என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டையில் பயணிகள் நிழற்குடையில் கார் புகுந்ததால் பரபரப்பு
    X

    பயணிகள் நிழற்குடையில் புகுந்த காரை படத்தில் காணலாம்.

    நிலக்கோட்டையில் பயணிகள் நிழற்குடையில் கார் புகுந்ததால் பரபரப்பு

    • மதுரையில் இருந்து தாறுமாறாக வந்த கார் திடீரென நிலை தடுமாறி பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்தது.
    • அந்த நேரம் அங்கு யாரும் ஆட்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்தப் பயணிகள் நிழற்குடையில் தான் பெரியகுளம், வத்தலகுண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் ஏறுவதற்காக ஏராளமான பயணிகள் நிற்பது வழக்கம்.

    நேற்று தீபாவளி முடிந்த அடுத்த நாள் என்பதாலும், விடுமுறை தினம் என்பதால் மாலை 4 மணியளவில் சற்று ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. அப்போது மதுரையில் இருந்து தாறுமாறாக வந்த கார் திடீரென நிலை தடுமாறி பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்தது. அந்த நேரம் அங்கு யாரும் ஆட்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×