்திற்கு ரூ.800 முதல் 1000 வரை மின் கட்டணம் தற்போது உயர்ந்துள்ளது.

    மின் கட்டண உயர்வு காரணத்தால் விசைத்தறிக்கான உதவி பாகங்கள் மற்றும் விசைத்தறி சம்மந்தமான ஆசாரி மற்றும் லேத் சம்பந்தப்பட்ட வேலைப்பாடு கூலிகள் அனைத்தும் 30 சதவீதம் வரை உயர்த்தி உள்ள காரணத்தாலும், தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி திட்டத்திற்கான செலவுகள் பெரிதும் உயர்ந்துள்ளது.

    மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் தொழிலாளர்கள் கூலி உயர்வு பெரிதும் உயர்ந்துள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு அரசு கூலி உயர்வு அறிவித்தபடி தற்போது வேட்டி 24 ரூபாயும் மற்றும் சேலை உற்பத்திக்கு 43 ரூபாயும் கடந்த 3 வருடமாக பெற்று வருகிறோம். மேலும் எங்களிடம் பணி செய்யும் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாழ்வா தாரத்தை மேம்பாட்டை பொருத்து அவர்களுக்கும் கடந்த 3 வருடங்களில் கூலி மற்றும் சம்பளங்களை உயர்த்தி உள்ளோம். கடந்த 3 வருடமாக வேட்டி சேலை உற்பத்திக்கான கூலி உயர்வு வழங்கவில்லை.

    தற்போது தமிழக அரசின் வேட்டி, சேலை உற்பத்தி செய்வதன் மூலமாக விசைத்தறியாளர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் முதல்-அமைச்சர் போர்க்கால அடிப்படையில் வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்திற்கு 25 சதவீதம் கூலி உயர்வை வழங்க வேண்டுகிறோம்.

    இந்த கூலி உயர்வின் மூலம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மற்றும் விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரமும் மேம்பட வழிவகை செய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சம்பவத்தன்று மதியம் சீனிவாசன்.போர்வெல் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்துள்ளார்.
    • தண்ணீர் கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்துள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட மைலாடி வெள்ளியங்காடு பகுதியில் வசிப்பவர் சீனிவாசன். விவசாயி. இவரது தோட்டத்தில் போர்வெல் அமைத்து விவசாயம் செய்து வருகிறார், மேலும் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்.

    கடந்த ஒரு மாதகாலமாக தொடர் மழை பெய்து வந்ததால் போர்வெல்லில் தண்ணீர் எடுக்க வில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் போர்வெல் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்துள்ளார்.

    தண்ணீர் கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வந்துள்ளது. அவரும் ஒரு மணி நேரம் தண்ணீர் தொடர்ந்து மோட்டார் வைத்து எடுத்தும் தண்ணீர் நிறம் கறுப்பாகவே இருந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி உடனடியாக உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஊராட்சி வார்டு கவுன்சிலர் மோகனசுந்தரி பழனிசாமி, சென்னிமலை யூனியன் துணை தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    இந்த போர்வெல் கிணற்றில் சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றிய சாய கழிவு கலந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த புகாரின் பேரில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி கள் இந்த சாய ஆலைகளில் ஆய்வு செய்ய உள்ளனர்.

    • அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 159 தேங்காய்பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 159 தேங்காய்பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 84 ரூபாய் 49 காசுக்கும், அதிகபட்ச விலையாக 88 ரூபாய் 88 காசுக்கும், சராசரி விலையாக 87 ரூபாய் 90 காசுக்கும்,

    இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 63 ரூபாய் 45 காசுக்கும், அதிகபட்ச விலையாக 83 ரூபாய் 42 காசுக்கும், சராசரி விலையாக 78 ரூபாய் 89 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 7,401 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு தங்களது பணிக்கு திரும்பினர்.
    • இன்று வழக்கம் போல் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதம் ரூ.21,260 வழங்க வேண்டும்.

    தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவமனையில் உடை மாற்ற, ஓய்வெடுக்க, உணவு சாப்பிட ஓய்வறை ஒதுக்கிட வேண்டும். ஒப்பந்த முறைப்படி 3 சிப்ட் வழங்க வேண்டும். வேலை நேர பணி அட்டை வழங்க வேண்டும். மாத ஊதிய சீட்டு வழங்க வேண்டும்.

    வார விடுமுறை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். இலவச சீருடை, பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும். தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் பணியாற்றுபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 23-ந் தேதி தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் தலைமை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஒப்பந்த பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பணியை புறக்கணித்து கடந்த மாதம் 29-ந் தேதி இரவு முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 4 நாட்களாக பகல், இரவு என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கடந்த 1-ந் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் அவர்களது கோரிக்கையை ஏற்று அடுத்த 15 நாட்களில் அமல்படுத்தப்படும் என உறுதியளித்தார். இதன்பேரில் நேற்று இரவு ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு தங்களது பணிக்கு திரும்பினர்.

    இன்று வழக்கம் போல் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதாராணியை சஸ்பெண்டு செய்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
    • தலைமறைவாக இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணியை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி பாலக்கரையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக கீதாராணி என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்த பள்ளியில் 35 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவ-மாணவிகளும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

    கடந்த 21-ந் தேதி இப்பள்ளி மாணவர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது அந்த மாணவர் தான் பள்ளியின் கழிப்பறையை சுத்தம் செய்ததாகவும், அப்போது கொசு கடித்ததாகவும் கூறினார். மேலும் தங்களை தலைமை ஆசிரியை கீதா ராணி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாகவும் கூறினார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் ஈரோடு கலெக்டரிடம் புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதன்படி கடந்த 30-ந் தேதி பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவிச்சந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் பாலக்கரை பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளியில் படிக்கும் 6 பட்டியலின மாணவர்களை தலைமை ஆசிரியை கீதாராணி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது தெரிய வந்தது.

    மேலும் அதிகாரிகள் விசாரணை நடத்த வந்தபோது தலைமை ஆசிரியை கீதாராணி பணிக்கு வராமல் தலைமறைவானார்.

    இதற்கிடையே மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கீதாராணியை சஸ்பெண்டு செய்து தொடக்கக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் கழிப்பறையை சுத்தம் செய்ததால் கொசு கடித்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் பெருந்துறை போலீசார் தலைமை ஆசிரியை கீதா ராணி மீது குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபத்தான ரசாயனங்களை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல் உள்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தலைமை ஆசிரியை கீதாராணியை தேடி வந்தனர்.

    இதற்கிடையே தலைமறைவாக இருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணியை பெருந்துறை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ×