என் மலர்
திண்டுக்கல்
- விவசாயி தனது வீட்டில் துப்பாக்கி வைத் திருப்பதாக தாண்டிக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சோதனை நடத்தி துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 5 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
பெரும்பாறை:
பண்ணைக்காடு அருகே உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் முத் துமணி (43). விவசாயி. இவர், தனது வீட்டில் துப்பாக்கி வைத் திருப்பதாக தாண்டிக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பே ரில் போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்த னர். அப்போது வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருந்தது.
ஆனால் துப்பாக்கிக்கான உரிமம் அவரிடம் இல்லை. இது தொடர்பாக முத்து மணியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், தனது தந்தை காலத்தில் இருந்து துப்பாக்கி வைத்திருப்பதாகவும், விளை நிலங்களுக்குள் புகும் வனவிலங்குகளை விரட்டுவதற்காக அந்த துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து அந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 தோட்டாக்கள் கைப்பற்ற ப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொடைக்கான லுக்கு வரும் சில சுற்றுலாப் பயணிகள் மட்டு மின்றி அரசு மற்றும் தனியார் பஸ்கள் தங்களது வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை மாட்டி வைத்துள்ளனர்.
- ஹாரன்களை பறிமுதல் செய்து 2 அரசு பஸ்களுக்கு ரூ.20000 அபராதம் விதிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது. இங்கு தமிழக மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தொடர்ந்து கொடை க்கானலில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாக உள்ளது .
மேலும் கொடைக்கான லுக்கு வரும் சில சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் பஸ்கள் தங்களது வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை மாட்டி வைத்துள்ளனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும், வன விலங்குகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது .
இதனை தடுக்கும் விதமாக வட்டார போக்கு வரத்து ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அரசு பஸ்களில் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் மாட்டியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது . இதனை பறிமுதல் செய்து 2 அரசு பஸ்களுக்கு ரூ.20000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் பயன்படுத்தும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
- தாண்டிக்குடி போலீஸ் நிலையம் மெயின் ரோட்டில் காட்டு யானை வலம் வந்தது.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, தடியன் குடிசை, குப்பம்மாள்பட்டி, கேசி.பட்டி, பெரியூர், பார்ச்சலூர், ஆடலூர், பன்றிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் காபி, மிளகு வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். வப்பகுதியை ஒட்டியுள்ள இந்த விவசாய நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் தாண்டிக்குடி முருகன் கோவில் கடுகுதடி பகுதியில், கடந்த 5 நாட்களாக காட்டு யானை ஒன்று உலா வருகிறது. அதன்படி நேற்று அதிகாலை 4:15 மணிக்கு தாண்டிக்குடி போலீஸ் நிலையம் மெயின் ரோட்டில் காட்டு யானை வலம் வந்தது. இந்த காட்சி, போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அதன் பிறகு கல்லார் காப்பு காட்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இதனால் பொது மக்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர். தகவல் அறிந்து வத்தலகுண்டு வனவர் முத்துக்குமரன் தலைமையில் வனத்துறையினர் ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய கல்வி தினமாக கடைபிடிக்க ப்பட்டது.
- மாணவர்களின் திறமை களை ஆசிரியர்கள் கண்டறிந்து அவற்றை மேலும் ஊக்குவிக்க வேண்டும்.
சின்னாளப்பட்டி :
காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய கல்வி தினமாக கடைபிடிக்க ப்பட்டது. இதனை முன்னி ட்டு கல்வியியல் துறை தலைவர் ஜாகிதா பேகம் வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில் இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன் இருந்த கல்வி நிைலயையும், தற்போதைய கல்வி வளர்ச்சியையும் எடுத்துரைத்தார். கல்வி கற்பதால்தான் ஒரு நாடு வளர்ச்சியடைய முடியும் என்றும் தெரிவித்தார்.
பாண்டிச்சேரி பல்கலை க்கழக கல்வியியல் துறை முனைவர் விஜயகுமார் பேசுகையில், எந்த ஒரு மனிதனின் வெற்றிக்கு பின்பும் ஆசிரியரின் பங்கு கண்டிப்பாக இருக்கும். தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே தலைமைத்துவ த்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள முடியும். மாணவர்களின் திறமை களை ஆசிரியர்கள் கண்டறிந்து அவற்றை மேலும் ஊக்குவிக்க வேண்டும்.
எந்த காரணம் கொண்டும் மாணவர்களை மற்றவர்க ளுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது. மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விடா முயற்சி மற்றும் பொறுமை அவசியம். மேலும் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை கண்டு பிடித்து அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன், பல்கலைக்கழக பேராசிரியர் வேலுமணி, உதவி பேராசிரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் தேவகி நன்றி கூறினார்.
- பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிகாரிகள் அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.
- தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் அவரது வீட்டின் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது52). மின்வாரிய அதிகாரி.
இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் திண்டுக்கல்லை அடுத்த பாலமரத்துப்பட்டியில் வசித்து வருகிறார். இவரது 2 மகள்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர். காளிமுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்தனர். இவர் பொன்னகரத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து பதவி உயர்வு பெற்று கோவில்பட்டிக்கு செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிகாரிகள் அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் உள்ள ஆவணங்கள் மற்றும் பணம், நகை இருப்பு ஆகியவற்றை சோதனை மேற்கொண்டனர்.
காளிமுத்து மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை சோதனை நடத்தி இவை எப்போது வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் அவரது வீட்டின் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.
- திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
- அணைப்பட்டி வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ஓடை, வயல்வெளி, கண்மாய்களில் தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மழை அதிக அளவு பெய்த காரணத்தால் வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கண்ணாபட்டி பகுதியில் இருந்து வெங்கட்டாம் பட்டி பிரிவு வரை ஒரு கிளை வாய்க்கால் வெட்டி மழைக்காலங்களில் பெய்யும் மழை உபரி நீரை நிலக்கோட்டை சுற்றியுள்ள கண்மாய்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் செயல்பட அனுமதி கேட்டு வியா பாரிகள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
- அதன்படி 68 இடங்களில் தற்காலிக பட்டாசு க்கடைகள் அமைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் செயல்பட அனுமதி கேட்டு வியா பாரிகள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இதனை தீயணைப்புத்துறை ஆய்வு செய்து அனுமதி சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆன்லைனில் ஏராளமானோர் விண்ண ப்பம் செய்திருந்தனர். இதனை ஆய்வு செய்ய தீயணைப்புத் துறையின ருக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உத்தர விட்டனர். அதன்படி தீயணைப்புத் துறையினர் சம்மந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.
போதுமான இடவசதி, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து பார்வையிட்ட அவர்கள் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்த னர். அதன்படி 68 இடங்க ளில் தற்காலிக பட்டாசு க்கடைகள் அமைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
- புறம்போக்கு நிலங்களில் மட்டும் நடந்துவந்த இந்த பணி திடீரென மலைப்பகுதி மற்றும் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
- பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சோலார் பேனல்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புறம்போக்கு நிலங்களில் மட்டும் நடந்துவந்த இந்த பணி திடீரென மலைப்பகுதி மற்றும் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மின்சாரம் தாக்கி பொதுமக்கள், கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அனுமதி யின்றி வைக்கப்பட்ட சோலார் பேனல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளித்த தால் அவை அகற்ற ப்பட்டன.
இந்த நிலையில் தற்போது மீண்டும் நீர்வழி த்தடங்களில் மீண்டும் சோலார் பேனல்கள் அமைக்க ப்பட்டு வருகின்றது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இந்த பணிகள் மேற்கொள்ள முறையான அனுமதி பெறப்பட்டு ள்ளதா என தெரிய வில்லை. எனவே பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
- பழனி பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
- தினந்தோறும் 20 கனஅடி வீதம் 224.64 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
பழனி:
திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் இன்று காலைவரை விட்டு விட்டு மழை பெய்ததால் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பழனி நகரில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வந்தது. ஏற்கனவே 64 அடி உயரமுள்ள வரதமாநதி அணை முழுக்கொள்ள ளவை எட்டி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையில் தற்போது 69 அடி தண்ணீர் உள்ளது. மேலும் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது.
இந்நிலையில் பழனி பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்றுமுதல் மார்ச் 17ம் தேதிவரை தினந்தோறும் 20 கனஅடி வீதம் 224.64 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தாடாகுளம் முதல்போக பாசன பரப்பான 844 ஏக்கருக்கு திறந்துவிடப்ப ட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை நிரவரப்படி 65 அடி உயரமுள்ள பாலாறு பொருந்தலாறு அணையில் 52 அடி தண்ணீர் உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்மழை பெய்து வருவதாலும், மேலும் சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்ட த்தில் நேற்று ஒரே நாளில் 192 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. திண்டு க்கல் 32, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 42.5, நிலக்கோட்டை 27, பிரையண்ட் பூங்கா 53, நத்தம் 36.5 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- வேடசந்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார்
- ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கைரேகை பதிவுகளில் சில நேரங்களில் சிரமங்கள் ஏற்படுவதால் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது,
திண்டுக்கல் மாவட்ட த்தில் 10 வட்டங்களிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்கள் உள்ளன. குஜிலியம்பாறை மற்றும் திண்டுக்கல் மேற்கு வட்டங்களில் மட்டும் குடோன்கள் இல்லாமல் இருந்தது. அங்கும் குடோ ன்கள் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 300 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களை சீரமைக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி குடோன்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேடசந்தூர் குடோனில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 36,000 ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தரமானதாக வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து ரேசன் கடைகள் மூலம் தரமான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெல் அரவை செய்வதற்காக 700 அரவை ஆலைகள் தேர்வு செய்யப்பட்டு கருப்பு, பழுப்பு நிற அரிசி இல்லாத வகையில் கலர்சாப்டர் பொருத்தப்பட்ட எந்திரங்கள் மூலம் தரமான அரிசி உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது கைரேகை பதிவுகளில் சில நேரங்களில் சிரமங்கள் ஏற்படுவதால் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத பணிகள் முடிக்கவும், இன்னும் 9 மாதங்களில் பணிகள் முழுமையாக முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
- தீபாவளி சீசன் என்பதால் கடையில் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்கள் கவரிங் நகைகளை திருடி மறைத்து வைத்தனர்.
- கையும் களவுமாக பிடித்த உரிமையாளர் நிலக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் 3 பெண்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்தவர் கணேஷ்பாண்டி (34). இவர் போலீஸ் நிலையம் அருகே கோல்டு, கவரிங் நகைக்கடை வைத்துள்ளார். தற்போது தீபாவளி சீசன் என்பதால் கடையில் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்கள் கவரிங் நகைகளை திருடி மறைத்து வைத்தனர். அவர்களை கையும் களவுமாக பிடித்த கணேஷ்பாண்டி நிலக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் விசா ரணையில் அந்த பெண்கள் மதுரை மாவட்டம் விக்கிர மங்கலம் வடகாட்டுப்ப ட்டியை சேர்ந்த போயாண்டி மனைவி ராக்கம்மாள் (60), விக்கிரமங்கலத்தை சேர்ந்த ஜெகன் மனைவி விஜயா (58), உசிலம்பட்டி கீழபுதூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி நதியா (38) என தெரியவந்தது.
3 பெண்களையும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் கைது செய்து விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் மீது மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்துவருகிறது.
- தடியன்குடிசையில் இருந்து குப்பம்மாள்பட்டி செல்லும் சாலையில் 3-வது வளைவில் பாறைகள் உருண்டு விழுந்தன.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, தடியன்குடிசை, குபப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்துவருகிறது. அதோடு காற்றும் சுழன்று அடித்தது.
இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுகிறது. மேலும் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
தடியன்குடிசையில் இருந்து குப்பம்மாள்பட்டி செல்லும் சாலையில் 3-வது வளைவில் பாறைகள் உருண்டு சாலையில் கிடக்கின்றன. இதனால் பஸ், லாரி, கார், ஜீப், போன்ற வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகின்றன.
எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்தி, அந்தரத்தில் தொங்கும் மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






