என் மலர்
திண்டுக்கல்
- மதுரையில் இருந்து தாறுமாறாக வந்த கார் திடீரென நிலை தடுமாறி பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்தது.
- அந்த நேரம் அங்கு யாரும் ஆட்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்தப் பயணிகள் நிழற்குடையில் தான் பெரியகுளம், வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் ஏறுவதற்காக ஏராளமான பயணிகள் நிற்பது வழக்கம்.
நேற்று தீபாவளி முடிந்த அடுத்த நாள் என்பதாலும், விடுமுறை தினம் என்பதால் மாலை 4 மணியளவில் சற்று ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. அப்போது மதுரையில் இருந்து தாறுமாறாக வந்த கார் திடீரென நிலை தடுமாறி பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்தது. அந்த நேரம் அங்கு யாரும் ஆட்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகரப்பகுதிகளில் 3,482 குழுக்களில் 41,283 உறுப்பினர்கள் உள்ளனர்.
- ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.2,440.98 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1095 குழுக்களில் 11,446 உறுப்பினர்களும், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 647 குழுக்களில் 6303 உறுப்பினர்களும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் 813 குழுக்களில் 8228 உறுப்பினர்களும், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 499 குழுக்களில் 5440 உறுப்பினர்களும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 484 குழுக்களில் 4996 உறுப்பினர்களும், நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 1091 குழுக்களில் 11,051 உறுப்பினர்களும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 623 குழுக்களில் 6217 உறுப்பினர்களும்,
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 900 குழுக்களில் 9099 உறுப்பினர்களும், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் 584 குழுக்களில் 6120 உறுப்பினர்களும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 562 குழுக்களில் 5692 உறுப்பினர்களும், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 561 குழுக்களில் 5595 உறுப்பினர்களும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 572 குழுக்களில் 6100 உறுப்பினர்களும், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 466 குழுக்களில் 4830 உறுப்பினர்களும், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 661 குழுக்களில் 7085 உறுப்பினர்களும் என ஊரகப் பகுதிகளில் மொத்தம் 9558 குழுக்களில் 98,202 உறுப்பினர்கள் உள்ளனர்.
மேலும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகரப்பகுதிகளில் 3,482 குழுக்களில் 41,283 உறுப்பினர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆக மொத்தம் 13,040 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அதில் 1,39,485 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் சுழல் நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 236 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.35 லட்சம், 2022-2023-ஆம் ஆண்டில் 465 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.69 லட்சம், 2023-2024-ஆம் ஆண்டில் அக்டோபர்-2023 வரை 188 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.28 லட்சம் என மொத்தம் ரூ.1.32 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. சமுதாய முதலீட்டு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 1,538 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.9.91 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 1,315 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.19.72 கோடி, 2023-2024-ஆம் ஆண்டில் அக்டோபர்-2023 வரை 389 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.01 கோடி என மொத்தம் ரூ.34.64 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது.
வங்கிக் கடன் இணைப்பு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 18,548 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.976.94 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 11,631 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.621.16 கோடி, 2023-24-ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 5,474 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.388.87 கோடி என மொத்தம் ரூ.1,986.97 கோடி வங்கி கடன் இணைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் நகர்ப்புற பகுதிகளில் சுழல் நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 633 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.63 லட்சம், 2022-2023-ஆம் ஆண்டில் 652 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.65 லட்சம் என மொத்தம் ரூ.1.29 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் இணைப்பு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 328 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.15.28 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 3,148 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.207.40 கோடி, 2023-24-ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 3,911 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.194.08 கோடி என மொத்தம் ரூ.416.77 கோடி வங்கி கடன் இணைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-22 முதல் 31.10.2023 வரை ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.2,440.98 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்களில் பயனடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தமிழக அரசுக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
- சுமார் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க ஆண் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- அவரது சட்டை பையில் பீடி தீப்பெட்டி, மோட்டார் சைக்கிளின் சாவி, பணம் ரூ.2 ஆயிரம் ஆகியவை இருந்தது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த ஆத்தூர் காமராஜர் அணை அருகே, ராஜவாய்க்கால் செல்லும் வழியில் சாலையோரம் முட்புதரில், சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. அதிலிருந்து கடுமையான துர்நாற்றம்வீசியதை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் செம்பட்டி ேபாலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சாக்கு மூட்டையை திறந்து பார்த்தனர். அதில் சுமார் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க ஆண் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அந்த நபர் கைலி வேஷ்டி, அரை கை சட்டை அணிந்து இருந்தார். அவரது சட்டை பையில் பீடி தீப்பெட்டி, மோட்டார் சைக்கிளின் சாவி, பணம் ரூ.2 ஆயிரம் ஆகியவை இருந்தது.
மேலும் அவர் இடுப்பில் தாயத்து போட்ட கருப்பு கயிறு கட்டியிருந்தார். அடையாளம் தெரியாத அவரை யாராவது கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி அந்தப் பகுதியில் வீசி விட்டுச் சென்று இருந்தது என போலீசார் தெரிவித்தனர்.
மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால் சுமார் 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி இங்கு வீசி சென்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி போட்ட, நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விபரம் தெரிய வில்லை.
சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த கொலை சம்பவம் குறித்து செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்த நபர் யார்? அவரை கொலை செய்து அந்த பகுதியில் வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிரமாக தேடி வருகின்றனர். இறந்த நபரின் சட்ைட காலரில் செம்பட்டியை சேர்ந்த தையல் கடை முகவரி இருந்ததால் அவர் செம்பட்டிைய சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் அப்பகுதியில் மாயமான நபர்கள் யாரேனும் உள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- நேற்று மாலை பெருமா ள்மலைக்கு இவர்கள் 3 பேரும் ஒரு வேனில் வந்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
- பி.எல்.செட் பகுதியில் வேன் திடீரென நிலைதடு மாறி 200 பள்ளத்தில் கவிழ்ந்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகில் உள்ள வடகவுஞ்சி ஜீவா நகரை சேர்ந்தவர் கமல நாதன் (வயது50). இவரது மகன்கள் ராபட்சாலமன் (28), யோவான் (26). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது.
நேற்று மாலை பெருமா ள்மலைக்கு இவர்கள் 3 பேரும் ஒரு வேனில் வந்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை யோவான் ஓட்டிச் சென்றார். பி.எல்.செட் பகுதியில் வேன் திடீரென நிலைதடு மாறி 200 பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேன் சுக்குநூறாக உடைந்து உள்ளே இருந்த கமலநாதன் மற்றும் ராபட்சாலமன் ஆகியோர் சம்பவ இடத்திேலயே உயிரிழந்தனர். காயம் அடைந்த யோவான் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து கொடை க்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- இருவரும் மலைப்பகுதியை சுற்றி பார்த்துவிட்டு பால்கடை என்ற மலைக்கிராமத்தின் அருகே இருந்த அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர்.
- அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கி சேற்றில் சிக்கி க்கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புலியூர்நத்தம் கிரா மத்தைச் சேர்ந்த மணிக ண்டன் மகன் ஹரிபிரசாத் (வயது 13). இச்சிறுவன் அருகே உள்ள முத்துநாயக்க ன்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
புலியூர்நத்தத்தைச் சேர்ந்த உறவினர் தமிழர சன்(வயது 23) இவர் ஒட்டன்சத்திரத்தில் தனியார் காய்கறி கடையில் பணியாற்றி வருகிறார்.
தீபாவளி பண்டிகையை யொட்டி விடுமுறை என்பதால் தமிழரசன் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றிப்பா ர்க்க மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். உடன் ஹரிபிரசாத்தும் வந்தான். இருவரும் மலைப்பகுதியை சுற்றி பார்த்துவிட்டு பால்கடை என்ற மலைக்கிராமத்தின் அருகே இருந்த அருவியில் குளித்து க்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீ ரில் மூழ்கி சேற்றில் சிக்கி க்கொண்டனர். அவர்கள் தங்களை காப்பாற்றுங்கள் என்று கூறி அலறி சத்தம் போட்டனர்.
உடனே பக்கத்தில் இருந்த வர் ஓடி வந்து இருவரையும் மீட்டு மேலே கொண்டு வந்து பார்த்தபோது ஹரி பிரசாத், தமிழரசன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிந்தது.
இது குறித்து ஒட்டன்ச த்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி நாளில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
- பழனி கோவிலின் உபகோவில்களிலும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், கல்பபூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், மயில், வேல் மற்றும் நவவீரர்களுக்கு காப்புக்கட்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பழனி கோவிலின் உபகோவில்களிலும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனியில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவையொட்டி கோவில் யானை கஸ்தூரி அடிவாரத்தில் இருந்து யானைப்பாதை வழியே மலைக்கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி கோவில் யானை கஸ்தூரி யானைப்பாதை வழியே அசைந்தாடி சென்றதை தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் பார்த்து பரவசமுடன் வழிபட்டனர். நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
7 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 6-ம்நாளான 18-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் சூரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவிலில் சின்னக்குமாரர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மலைக்கோவில் நடை சாத்தப்படுகிறது.
பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக சின்னக்குமாரர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் நவவீரர்களுடன் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் பாதவிநாயகர் கோவிலுக்கு வருகிறார். பின்னர் திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுத சுவாமியிடம் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் உள்ள ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது.
விழாவின் 7-ம் நாளில் மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்கு மாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- கந்த சஷ்டி விழா தினம் விரதமிருந்து வழிபட்டு வருவதால் நோய் நொடிகள் தீரும், செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தசஷ்டி விரதம் மேற்கொண்டால் கண்டிப்பாக அவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
திண்டுக்கல்:
தமிழ் கடவுள் முருகனுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கியமான ஒன்று. அன்றைய தினம் விரதமிருந்து வழிபட்டு வருவதால் நோய் நொடிகள் தீரும், செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தசஷ்டி விரதம் மேற்கொண்டால் கண்டிப்பாக அவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
திண்டுக்கல் அடுத்த ரெட்டியார் சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டி போகர் நகர் பாதாள செம்பு முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு நீர் வளத்தை குறிக்கும் வகையில் ஊதா நிறத்தில் முத்துக்கள் மற்றும் கற்கள் பதித்த உடை அணிந்து ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு முருகன் அருள் பாலித்தார்.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், கோவை, ஈரோடு, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் சஷ்டியை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். 19ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் ஆதினம் அறிவாதினம் செய்து வருகிறார்.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
- வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வத்தலக்குண்டு:
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சரவணன் மகன் காளிதாஸ் (வயது25). கூலித்தொழிலாளி. இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தெற்கு தெருவை சேர்ந்த பாண்டிபிரியா என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்த பாண்டிபிரியாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. தீபாவளி விடுமுறை என்பதால் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க காளிதாஸ் வத்தலக்குண்டு வந்தார். அப்போது தனது மனைவியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காரின் பேனட்டில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது.
- பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ், செட்டிநாயக்கன்பட்டி பிரிவு அருகே தனியார் பழைய கார் விற்பனை நிறுவனம் உள்ளது. இங்கு பழைய கார்களை விற்பனை க்கும் மற்றும் பழுது நீக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலை யில் இன்று காலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த காரில், பேனட்டில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த வர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த னர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்க ப்பட்டது.
அங்கிருந்த மெக்கானிக் கூறுகையில், பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு ள்ளது என்றார். நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மின்கோபுரம் மற்றும் மின்கம்பிகள் செல்லும் விவசாய நிலங்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் இழப்பீடு வழங்காமல் பணிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- ஒட்டன்சத்திரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
விருதுநகர் மாவட்டம் முதல் கோயமுத்தூர் வரையிலான 765 கிலோவாட் உயர்மின் கோபுரம் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் தும்பிச்சிபாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் உயர்மின் கோபுரங்கள் விவசாய நிலங்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட்டு ள்ளது.
மின்கோபுரங்களுக்கு இடையே மின்சார கம்பி பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மின்கோபுரம் மற்றும் மின்கம்பிகள் செல்லும் விவசாய நிலங்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் இழப்பீடு வழங்காமல் பணிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு முழு இழப்பீட்டை யும் வழங்கிய பின்னரே திட்டப்பணிகளை தொடரக் கோரி ஒட்டன்சத்திரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டி ருந்தது.
இதற்காக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனர் ஈசன்முருகசாமி, மாநில பொதுச்செயலாளர்கள் நேதாஜி, முத்துவிஸ்வநாதன், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல், கோவை மாவட்ட செயலாளர் மந்திராச்சலம், திருப்பூர் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட விவசாயிகள் ஒட்டன்சத்திரம் வட்டா ச்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
இதனையடுத்து ஒட்ட ன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி, போலீஸ் டி.எஸ்.பி. முருகேசன் ஆகியோர் விவசாயிகளை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி கள் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து விட்டு போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இதானல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சுவீட்ஸ் கடைகளில் செயற்கை ரசாயனம் பூச்சு கலந்து இனிப்புகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
- அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து 12 கடைகளில் 15 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்:
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் மொத்தமாக ஆர்டர் எடுத்து சுவீட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சில கடைகளில் செயற்கை ரசாயனம் பூச்சு கலந்து இனிப்புகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், லாரன்ஸ் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் நிலையம், திருச்சி சாலை, பழனி சாலை பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அதிக அளவில் செயற்கை ரசாயன பூச்சு கலந்து சுவீட்டுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 12 கடைகளில் 15 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது .தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை எச்சரித்தனர். மேலும் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ரசாயன செயற்கை பூச்சு கலந்து இனிப்புகளை வாங்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- போலியாக ஆவணங்கள், ஆதார் அட்டை, கேரளா முகவரி உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து நிலத்தை மோசடி கணவன்-மனைவி மீது புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் நிலமோசடியில் ஈடுபட்டவரை கைது செய்து அவரது மனைவியை தேடி வருகின்றனர்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதிைய சேர்ந்தவர் சகீம். இவருக்கு சொந்தமான 5.26 ஏக்கர் நிலம் அதேபகுதியில் உள்ளது. இந்நிலையில் வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையை சேர்ந்த முத்துராமலிங்கம்(65) என்பவர் சகீம் என்பவரது பெயரிலேயே போலியாக ஆவணங்கள், ஆதார் அட்ைட, கேரளா முகவரி உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்தார்.
கடந்த மாதம் 15-ந்தேதி நிலத்தை தனது பெயரில் பதிவு செய்து கொண்டார். இதற்கு அவரது மனைவி சாந்தி(56) என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த ஆவணங்களை கொடைக்கானல் சார்பதிவாளர் விஸ்வநாதன் சரிபார்த்தபோது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிலத்தை மறுபடியும் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்தது தெரியவந்தது.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் சார்பதிவாளர் விஸ்வநாதன் புகார் அளித்தார். இதனைதொடர்ந்து போலீசார் கணவன்-மனைவி இருவர் மீதும் வழக்குபதிவு செய்து முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். அவரது மனைவியை தேடி வருகின்றனர்.






