என் மலர்
உள்ளூர் செய்திகள்

செல்போன் கோபுரம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு
- தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- அப்போது அதிகாரிகள் கூறுகையில், புல்லாவெளி, வெள் ளரிக்கரை, குப்பம்மாள்பட்டி, கவிக்காடு, கரடிபாறை, பூதமலை, ஆகிய பகுதிகளில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் தொலை தொடர்பு வசதி கிடையாது. இதனால் தொலை தொடர்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பெரியூர், நடுப்பட்டி கொடலங்காடு,வட கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு கோவை ஊரக வளர்ச்சி தொலை தொடர்பு இயக்குனர் சத்தியபிரிய தர்ஷனி,வேலுச்சாமி எம்.பி. ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், புல்லாவெளி, வெள் ளரிக்கரை, குப்பம்மாள்பட்டி, கவிக்காடு, கரடிபாறை, பூதமலை, ஆகிய பகுதிகளில் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றனர்.
பின்னர் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானை, காட்டெருமை புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. அதைதடுக்க தொங்கு சோலார் வேலி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.பி. தெரிவித்தார். இந்த ஆய்வில் கொடைக்கானல் தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன். கீழ்மலை தி.மு.க. ஒன்றிய செயலாளர் கருமலைபாண்டியன், மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன், காமனூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிரஞ்சிதம் சதாசிவம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






