search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா
    X

    பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா

    • திருவாவினன்குடி கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும் பழனியில் பல முக்கிய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்று திருக்கார்த்திகை திருவிழா ஆகும். 7 நாட்கள் நடைபெறும் இந்த விழா வருகிற 20-ந் தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. அன்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின்னர் காப்பு கட்டப்படும். மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, மாலை 7 மணிக்கு தீபாராதனை மற்றும் தங்கரத புறப்பாடு ஆகியவை நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து 6 நாட்களும் இந்த பூஜை நடைபெறுகிறது. 25-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றுதல், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின் போது நடைபெறுகிறது. 26-ந்தேதி திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். 4.30 மணிக்கு விளாபூஜை அதனைத் தொடர்ந்து சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து யாகசாலை தீபாராதனையும், மலைக்கோவிலில் 4 மூலைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 6.15 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறுகிறது.

    இதனைத் தொடர்ந்து திருவாவினன்குடி கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×